இதழ்கள் கூடி
மென்மை வார்த்து
வர்ணங்கள் கோர்த்து
தேனாய் காதலை சேர்த்து
காத்திருக்கிறது
உன் கூந்தல் சேர்ந்து
காதலில் மோட்சம் காண..!!!
கனவில் கூடி
கவிதையில் பாடி
மௌனங்களில் மடிந்து
உயிராய் என்னுள்
காதலை ஒழித்து
காத்திருக்கின்றேன் நான்
உன் மடியில் விழுந்து
காதலில் மோட்சம் காண..!!!
நான்
பறித்துக்கொண்டு வந்தேன்
உனக்காக..!!!
அதை நீ சூடிக்கொள்
எனக்காக
இல்லாவிட்டாலும்
அந்த மலருக்காகவேனும்
பிசாசு
No comments:
Post a Comment