தூக்கம் போல் உன்னை சந்திக்க
தொலைந்தவன் நானடி..!!!
-பிசாசு-
நீ எங்கு என்று தேடிய
-------------------------------------------------------
நீ எங்கு என்று தேடிய
என் கண்ணகளுக்கு
எப்படி தெரியும் -என் இதயத்தில்
குடியிருப்பது நீ என்று..???
அதை உணர்த்திடத்தான் நான்
கண்ணீராய் உன்னை கண்களுக்கு
கரையொதுகின்றேன் தினமும்..!!!
-பிசாசு-
--------------------------------------------------------
இமைகள் கொண்ட மலர்கள்தான்
உன் கண்ணகளா..??
பதுங்கி தாக்கும் புலிகள்தான்
உன் பார்வைகளா..??
மூடிக்கிடக்கும் சிப்பிகள்தான்
உன் இமைகளா..??
மொத்தமாய் மின்னிடும் முத்துக்கள்தான்
உன் கருவிழிகளா..???
பருத்தி பந்துகள்தான்
உன் கண்ணங்களா..???
சிதறிக்கிடக்கும் வெள்ளி பனித்துளிகள்தான்
சிறு பருக்களா..???
மொட்டுவிட்ட முதல் பூதான்
உன் இதழ்களா...???
அதில் பட்டுத்தெறிக்கும்
சூரியக் கதிர்கள்தான்
உன் பற்க்களா..???
செவ்வாழை கன்றுகள்தான்
உன் கழுத்தா..???
பொளர்ணமியில் ஜொலிக்கும்
நட்சத்திரம்தான்
உன் தோள்களா..???
தங்கத்தை கடைந்தெடுத்து
வெங்கள அச்சில் அதை ஊற்றி
பால் கொண்டு பதம்கொடுத்து
தேன் இட்டு இனித்திடும் சுவை சேர்ந்ததுதான்
உன் மேனியே. ???
பகல் வானத்து மேகத்தில்
மறைந்தும் மறையாது கிடக்கும்
நிலவுதான் உன் ஆடைக்கொண்டு
மூடாத பாகங்களோ..???
கடைசி வரை என்னுடன் கலந்து வரும்
சுவாசக் காற்றோ நீ..??
கவிதைகளில் ஒளிந்து கிடக்கும்
மென்மையோ நீ..???
எனக்காகவே பிறந்த
பெண்மையோ நீ..???
-பிசாசு-