Wednesday, June 20, 2018

உயிரோடு இருந்தால்
உனக்கென இருப்பேன்- ஒருவேளை
உயிர் இன்றிப் போனால்
உன் உள்ளத்தில் இருப்பேன்..!!!

உடலாகிப்போனால் 
நிழலாகியிருப்பேன்
நினைவாகி போனால் 
நிஜமாகியிருப்பேன்...!!

உலகமே நான் என நினைக்கும்
உன் மனதில்- இன்று நான்
சோகத்தை வைப்பதா..?
சொர்க்கத்தை வைப்பதா..?

சுகம் கூட அறியாது 
எனை தாண்டி நீபோக
ஏன் சென்றாய் 
என்பதறியாது- நான் 
இன்று நரகத்தில் 
நீ என் அருகில் இல்லாது...!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...