காதலித்தால் கவிதை வரும்மென்பது
பொய்யாகி போனதோ தெரியவில்லை
நான் காதலிக்க ஆடையுடுத்திய
கவிதையாய் நீ..!!!
எனக்கு உன்னை அதிகமாய் பிடிக்குமடி
அழகே- என்னை உனக்கும்
பிடிக்குமென்பதால் அளவில்லாது
என்னையும் பிடித்துபபபோகின்றதடி உயிரே..!!!
பிரம்மனின் அற்புதபடைப்பு நீ
தமிழ்தாயின் ஓர்
குறுந்தொகையும் நீ..!!!
கவிதைகளின் மொத்த தொகுப்பும் நீ
நான் கொண்ட காதலின்
வகுப்பும் நீயே தான்..!!!
நீ பேசியதெல்லாம் எழுதி தீர்க்க
ஏடுகள் போதவில்லை-உன்
இடைமொழியில்
என் கற்பனைக்கு அங்கு பஞ்மில்லை..!!!
எங்கெல்லாம் உனை தேடினேன் என்று
நான் சொல்ல -உன்னுள்ளே தானே
இருக்கின்றேன் என்பாய்..!!
நீயின்றி நானில்லை என்று கவிதை மொழிந்தால்
நீயேதான் நான் என்று நீ காதல் மொழிவாய்..!!!
“எதை கண்டு நீ எனை காதலித்தாய்”
என்ற உன் கேள்விக்கு- ஆயிரம் கவிதையில்
நான் சொல்லிட முடியாதடி
ஒற்றை வரிகொண்டு சொல்வதென்றால்
“உன்னைக் கண்டால் காதலுக்கே காதல் வரும்”
துளிர்விடும் கவிஞன் எனக்கு வராதா..????
-பிசாசு-
No comments:
Post a Comment