Thursday, June 21, 2018


தென்றலாய் என் நெஞ்சமதை 
தீண்டி விட்டு
இதயத்தில் மஞ்சமிட்டு 
கொஞ்சி விளையாடிய நீயா
புயலாய் மாறி தாக்குகிறாய்..!!!


நிழலாய் என் பயணங்களில்
உறவாடிவிட்ட உன் கண்களால்
தீயாய் மாறி கனவுகளை 
சுடுகின்றாய்..!!!


ஈரமாய் காதல் பேசிய நீயா
என்னை பாரமாய் எண்ணுகின்றாய்..???


தாரமாய் தானடி உனை 
நினைத்திருந்தேன்
இப்படி என்னைவிட்டு
தூரமாய் சென்றுவிட்டாயே..???
இது ஏனென்று நானறியேன்
சகியே..!!!

பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...