Thursday, June 21, 2018

இதழ்கள் கூடி 
மென்மை வார்த்து 
வர்ணங்கள் கோர்த்து 
தேனாய் காதலை சேர்த்து 
காத்திருக்கிறது 
மலரொன்று 
உன் கூந்தல் சேர்ந்து 
காதலில் மோட்சம் காண..!!! 

கனவில் கூடி
கவிதையில் பாடி
மௌனங்களில் மடிந்து
உயிராய் என்னுள் 
காதலை ஒழித்து 
காத்திருக்கின்றேன் நான்
உன் மடியில் விழுந்து
காதலில் மோட்சம் காண..!!!

நான் 
பறித்துக்கொண்டு வந்தேன்
உனக்காக..!!!

அதை நீ சூடிக்கொள் 
எனக்காக
இல்லாவிட்டாலும் 
அந்த மலருக்காகவேனும்

பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...