Thursday, June 21, 2018

சொல்ல நினைத்தேன்
சொல்ல நினைத்ததை
நெஞ்சுக்குள் புதைத்தேன் ...!

மெல்லத் தொலைந்தேன்
மெல்லத் தொலைந்ததை ,
உன்னிடம் கண்டேன் ..!

காணவில்லை காணவில்லை ,
என்னை மறைத்துக்ககொண்டவளும்
நீயா....!!!

தேடுகின்றேன் தேடுகின்றேன்
என்னை என்னுள்ளே ஒளித்தவளும்
நீயா ..!!

இன்றெல்லாம்
என் காதல் இதயத்தை
கைகளால் எடுத்து
கவிதைகள் வரைந்து தருகின்றாய்..!!!

என் ஜீவன் முழுவதும்
உன்
- நினைவுகளை தந்து- என்
உறக்கத்தைப் பறித்துச்
செல்கின்றாய் ...!!!

அலைந்து திரிகின்றேன்
நான்...

என் காதலோடு
ஒடுங்கி தொலைகிறாய் நீ...
பின் மடிந்து விழுகின்றேன் நான்...!!!
தாங்கிபிடிப்பாயா சொல் அன்பே...!!!
இப்படி நான்
பிசாசு



பட்டதெல்லாம் போதும் என
பராமல் சென்றாய்
என்னை விட்டு..!!!
இன்று- உன் ஸ்பரிசம் தொட்ட
தென்றல் பட்டு
"பட்டு போன என் காதல்"
மெல்லமாய்
மொட்டு விட துடிக்குதடி..!!!


கெட்டுப்போன மனம் என்று
என்னை தட்டிவிட்டுச் செல்லாதே...
இது வெட்டுபட்டு கிடப்பதும்
கெட்டுபோய் கிடப்பதும் -உன்
காதலுக்குதான்
என்பதை மட்டும் மறக்காதே..!!!!
-பிசாசு-
இதழ்கள் கூடி 
மென்மை வார்த்து 
வர்ணங்கள் கோர்த்து 
தேனாய் காதலை சேர்த்து 
காத்திருக்கிறது 
மலரொன்று 
உன் கூந்தல் சேர்ந்து 
காதலில் மோட்சம் காண..!!! 

கனவில் கூடி
கவிதையில் பாடி
மௌனங்களில் மடிந்து
உயிராய் என்னுள் 
காதலை ஒழித்து 
காத்திருக்கின்றேன் நான்
உன் மடியில் விழுந்து
காதலில் மோட்சம் காண..!!!

நான் 
பறித்துக்கொண்டு வந்தேன்
உனக்காக..!!!

அதை நீ சூடிக்கொள் 
எனக்காக
இல்லாவிட்டாலும் 
அந்த மலருக்காகவேனும்

பிசாசு
ஒரு செடியில் இரு மலர்கள் 
வாசம் எப்படி வேறானதோ
பாசம் ஏன் வேசம் போட்டதோ???


ஒரே தாய் வயிற்றில்தான் 
வாடகைக்கொண்டோம் அங்கு 
அறைகள் ஏதும் வேறானதோ??
அன்பு இல்லா பிண்டமாய் பிறந்ததோ..??


ஒரே மார்பில் பால்சுவைத்து 
அதே குரலில் தாலாட்டுக்கேட்டு
அன்பு மடியில் 
தவழ்ந்துகிடந்தவர்கள் தான் -நாம் 
பின் எப்படி எனக்கு மட்டும் 
இப்படி தனிமை வந்து குந்திக்கொண்டது..??


காம்பினில் பூத்த மலரென்றுதான் 
விரல் தொடுத்துப் பறிக்க நினைத்தேன்
மலர்கள் எல்லாம் முற்களாய் 
முகம் மாறியதை 
எப்படியம்மா மறந்து போனேன்..???


உறவுகள் தொடர்கதை 
சொல்ல நான் கேட்டேன்
உண்மைதான் எனக்கு மட்டுமேனோ 
கதையேதுமின்றி தொடர்கின்றது 
உறவுகள் எல்லாம் 
உணர்வுகளற்ற கற்களாய்..!!!


பாசம் என்று நான் 
எண்ணியதெல்லாம் 
வேஷம் போடும்
நாடகமாய் போனது
கதைகள் முடிந்து பாத்திரங்கள் 
கலைந்ததும்
வெறும் மேடையாய் 
நானானேன்..!!!


உறவுகள் இருந்தும் 
அநாதையாக 
தனிமையில் தவிக்கின்றேன்..!!!


தாங்கிடுவார் யாரோ?? 
பின் அவரும் தனிமையில் 
தள்ளிடுவாரோ..???
-பிசாசு-
இதயத்தில் கருவறைக்கொண்டு
தசாப்தங்கள் பல கரு சுமந்து
பிரசவம் இல்லாமாலே 
என்னை பெற்டெடுத்த
இதய தெய்வம் என் அப்பா..!!

ஆசைககள் மறந்து
ஆடம்பரங்கள் கடந்து
தன் அத்தியாவசியங்களிலும் 
அரை வயிறு நிரப்பி
துறவியாக வாழ்ந்தே 
இல்லறத்தை நல்லறமாக்கிய
ஞானி என் அப்பா..!!

வறுமைகள் வாட்டியபோதும் 
அதன் நிழல் கூட
பிள்ளை மீது வீழ்ந்திடாது 
காத்தவர் என் அப்பா..!!
தனக்கென்று ஓர் ஆடை வாங்கும் போது 
விலைபார்த்து எனக்கென்று மட்டும் 
தரத்தை பார்த்து 
சிரித்து மகிழ்ந்தவர் என் அப்பா..!!!

அன்று தேயிலைக்கடியிலும்
அட்டைகடியிலும் 
வியர்வை துளியிலும் 
நீ எழுதிய என் தலையெழுத்துதான் 
இன்றென்னை குளிர்சாதன 
அறையிலும்
குளு குளு ஏசியிலும் தூசுபடாது 
வாழ வைக்கின்றது…!!!

ஆசைககள் மறந்து
ஆடம்பரங்கள் கடந்து
தன் அத்தியாவசியங்களிலும் 
அரை வயிறு நிரப்பி
துறவியாக வாழ்ந்தே 
இல்லறத்தை நல்லறமாக்கிய
ஞானி என் அப்பா..!!!

பிசாசு
என் வீட்டு ஜன்னல் பக்கமாய் 
நீ வந்து போகும் நேரமெல்லாம்
மண்விட்டு விண் தொட்டு பறந்து 
வருகின்றது என் மனம்
உன் இடம் நோக்கி…!!!

பால் போலவே வான் மீதிலே 
நீ உலா போகவே
என் காதலும் கனா காண்கிறது 
உன்னோடு வாழ்ந்துவிடவே 
அது இந்த பூமியில் தவம் கிடக்கின்றது..!!!

ஏய் நிலவு பெண்ணே..!!!
காதல் மோகம் உன் மீது 
கூடிபோயிருக்க
மேகத்தில் நீ மறையும் 
நொடிகலெல்லாம்
நான் தாகத்தில் 
தவிக்கின்றேனடி 
உன்னை சேர்ந்திட தான் 
தேகம் தேய்ந்து யாகம் 
செய்கின்றேனடி 

யாகம் தீரும் நேரம் 
என் தேகம் உன்னை சேருமோ..???

தேகம் சேராவிட்டால் 
மண்ணோடு மண்ணாகி 
உன்னில் வந்து கலந்திடுமோ..???

பிசாசு

தென்றலாய் என் நெஞ்சமதை 
தீண்டி விட்டு
இதயத்தில் மஞ்சமிட்டு 
கொஞ்சி விளையாடிய நீயா
புயலாய் மாறி தாக்குகிறாய்..!!!


நிழலாய் என் பயணங்களில்
உறவாடிவிட்ட உன் கண்களால்
தீயாய் மாறி கனவுகளை 
சுடுகின்றாய்..!!!


ஈரமாய் காதல் பேசிய நீயா
என்னை பாரமாய் எண்ணுகின்றாய்..???


தாரமாய் தானடி உனை 
நினைத்திருந்தேன்
இப்படி என்னைவிட்டு
தூரமாய் சென்றுவிட்டாயே..???
இது ஏனென்று நானறியேன்
சகியே..!!!

பிசாசு
முத்தம் என்பது இரு
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்
இது வரையில் நான்..!!

அது ஆளுயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகின்றது..!!!

உயிரின் ஈரம் காய்வதற்குள்
மீண்டுமொறு 
முத்தம் தருவாயா..???

-பிசாசு-

Wednesday, June 20, 2018

காதலித்தால் கவிதை வரும்மென்பது
பொய்யாகி போனதோ தெரியவில்லை
நான் காதலிக்க ஆடையுடுத்திய
கவிதையாய் நீ..!!!

எனக்கு உன்னை அதிகமாய் பிடிக்குமடி 
அழகே- என்னை உனக்கும் 
பிடிக்குமென்பதால் அளவில்லாது 
என்னையும் பிடித்துபபபோகின்றதடி உயிரே..!!!

பிரம்மனின் அற்புதபடைப்பு நீ
தமிழ்தாயின் ஓர் 
குறுந்தொகையும் நீ..!!!
கவிதைகளின் மொத்த தொகுப்பும் நீ
நான் கொண்ட காதலின் 
வகுப்பும் நீயே தான்..!!!

நீ பேசியதெல்லாம் எழுதி தீர்க்க 
ஏடுகள் போதவில்லை-உன் 
இடைமொழியில் 
என் கற்பனைக்கு அங்கு பஞ்மில்லை..!!!

எங்கெல்லாம் உனை தேடினேன் என்று
நான் சொல்ல -உன்னுள்ளே தானே 
இருக்கின்றேன் என்பாய்..!!

நீயின்றி நானில்லை என்று கவிதை மொழிந்தால்
நீயேதான் நான் என்று நீ காதல் மொழிவாய்..!!!

“எதை கண்டு நீ எனை காதலித்தாய்”
என்ற உன் கேள்விக்கு- ஆயிரம் கவிதையில் 
நான் சொல்லிட முடியாதடி
ஒற்றை வரிகொண்டு சொல்வதென்றால்
“உன்னைக் கண்டால் காதலுக்கே காதல் வரும்”
துளிர்விடும் கவிஞன் எனக்கு வராதா..????

-பிசாசு-

கவிதை எழுதத் துடிக்கிறேன்
காதலை பற்றி…!!!
கதைச்சொல்ல விரும்புகின்றேன் 
நான் காணும் சமூகத்தை பற்றி..!!!

முட்டிமோதி முன்னேறுகிறேன்
முயற்சியை விட்டுவிடாது..!!!
கட்டிப்போட்டாலும் 
களைத்துபோகவில்லை
கவிதைகளை காதலிப்பதைவிட்டு..!!!

கண்ணில் பட்டதை நெஞ்சை சுட்டதை
இதயம் கொண்டதை எழுதிட விளைகின்றேன்..!!!
உயிரில் விழுந்ததை மட்டும் உள்ளே வைத்து
வளர்க்கின்றேன்…!!!

எனக்காய் நான் வாழ்கின்றேன்
என் எழுத்துக்களில் 
ஒழிந்துக்கிடக்கின்றேன்..!!!

கம்பீரமாய் ஒன்று சொல்கின்றேன்
காலத்தைப் போல் ஒரு
கவிஞன் இல்லையென்று

-பிசாசு-
சொல்ல மறுக்கும்
உன்சின்ன மெளனத்திற்கு நடுவில்
என் மொத்த மொழிகளையும்
வாரிக்கொண்டாய்..!!!

ஊடல் நீ கொண்டாய் என்று
ஒதுக்கிடவும் முடியவில்லை
கோபம்தான் கொண்டாய் எப்படியென்று
கோபிக்கவும் இயலவில்லை
இரண்டுக்கும் நடுவில் எனை
இம்சை செய்கிறாய்
பிடிவாதக்காரியாய்….!!!

உன்னுள்ளே இருக்கும் ஓரனப்பில்
நீ பார்க்கும் பார்வையில்தான்
என்னிதயம் லேசாகுமென்றால்
உன் மௌனத்தை இப்படியே
வைத்துக்கொள்- நான் தினம் தினம்
வார்த்தைகளை தேடியே திறிகின்றேன்..!!!

மெளனம் கலைத்து பேச நீ விரும்பினால்
இறுதியாய் ஓர் வழி செய்
அஞ்சலில்
“காதல் அஞ்சலியாய்”
இல்லையேல்
கண்ணீர் அஞ்சலியாய்..!!!
-பிசாசு-

மெதுவாய் எனை நீ 
உரசிப் போனாய்
உயிர் வரை பற்றியது தீ

நூலிடைவெளியில்
எனை நீ கடந்து போனாய்
குடை சாய்ந்தது
மனது..!!!

தூரமாய் சென்று நீ
ஓரமாய் தாக்கிய பார்வையில்
நொருக்கியே போனது
இதயம்..!!!

தரையோடு நிலவாய் நீ 
வந்து போக தவம்கொண்டு 
கிடக்கிறது
"காதல்" 

-பிசாசு-
உயிரோடு இருந்தால்
உனக்கென இருப்பேன்- ஒருவேளை
உயிர் இன்றிப் போனால்
உன் உள்ளத்தில் இருப்பேன்..!!!

உடலாகிப்போனால் 
நிழலாகியிருப்பேன்
நினைவாகி போனால் 
நிஜமாகியிருப்பேன்...!!

உலகமே நான் என நினைக்கும்
உன் மனதில்- இன்று நான்
சோகத்தை வைப்பதா..?
சொர்க்கத்தை வைப்பதா..?

சுகம் கூட அறியாது 
எனை தாண்டி நீபோக
ஏன் சென்றாய் 
என்பதறியாது- நான் 
இன்று நரகத்தில் 
நீ என் அருகில் இல்லாது...!!!
-பிசாசு-
நான் கண்ட சோகங்களை
எல்லாம் நீ கொண்ட காதலில்
சுமந்தவளே என்னவளே..!!!

எத்தனை ரணங்கள் 

எத்தனை ஏமாற்றங்கள்
அத்தனையும் மறந்து நான்
புன்னகைத்திருப்பது
உன்னாலே..!!!

பாரமாய் நான் இருக்க
உன் விழியோரமாய் எனை சுமந்து
கண்ணீரை துடைத்தவளே..!!!

சிலையான என்னை
சிரிக்க வைத்தவளே
என் உத்தமியே..!!!

உடல் கொண்ட காதல் எல்லாம்
மண்ணாகி போயிருக்க
மனம் தந்த உன் காதல் மணக்குதடி
என் வாழ்வில்..!!!

சின்ன சின்ன சண்டைகள்
சிங்கார சில்மிசங்கள்
மிச்சமே வைக்க முடியாத
உன் அழகை பருகி
அன்பில் உருகி எழுதி திளைக்கின்றேன்
இங்கு ஒரு கிறுக்கள்..!!!

காதலியாய் வந்து
என் ஓர் அன்னையாகி
மரணத்தை கொன்று நீ
ஜனனத்தை கொடுத்த
என் தாயுமானவளே..!!

மறு பிறப்பிலும் நான்
வேதனையில் பிறந்திட
நீயே வந்துவிடு காதலாய்
காயங்கள் ஆற்றி ஆறுதலாய்..!!!
-பிசாசு
உன் பார்வையில் 
மயங்குகிறேன்

தீண்டலில் உருகுகிறேன்

உனை அணைத்து 
நான் கசங்குகிறேன்
முழுதும் உன்னிலே தொலைந்து
போகிறேன்

சகியே..

விடை கொடுக்க வேண்டாம்
நாம் சேர்ந்து இருக்கும் 
நிமிடங்களுக்கு...
தடை விதிக்கவும் வேண்டாம்
நம் நெருக்கங்களுக்கு

நாட்கள் அப்படியே 
உறைந்து போகட்டும்
உன் மடியில் என் ஜீவன்
உருகி ஓடட்டும்...!!!
#பிசாசு

ஒளி தந்த பொக்கிஷம்

குடும்பங்கள் 
மஞ்சள் முகம் பார்த்து
மனம் விட்டு தினம் பேச
ஒளி தந்த பொக்கிஷம்..!!

அவசரத்திற்கு 
தாள் கொண்டு தீப்பற்ற
தன்னை தியாகித்த
பொக்கிஷம்...!!

வைரமும் வைடூரியமும்
முத்தும் பவளமும் 
பொக்கிஷம் என்றால்
அன்று பல மேதைகளை உருவாக்கி
புத்தகங்களுக்கு உயிர்கொடுத்த
இது அல்லவோ ஒளி கொண்ட 
பொக்கிஷம்...!!!

இன்று

தேவையில்லை என்று யாரும்
தூரம் எறியவில்லை
தூசு தட்டி எடுக்க 
நேரம் வருமென்று 
ஓரமாய் வைக்கப்பட்டிருக்கின்றது
மின் தடைகளின் போது

-பிசாசு-😈😈😈

மனிதம் எங்கே போகின்றது

மரணத்திலும்
மங்கை அவளின் 
மனம் மறந்து போனது
மானிடம்

ஆடை விழக்கி
அதில் சுகம் தேடும்
ஆண் வர்கம் 

வெட்கப்பட வேண்டியது
ஆணாய் பிறந்ததற்கு


வரலாற்றில்
சேலை கொடுத்த கேசவன்
இன்று எங்கே சென்றான்..??
அவனும் செல்பி 

எடுத்துக்கொண்டிருந்தானோ
ராதையின் கூடாரத்தில்..???


சுற்றியிருந்தவர் நூறு
ஒரு துளியளவு கூடவா
துனிவுமில்லாது போனது
துணியும் இல்லாது போனது
இவள் தேகத்தை மறைக்க..???

கலியுகம்தானிது
கமராக்கலில் இருந்து
காம ராஜாக்கள்
பிறந்திருப்பதால்..!!!

பிசாசு😈😈😈😈
கனவுகளில் மட்டுமே
காதல் கைகூடும் எனில்
வாழ்க்கை முழுவதும்
இரவுகளை மட்டுமே
வேண்டுகின்றேன்

இரவுகளும் கூட 
கனவுகளை 
களவாடுமென்றால்
உயிரையே 
காணிக்கையாக்குகிறேன்
நம் காதலுக்காய்...!!!!

#பிசாசு😈😈😈😈
பௌர்ணமி இரவில்
கடற்கரை மணலில் -உன்
கால்தடம் தேடித் தேடி என்
கண்களோடு
காதலும் கடலலையாய்
அலைமோதி திரியுதடி
சகியே..!!!


நீ வந்துப்போன
வாசம் மட்டும்
என் சுவாத்தில் கலந்து
உன்னறிமுகம் சொல்ல...

மூடிய கண்கள்
ஒரு நிமிடம்
உனை நினைக்க...

நுரையீரல் வரை
உன் வாசத்தை
ஆழ்ந்து சுவாசிக்கின்றதடி
காதலும்
இதயத்தின் மோதலும்..

ஒரு ஓரமாய்
உன் பாதச்சுவடு
தடம் பதித்துப்போக...

சந்தோஷத்தில்
மண்லெல்லாம் அள்ளி அள்ளி
நெஞ்சோடு பூசிக்கொண்டு
பித்தனாகி தேடுதடி
உன் முகம்தனை
என் காதலும்
உள்ளங்கை உஷ்ணமும்...


ஒளிந்து விளையாடியது போதுமடி
ஓரங்க நாடகம் அரங்கேற்றி
எனை ஒதிக்கி வைத்ததும் போதுடி

என் உறவே
வாழ்வின் முழு நிலவே..
காதலின் பௌர்ணமி நிலவே..

பால் முகம் காட்டிவிடு
என் காதலுக்கு
தாகம் தீர்த்துவிடு..!!!

பிசாசு😈😈😈
கடல் நுரையில் 
கால் நனைத்து
மணல் வெளியில் ஒரு 
நெடும்பயணம் நாம் கொண்டு
உறவாடலாம வா சகியே.. 


முழு பௌரணமி இரவில் 
உன் மடியில் நானும்
என் மார்பில் நீயும் கண்ணுறங்கி
உரையாடலாம் வா சகியே..

-பிசாசு-

மீன்பாடும் தேன் நாடு உன் நாடு
மலை காற்று வீசும் என்னோடு..
மார்போடு நீ தலைசாய
வலியெல்லாம் காணமால் போகும்

வா சகியே
வலிகளாயிரம் என்னுள்…!!
-பிசாசு-
உறக்கம் தொலைத்த
உன் விழிகளில்
நான் நிம்மதியாய்
உறங்குகின்றேன்…


நிம்மதியாய் இருக்கும்
என் இதயத்தில்
நீ உறக்கம் கெட்டு
கிடக்கின்றாய்…

ஏன் இந்த
அவஸ்த்தையடி சகியே???

மூன்றாம் பிறையிரவில்
நாம் மௌனம் களைத்து
பேசிடலாம்…!!!

-பிசாசு-


உன்ன பற்றிய சிந்தனையில் 
அடிக்கடி நான் சிரிக்கின்றேன் 
பார்பவர்களுக்கு நான் 
பைத்தியகாரனானேன் 
பட்டம் கொடுத்த உனக்கு நன்றி…!!! 

…………………………………………………………… 

சண்டையிடுகின்றாய் 
உன்னை பற்றியெதுவும் நான் 
எழுதுவதில்லையென்று- உயிரை 
எப்படி நான் எழுதிகாட்டுவேன்...?? 

………………………………………………………….. 


விரல் சப்பி எச்சில் சுவைத்துக்கிடக்கும் 
மழலையாக நான் தினம் 
உன் நினைவுளோடு..!!!

-பிசாசு-


வெறுத்துப்போன என்னை 
பிடித்துப்போனது உன்னாலே தான் 
பிடித்துப்போன என்னை 
படித்துப்பார்க்கும் உன்னை- மட்டும் 
விட்டுபோவதாயில்லை நான்…!!!

-பிசாசு-
உன்னில் நான் கொண்ட காதல்
அர்த்தமானது
என்னில் நீ கொண்ட காதல்
ஆழமானது
நம்மில் நாம் கொண்ட காதல்
அற்புதமானது…!!!

-பிசாசு-
உன்னால் தரப்படும் 
சுகத்தையும்
உன்னால் தரப்படும் 
ரணத்தையும்
என்னால் மட்டுமே 
உணரமுடியும்..!!!

-பிசாசு-

Monday, June 11, 2018

உனக்கான பாதையை நீயே முடிவெடு…..

உனக்கான பாதையை 
நீயே முடிவெடு
தண்ணீரிக்கு தெரியும் 
தனக்கான பாதை எது என்று
தேங்கி நீ நின்று ஆவியாகி போகாதே…. 


ஓடு.. விழு.. 
கைகொடுக்க யாரும் தேவையில்லை

நீயாக எழு… நிற்காதே.. 
மனம் தளராதே
வானமா எல்லை இல்லை
முடியும் வரை ஓடு..
முடிவில் 
தோல்வியோ வெற்றியோ 
காத்திருக்கும்

மீண்டும்……..
உனக்கான பாதையை 
நீயே முடிவெடு…..
-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...