Wednesday, August 31, 2016

சிந்திக்க தொலைந்த
தூக்கம் போல் உன்னை சந்திக்க
தொலைந்தவன் நானடி..!!!
-பிசாசு-
-------------------------------------------------------


நீ எங்கு என்று தேடிய 
என் கண்ணகளுக்கு
எப்படி தெரியும் -என் இதயத்தில்
குடியிருப்பது நீ என்று..???
அதை உணர்த்திடத்தான் நான்
கண்ணீராய் உன்னை கண்களுக்கு
கரையொதுகின்றேன் தினமும்..!!!
-பிசாசு-
--------------------------------------------------------

இமைகள் கொண்ட மலர்கள்தான் 
உன் கண்ணகளா..??
பதுங்கி தாக்கும் புலிகள்தான்
உன் பார்வைகளா..??

மூடிக்கிடக்கும் சிப்பிகள்தான் 
உன் இமைகளா..??
மொத்தமாய் மின்னிடும் முத்துக்கள்தான்
உன் கருவிழிகளா..???

பருத்தி பந்துகள்தான் 
உன் கண்ணங்களா..???
சிதறிக்கிடக்கும் வெள்ளி பனித்துளிகள்தான்
சிறு பருக்களா..???

மொட்டுவிட்ட முதல் பூதான்
உன் இதழ்களா...???
அதில் பட்டுத்தெறிக்கும் 
சூரியக் கதிர்கள்தான் 
உன் பற்க்களா..???

செவ்வாழை கன்றுகள்தான் 
உன் கழுத்தா..???
பொளர்ணமியில்  ஜொலிக்கும்
நட்சத்திரம்தான் 
உன் தோள்களா..???

தங்கத்தை கடைந்தெடுத்து
வெங்கள அச்சில் அதை ஊற்றி 
பால் கொண்டு பதம்கொடுத்து
தேன் இட்டு இனித்திடும் சுவை சேர்ந்ததுதான்
உன் மேனியே. ???

பகல் வானத்து மேகத்தில் 
மறைந்தும் மறையாது கிடக்கும் 
நிலவுதான்  உன்  ஆடைக்கொண்டு 
மூடாத பாகங்களோ..???

கடைசி வரை என்னுடன் கலந்து வரும் 
சுவாசக் காற்றோ நீ..??
கவிதைகளில் ஒளிந்து கிடக்கும்
மென்மையோ நீ..???
எனக்காகவே பிறந்த 
பெண்மையோ நீ..???
-பிசாசு-





Tuesday, August 30, 2016

“என் முன்னாள் காதலி”

மூச்சுக்கு முன்னூறுதடவை
என் பெயர் உச்சரித்தவள்
இன்று ஒரு பேச்சுக்கு கூட 
என் பெயர்க்கொண்டு
அழைக்க மறுக்கின்றாள்

என்னை மறந்துபோன
என் காதலை மறுத்துவிட்டுப் போன
“என் முன்னாள் காதலி”

நினைக்கும் போதெல்லாம் என்னை
அணைத்துக்கொண்டு
காதல் பாஷை பேசியவள் -இன்றெல்லாம்
ஒரு ஆசைக்கு கூட அணைத்துக்கொள்ள
அச்சப்படுகின்றாள் 
என் பிரியங்களையெல்லாம்
விதவையாக்கி என்னைவிட்டுப்போன
“என் முன்னாள் காதலி”

காதலையும் கனவுகளையும்
பஞ்சமில்லாது தந்து -என் 
நெஞ்சமெல்லாம்
மஞ்சமிட்டு என்னுடன்
கொஞ்சி திரிந்தவள்…!!!

கண்ணீரை தந்து கனவுகளை களைத்து
காதலை கரு அறுத்துவிட்டு போகின்றாள்
என்னை ஒதுக்கிவிட்டுப்போன
“என் முன்னாள் காதலி”


அவள் என்றும் எனக்கு முன்னாள் காதலி
அவளின்றி வேறுயாரும் தங்கிட இடமில்லா
என் இதயமே என்றும் 
அவளை காதலி…!!!
-பிசாசு-

இமைகளை மூடி
இதழ்களை குவித்து
விரல்களை அணைத்து
இதயத்தை விரித்து
சுவாசத்திற்கு புது வாசம்
சேர்த்து- இளம் பறவைகளுக்கு
சிறகு கொடுத்து-
இரத்தத்தின் சாற்றைக்கொண்டு
நரம்புகளை
எல்லாம் அறுத்து -நீ
என்னில்
வரைந்த அற்புத ஓவியம்
உன் "முத்தம்"
நான் காத்திருக்கிறேன்
மீண்டும் ஒரு ஓவியத்திற்காக
-பிசாசு-

ஆகாய வெண்ணிலாவில்
உன் முகம் பார்த்து
நேசித்தேன்..!!!

காரிருள் நேரத்தில்
உன் கூந்தலின் கருமையில்
நான் ஒழிந்துக்கொண்டேன்..!!!

விட்டு விட்டு துடிக்கும்
இமைகளுக்கு இடையில்
என் இதயம்
எட்டி எட்டிப் பார்க்க கண்டேன்..!!!

காதோடு அசைந்தாடி கதை பேசும்
காதணியில் என் கனவுள்
மின்னக் கண்டேன்..!!!

கொஞ்சமாய் நீ சேர்த்த
உதட்டு சாயத்தில்
என் உதிரம் சொட்ட கண்டேன்..!!!
உன் நடைதனில்
என் சுவடுகள் பதியக்கண்டேன்..!!!

தீண்டியும் தீண்டாமலும்
தொக்கி கிடக்கும் கழுத்து மாலையில்
என் நெஞ்சம் படபடக்க உறைந்தேன்..!!!

கால்கொழுசு
மணிகளில் இரண்டடுக்காய்
என் காதலை சேர்த்துவிட்டேன்..!!!
காற்றோடு நிறம் தீட்டும்
விரல்களின் இடுக்குகளில்
அணைப்பட்டு -நான்
முழு ஓவியமானேன்..!!!
-பிசாசு-

நேற்றிருந்தோம் ஒன்றாய்
இன்று நீ எங்கே..??? 
என்னுள் வலிகொடுத்து
வெளியே பறந்து சென்றாய்..???

நினைவோடு உறையாடும் 
உள்ளம் தந்து சென்றாய்
நிழலோடு உறவாடும்
உருவம் செதுக்கி வைத்தாய்

கண்ணீரோடு கவியெழுதும்
கற்பனை புதைத்துவிட்டாய்
கனவோடு கலைந்திடும்
காதல் கடத்திச்சென்றாய்

பிரிவோடு பிரிந்திடும்
பிரியம் கொடுத்து பிரிந்தாய்
இவையெல்லாம் 
தந்துவிட்டு நீ இருளோடு
உருவமாய் மறைந்து போனாய்
நானோ பகலோடு
நிலவாய் இருந்தும் இல்லாமலே 
இறந்துபோனேன்..!!!!
-பிசாசு-
பேசாமல் விட்டிருப்பதால்
உன் நினைவுகளை
தொலைத்திருப்பேன்
என்றிருப்பாய்...!!

இன்னும் அதிகமாய்
நான் சேமிக்கத் தேடுவது -உன்
நினைவுகளை தான் என்று தெரியாமல்
நீ அங்கு பயணிக்கிறாய்
உன் வீட்டை நோக்கி
என் இதய வீட்டை விட்டு
வாடகை கூட தராது..!!
-பிசாசு
உன்னோடு பேச வேண்டும்
என்பதற்காக 
என் இரவு தூக்கத்தை
அன்று
தொலைத்தேன்.!!!

உன்னோடு பேசிய 
நினைவுகளை 
நினைத்துக்ககொண்டு
என் இரவு தூக்கத்தை
இன்று
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்..!!!

தொலைவதும் தொலைப்பதும்
எனக்கொன்றும் பழையதல்ல
பெறுவதும்
பின் தருவதும்
உனக்கொன்றும்
புதியதல்ல..!!
-பிசாசு-

Sunday, August 28, 2016

காத்திருப்பு..!!!

நாளிகைகள் நிமிஷங்களாய் யானபோதும்- உன்
நினைவுகள் என்னுள்ளேதான்
வாழ்கின்றதடி..!!!

நிமிஷங்கள் மனித்தியாலங்களாய் நீண்ட போதும்- நீ
மட்டும்தான் மறந்தே போகவில்லை
என்னுள் இருந்து..!!!

ஒவ்வொரு மணித்துளியும் நாட்களாய்
நகர்ந்தபோதும் -நீ என்னை நிச்சயம் தேடி வருவாய்
என்றிருந்தேன்...!!!!

ஆனால்

அந்த நாட்களும் கிழமைகளாய் பூப்பெய்தியபோதும்
நீ வரவில்லை...
இருந்தும் எங்கோ ஓர் மூளையில்
என்னை நினைத்து வாழ்வாய்
என்றெண்ணினேன்..!!!

மாதங்கள் பல கடந்தும்
வருடங்களாய் உனை தேடி தேடி
தேய்ந்துபோனேன்- நீ
வரமாட்டாயா என்றேங்கிபோனேன்...!!!

வருடங்கள் தசாப்தங்களாய் தடம்பதித்து....!!!
நானோ -தவம் புரிந்த முனிவனாய் தாடியோடும்

நீயோ -இன்னொருவனின் மனைவியாய் வாரிசுகளோடும்..!!!

இந்த நாளிகைகளுக்காகவா
நானும்---- என் காதலும்
தசாப்தங்களாய் உனக்காக காத்திருந்தேன்..!!!!
-பிசாசு-



இலையுதிர் சருகாய் நான் விழ
அங்கே காற்றாறென நீ வந்து
எனை ஏந்தி.!!

இதமாய் -என் இடம் மாற்றி
இறுதியில்
தீயிலேனடி விட்டுச்சென்றாய்???

-பிசாசு-
பக்குவமாய் பார்த்து பார்த்து
பத்தியம் காத்து வளர்க்கின்றேன்
நம் காதலை!!

பாதியிலே நீ கருக்ககளைப்பு 
செய்ய சொல்வது நியாயமா??

நெஞ்சி வலி பொறுத்து 
உயிர்வேர் அறுத்து
பிரசவித்துக்கொள்கின்றேன் 
அந்த காதல் பிண்டத்தை

தயவுசெய்து இதயகொடி பிரித்து 
நம் காதலை சாகடித்துவிடாதே...
-பிசாசு-

Friday, August 26, 2016

சந்திப்போம்..!!

யாசித்து யாசித்தே
ஓய்ந்து விட்டேன் நான்
மீண்டும் நினைவூட்டினால்
என்னையும் நீ
பைத்தியம் என வரிசையில் நிக்க வைத்து 
வார்த்தை ஈட்டியினால்
துண்டாடப்படலாம்


வேண்டாமடி மௌனமாய்
நானும்
மரணித்தே போகிறேன்
மறு பிறவி கொண்டால்
சந்திப்போம்..!!!
-பிசாசு-

காத்திருப்பு..!!!

உன் வருகைக்கான
ஒவ்வொரு துளிக் காத்திருப்பும்
என்னுள் ஒரு சமுத்திரத்தை உருவாக்கி
காதல் அலைக்குள்
உன்னை சுருட்டிக்கொண்டு
என்னை வெளித்தள்ளியது..
கரையொதுங்கி கிடக்கின்றேன்
மீண்டும் ஒரு அலையாய்
நீ கரை வந்து சேர மாட்டாயா என்று..!!!
-பிசாசு-

Friday, August 19, 2016

ஆசை..!!!

புதியதோர் உலகம் படைத்திட ஆசை..!!!!

அங்கு மதங்களற்ற மனிதப்பிறவிகள்
பிறந்திட ஆசை
ஜாதிகள் எல்லாம்
சாட்டையடிக்கப்பட்டு
சம்பிரதாய சடங்குகலெல்லாம்
பூட்டுப்போடப்பட்டு
மனித பண்பாடுகள் மட்டும்
மகத்துவம் பெற்று வளர்ந்திட ஆசை
அனைவரும் அன்பே கடவுளாய்
வணக்கிட ஆசை..!!!


எல்லோரும் கூடி மகிழ்ந்து
கூட்டுக்குடும்பமாய் இணைந்து
அன்பையும் பண்பையும்
தினம் பகிர்ந்திட ஆசை..!!!

இல்லாமை இல்லாதொழிந்திட
இயலாமை என்றொன்று
இல்லாமல் போய்விட
தீண்டாமை கூட தீக்கிறையாகிட
பொதுவுடைமை மட்டும்
புது பண்பாடாய் காத்திட ஆசை..!!!

வறுமைகள் இல்லா தேசமாய்
உழைப்பவர்கள் எல்லாம்
தேச தலைவராய்
புது சரித்திரம் படைத்திட ஆசை
அங்கு
துயிலுரிக்கும் துச்சாதன் எல்லாம்
தூக்கிலடப்பட்டு
நட்பு கற்பு இரண்டையும் காக்கும்
கர்ணனாய் அணைவரும்
கற்புடன் வாழ்ந்திட ஆசை..!!!

யுத்தங்கள் இல்லா தேசமாய்
ஆயுத சத்தங்கள் இல்லா அமைதியாய்
பூக்களின் வாசங்கள் மட்டும்
வளியெங்கும் பரவிட ஆசை..!!!

எல்லைகளில் பிரியாமல்
கண்டங்களாய் சிதையாமல்
ஒரே கடலாய் ஒரே நிலமாய்
எல்லோரும் ஒன்றாய்
வாழ்ந்திட ஆசை..!!!

அரசியல் ஏதும் இல்லா யாப்புக்களாய்
முதலாளி தொழிலாளி என்றில்லா கோப்புக்களாய்
வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கையை
அங்கு எல்லோரும்
தேடிட ஆசை..!!!

விவசாய நிலங்களும்
தாணிய பயிர்களும்
கரவை பசுக்களின் ஊர்வலமுமாய்
தினம் விவசாய திருவிழா கண்டு
நோய்களற்று ஆயுள் நீடி
அனைவரும் ஆரோக்கியமாய்
வாழ்ந்திட ஆசை..!!!

கணணியும் இணையமும்
காலத்தின் தேவையாகி
அது எம் தேசத்தை சிதைத்திடாமல்
நம் கட்டுப்பாட்டுக்குள்
வளர்ந்திட ஆசை..!!!

அங்கும் இங்கும் எங்கும்
ஏன் அந்த புது தேசத்திலும்
என் தேகத்திலும் உயிரிலும் என்றும்
தமிழே புது மொழியாய்
முதன் மொழியாய்
தேன் மொழியாய் இனித்திட ஆசை
அனைவரும் அதையுண்டு திளைத்திட
ஆசை..!!! ஆசை..!! ஆசை..!!
-பிசாசு-

Tuesday, August 16, 2016

என் ஒருதலை காதல் இன்னமும் உயிருடன்..!!!

அவள் புன்னகையே போதுமென்று
தூரமாய் இருந்து ரசித்து
அவள் மெய்யழகை ருசித்து
தன் உயிர்
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் உயிருடன்..
!!!

என் காதலை
அவள் மறுத்து எப்படி வாழ்கின்றாளோ
அதைவிட அதிகமாய்
அவள் நினைவுகளை சேர்த்து சேமித்து
திரிகின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் உணர்வுடன்..!!!


அவள் கூந்தல் கடந்து வந்த
காற்றின் வாசத்தை சுவாசித்தும்
அவள் உடல் பட்டு தெறித்துவிழும்
மழைத்துளியில் தாகம் தீர்த்தும்
அவள் பாதச்சுவடுகளில்
புதுப் பாதையமைத்தும் ஊர்வலம்
போகின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் உற்சாகத்துடன்...!!!


மேகமே இல்லாத வான் போல்
நிர்வாணமாய்
என்னிதயம் அவள் இல்லாது இருந்தாலும்
அவள் நினைவுகளை
உடுத்திக்கொண்டுதான் சிரிக்கின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் அழகுடன்..!!
!

அவள் முத்தங்களையோ
அவள் சினுங்கள்களையோ
அவள் கொஞ்சல்களையோ
கெஞ்சிடாது தன் எல்லை மிஞ்சிடாது
என்னில் மஞ்சமிட்டு கிடக்கின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் கற்புடன்..!!!


என்றோ ஓர் நாள்
அவள் வருவாள் -என் மீதொரு
மலர் வலயமும் வைத்திடுவாள்

அன்று அவளுக்கென
ஓரிரு குழந்தைகளும்
கூட இருக்கலாம் அன்றேனும்
தன் காதலை அவள் சொன்னால்
நிம்மதி பெறும் என் ஒருதலை காதல்
அப்பொழுதும்
ஒருதலை காதலுடன்..!!!
-பிசாவு-


Monday, August 15, 2016

நினைவால்

உன் நினைவாலே 

என்
மேல் இமையும்
கீழ் இமையும்
சேருமிடத்தில்..

உன்
நினைவென்னும்
ஊசியால்
குத்தாதே...

என்
உயிர் குடிக்கும்
உன்
நினைவுகளுக்கு
உறவு கொடுப்பாயா..

நீ
தீண்டுவாய் என..
உன்
கால் மிதிபடும்
சருகாகவும்
காதிருப்பேனடா...

சில
நேரங்களில் 
சிலையாகிப்போகிறேன்..
பல நேரங்களில்
பைத்தியமாகிறேன்..
உன் நினைவாலே..

உன்
நிஜங்களோடு
பேசிக்கொண்டு,
என்
நிழல்களோடு
வாழ்கிறேன்..

உன் நினைவாலே..

"முதல் பரிசம்"

ஓர் ஜென்மம் கொண்டதாய்
போராடி வென்றுவிட்டு
மறு ஜென்மம் பிறந்துவிட்டதாய்
புது உயிர் தளிர்விட்டு

கண்ணீரிலே வடித்தெடுத்த ஆனந்தத்தின்
பிசுபிக்களை புறங்கைகளிலும்
புன்னகை இதழ்களிலும்
பூசிவிட்டு

வாரி எடுத்து தன் கக்கத்தில் வைத்து
கொஞ்சிகின்ற பரிசம்
பெண்மையில் இருந்து தாய்மைக்கான

"முதல் பரிசம்"


இருண்ட ஒரு உலகத்துள்
இதயம் துடித்து
நரம்பு நாண்களும் வேர்போல்
தோள்களில் பரவிக்கிடந்து

சுவாசத்தை கருவறை வாசத்தில்
கடன் வாங்கி
ஐயிரண்டு மாதங்கள் தவம் கிடந்து

சதைபிண்டமாய் வெளியில்
விழுந்தழுது
தாயின் விரல்களை பற்றிக்கொண்டு
துள்ளுகின்ற பூரிப்பு குழந்தையின்

"முதல் பரிசம்"


இரு உயிர் ஒரு உயிராகி
அது ஒரு புது உறவாகி
உடலோடு உறவாட
காத்திருந்த நிமிடங்கள் கண்களிலே
வியர்த்துக்கொட்ட கண்ணீராய்

கக்கத்தில் கிடக்கும்
முத்தை தன் பக்கமாய் எடுத்து
முத்தத்தால் துடைத்து
கொஞ்சும் பெருமிதம்
தந்தையின்

"முதல் பரிசம்"

காத்திருந்து காதல் வழி பார்த்திருந்து
காலை பொழுதின் மலராய் பூத்திருந்து
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
விரல்கள் விரல்களோடு உரசிவிட

இதயங்கள் இரண்டும்
இருபுறமும் இடம் மாறி துடிக்க
கண்கள் படப்படக்க

சட்டென்று கொடுத்த
கண்ணத்தின் முத்ததின்
கண்கள் சிவக்க
காதலியின் இதயத்தில் வீழ்ந்தது
முத்தமாய் காதலில்

"முதல் பரிசம்"

எதில் தொடங்கி எங்கு முடிப்பதென்று
தெரியாது தினறிக்கொண்டு
ஓர் முழுமையை தேடி ஓடி விடும்
பேனைகளின் தீண்டல்களில்
காகித தாள்களில் சிதறி விழுகின்றது
கவிதைகளாக..!!!

"முதல் பரிசம்

                                                                     -பிசாசு-

Saturday, August 13, 2016

சந்தேகம் கேடு..!!!

உன்னதமான
உறவுகளுக்குள்
விரிசல் பெற செய்கிறது..!!

செத்துமடிந்த
உணர்வுகளுக்கு புதுபெயர்
கொடுத்து கெடுத்துவிடுகிறது...!!

அதிக அன்பின்
மறுவடிவம் என பிதற்றிக்கொண்டு
உறவுகளை உருகுலைத்து விடுகிறது..!!

உன்னையும் என்னையும்
மட்டுமல்ல
அவளையும் அவனையும்
சேர்த்து
ஓரடி தூரம் தூக்கி வீசி
எறிந்துவிடுகிறது..!!

படுக்கையை தள்ளி வைக்கிறது..!!
பாசத்தை கொள்ளி வைக்கிறது..!!
உணர்வுகளை கிள்ளி வைக்கிறது.!!
பிரிவுகளை தாராளமாய் அள்ளி வைக்கிறது..!!

கொட்டி கொட்டி
பேசிய வார்த்தைகள் எல்லாம்
தேளாய் மாறி கொட்டிட செய்கிறது..!!

இது
ஆண்மையின் வீரத்தின் ஆணவமா..??
இல்லை
பெண்மையின் மென்மையின் தாண்டவமா..??

ஆதரவாய்
கட்டியணைத்த கரங்கள்
ஆவேசமாய் வேடம் கொண்டு
அடித்திட ஓங்கிட செய்கிறது..!!!

நம்பிக்கையை உடைத்து
அன்பை புதைத்து
சந்தோஷத்தை கெடுத்து
எண்ணங்களை அசிங்கப்படுத்தி

பரண்மேல் பத்திரபடுத்திய கட்டைபோல்
பக்குவமாய் அமர்ந்துக்கொண்டு
உறவுகளின் உயிர்களை
அடுப்பில் எறியும் விறகுபோல்
எறித்து சாம்பலாக்கிவிடுகிறது...!!

எது இது..???
Image may contain: 1 person


நசுங்கிய இதயம்

எழுத்துக்களை எல்லாம்
ஒன்றுவிடாமல் பார்த்துப் பார்த்து
வாக்கியங்களாய்
வாசித்த நான்..

ஒரு பெயரில்லா நாண் போல்
உன் நினைவுகள்
ஏடுகளில் ஊடுறுவி
எழுத்துக்களை
பிரித்து வாக்கியங்களை
சூரையாட- வெறுமனே
ஏடுகளை மட்டும்
புரட்டிப் புரட்டி பக்கங்கள்
தாண்டிச்செல்கின்றேன்

இறுதியாய் -நீ
புன்னகைத்துச்சென்ற
அந்த வலிதரும் பக்கங்கள்
எங்காவது
என் இந்த புத்தகத்தில்
எழுதப்பட்டிருக்குமோ என்று..!!!

இல்லவேயில்லை
இறுதி பக்கம் வரை புரட்டிவிட்டேன்
காற்று மட்டுமே உருவாகி
விழிகளை கலங்கச்செய்கின்றது

உன்னை போலவேதானடி
உன் நினைவுகளை சுமக்கும்
புத்தகமும் என் கண்களை
நீராடச்செய்கின்றது

புறங்கைக் கொண்டு
துடைத்துவிடும் போதும்
துடைப்படாமல் விடுபட்டு
வழிந்தோடும் சிறு துளிகளில்
நனைந்த பக்கங்களில்தான்
உன் புன்னகை ஒழிந்திருப்பதை
உணர்ந்தேனடி..!!!

புன்னகையை ரசித்துவிட்டு
மூடுகின்றேன்
புத்தகத்தின் பக்கங்களை...
சற்றென்று வெளியில் குதித்தி
என இதயம்
அந்த பக்கத்தினுள் விழுந்து
நசுங்கி போய்விடுகின்றது
உன்னோடும்
உன் எழுதுக்களாய்
உதிர்ந்த நினைவுகளோடும்..!!

-பிசாசு-




Thursday, August 11, 2016

தனியான என் நிமிடங்களில் 
துணையாகி பிணை கூட 
தரமறுக்கின்றது 
உன் ஞாபகங்கள்..!!! 

முயற்சிக்கின்றேன் 
முடியவில்லை மறந்து 
உன் நினைவுகளை விட்டு 
பறந்து போக..!!! 

ஞாபக வழக்குகளை 
மறுபரிசீலனை 
செய்யச் சொல்லி 
கெஞ்சிக்கேட்கின்றேன் 
கொஞ்சமும் 
காதுகொடுக்காது 
செல்லமாய் சொல்லிச் செல்கின்றது 
"கட்டாயம் தண்டனை உண்டு என்று" 

தண்டிக்க துடியாய் துடிக்கும் 
உன் ஞாபகங்களைதான் 
தேடித் தேடி தவியாய் தவித்து 
நான் ஓடி ஒழிந்துக்கொள்கின்றேன் 

அப்பொழுதும் 
பிடியாணை பிரபிக்கப்பட்டு 
தேடி ஓடி வருகின்றது 
உன் ஞாபகங்கள்..!!! 

போதுமடி சகியே 
உன் தண்டனைகளை ஏற்பதுதான் 
என் விதியே..!!! 

தண்டனைகள் எதுவோ 
சீக்கரமாய் எழுதிவிடு 
உன் ஞாபகங்களோடு நான் 
சிறைப்பட்டுக்கிடந்துவிட..!!!
-பிசாசு-

Wednesday, August 10, 2016

ஓவியம்

ஆகாய வெண்ணிலாவில்
உன் முகம் பார்த்து
நேசித்தேன்..!!!

காரிருள் நேரத்தில்
உன் கூந்தலின் கருமையில்
நான் ஒழிந்துக்கொண்டேன்..!!!

விட்டு விட்டு துடிக்கும்
இமைகளுக்கு இடையில்
என் இதயம் 
எட்டி எட்டிப் பார்க்க கண்டேன்..!!!
காதோடு அசைந்தாடி கதை பேசும்
காதணியில் என் கனவுள்
மின்னக் கண்டேன்..!!!


கொஞ்சமாய் நீ சேர்த்த
உதட்டு சாயத்தில்
என் உதிரம் சொட்ட கண்டேன்..!!!

உன் நடைதனில்
என் சுவடுகள் பதியக்கண்டேன்..!!!
தீண்டியும் தீண்டாமலும்
தொக்கி கிடக்கும் கழுத்து மாலையில்
என் நெஞ்சம் படபடக்க உறைந்தேன்..!!!

கால்கொழுசு
மணிகளில் இரண்டடுக்காய்
என் காதலை சேர்த்துவிட்டேன்..!!!

காற்றோடு நிறம் தீட்டும்
விரல்களின் இடுக்குகளில்
அணைப்பட்டு -நான்
முழு ஓவியமானேன்..!!!
-பிசாசு-



Sunday, August 7, 2016

பார்வை..!!!

கட்டுக்கடங்காமல்
தட்டுப்பட்டு தலைத்தெறிக்க 
பாய்ந்தோடி வருகின்றது 
என் காதல்
உன் விழிகளை பார்த்திடும் போது..!!!

உன் பார்வை தீண்டி
நொருங்கியே போகின்றேன்
நீ மெது மெதுவாய் 
என்னை 
நெருங்கிவிடுகின்றபோது..!!!

உன் ஓரப் பார்வை மட்டுமல்ல
நேரப்பார்வையும் கூட நெஞ்சை 
கொன்றுவிட்டுதான் போகிறது...!!!

சில நேரப்பார்வை
அரவணைப்பாய்..!!

சில நேரப்பார்வை
கொஞ்சம் கதகதப்பாய்..!!!

சில நேரப்பார்வை
குறுகுறுப்பாய்..!!!

அடிக்கடி உன் பார்வை
கண்டிப்பாய்- எனக்குள் தினமும்
தண்டிப்பாய்..!!!

இந்தப் பார்வையெல்லாம்
என்னை மயக்கியும்
என் நிமிடங்களை உன் நினைவோடு
கடத்தியும் உன்னோடு வரச்செய்கிறது
கட்டளையிட்டு..!!!

கட்டுக்கடங்காத
காளையாக இருந்த என்னை
கட்டிப்போட்டு
விரதம்கொள்ள செய்யும்
உன் பார்வையின் ரகசியம்தான்
என்னடி..???
சொல்லடி..???
-பிசாசு-

Wednesday, August 3, 2016

ஆ(தா)ரம்

"என்னை விட்டு என்றுமே 
பிரியாதவள் அவள்...!!

அதிகமாய் ப்ரிமானவள்...
அதிகமாய் காதலிப்பவள்..
அடித்தாளும் உதைத்தாளும் 
"போடி" என்று திட்டித்தீர்த்தாலும்...

வேண்டாம் என்றொதுக்கி வைத்து 
வேடிக்கைப் பார்த்தாலும்- அடுத்த நொடியில் 
ஓடிவந்து கட்டிக்கொள்வாள் 
அவளின் ஆசை நாயகன் நான்..!!!

அழகானவள்தான் 
அதைவிட அறிவானவள்..
தினமொரு முறையேனும் 
என் இதழ்களில் முத்தமிட்டு 
வெட்க்கம் கொள்வாள்...!!!

என் இளமையின் மோகத் தீயின் 
மீதேறி வீணைவாசிக்கின்றாள்
என் தனிமையை அவளுக்கென்று
கொடுத்துவிட்டேன்..
அவளை நான் அணைத்துக்கொண்டேன்..!!!

அவள் எனக்கானவள் 
நான் அவளுக்கு அடிமையானவன் ..
ஒப்புதல் வாக்கு மூலம் தருகின்றேன் 
அவள்தான் என்னை தீண்டினால் 
என்னாசை தூண்டினாள்
தீர்ப்பை அவளுக்கு கொடுங்கள்
தண்டனையை நான் ஏற்கின்றேன்..!!!

அவள் என்னை விட்டு பிரியபோவதுமில்லை
நான் அவளின்றி வாழப்போவதுமில்லை..!!!

அவள்தான் என்னையும் 
தாய்மையாக்கினால்
தந்தையாக்கினால்
பல உறவுகளாய் வந்து 
என் உணர்வுகளுக்கு
உயிரூட்டினால்..!!!

அவள்தான் எனக்கான அறிமுகம் 
அவள்தான் என் நாட்களின் ஆதாரம்
என்றும் அவள்தான் என் முதல் தாரம்..!!!
-பிசாசு-



Tuesday, August 2, 2016

முரன்பாடு..!!!

உணவுதேடி வந்து
தன் பசியாறிக்கொள்ள
என் தேகத்தில் மீதமர்ந்து
"என்னுதிரம்" உறிஞ்சும்
கொசுக்களை கூட
இறுதியாசை என்னவென்று கேளாது -நான்
அடித்தே கொல்லுகின்றேன்..!!

ஆனால் காதல் தேடிவந்து
என் இதயத்தின் மீதமர்ந்து
நொடிக்கொரு முறை "என்னுயிர்"
பருகும் உன் நினைவுகளை
மட்டுமேனடி
அணைத்தே நான் கொலையுண்டு
போகின்றேன்???

இது என்ன முரண்பாடோ?

-பிசாசு-



யாரவள்..???

கண்ணகளிலே பேசி பேசி
என் கவிதைளுக்கும் கூட தாகத்தை
ஏற்படுத்தினாள்..!!
அதுபோக
சிறு புன்னகையிலே என்
இதய நரம்புகளை அறுத்து
அவள் காதலிசைக்கு
வீணை அமைத்துக்கொண்டாள்..!!


அவள் பார்த்த பார்வையிலும்
சிந்தி சிதறிய வெட்கத்தினாலும்
என் பருவத்தின் கூண்டுகளை
உடைத்து நூறு மைல் வேகத்தில்
பறந்திட வைத்தாள்..!!
எனக்கே தெரியாமல்
அருகில் இருந்தவரும் அறியாமல்
என்னுயிரை கொன்று
அவள் உணர்வுகளுக்கு அரிதாரம் பூசிக்கொண்டாள்..!!!

இன்றென்னை அவள்
நினைவில் பைத்தியமாக்கிவிட்டு
என்னை விட்டுச் சென்றாளே...!!
யாரவள்????
-பிசாசு-


காத்திருக்கின்றேன்..!!!

அவளுடன் வாழ நினைத்தேன்
அவளுக்காகவே வாழ நினைத்தேன்

எனக்கென அவள் கிடைப்பாளோ..???
என்னுடன் வாழ அவளும்
துடிப்பாளோ??

அவளுடன் கைபிடித்து
கடற்கரையில் பாதச்சுவடு கொண்டு
ஓவியம் தீட்டிட ஆசை..!!!

காட்டினுளே புகும் 
ஒற்றை பாதையில் நடந்திட ஏக்கம்..!!!

அவளுடன் படகில் தனியே செல்ல
ஆனந்தமாய் வாழ்வை கடந்து செல்ல
கிடைப்பாளா எனக்கானவளாய் அவள்..!!

பனித்துளி விழுந்த புல் நுனியில்
அவள் மடியில் என் தலைவைத்து 
அவள் தலை கோதி கதைகள் பேச..!!

நான் அவள் மழலையாய்
மனம்மாறி அடம் பண்ண
வேண்டும்..!!!

அவளுக்குள் நானும் எனக்குள் அவளுமாய்
தடம்மாறி இடம்மாறி போகவேண்டும்..!!

அன்புடன் ஒருவாய் உணவூட்ட
சின்ன சின்னதாய்
சண்டையிட்டு அவள் அன்பிற்காக 
மண்டியிட்டு
முத்தத்தின் முடிவில் 
புது யுத்தமே தொடங்க வேண்டும்..!!

இப்படியெல்லாம் 
அழகாய்- என் நாட்களை 
கடந்திடவே என்னை தேடி வருவாளா..???

அழகான எண்ணங்கள் 
நெஞ்சினில் அலைமோத
கவிதையோடு அவளை காதலித்து
அவளுக்காக காத்திருக்கிறேன்
ஆவலுடன் பார்த்திருக்கிறேன்
வருவாளா அவள்???
-பிசாசு-
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.


காதல் பெண்..!!!

நான் அழுகின்றபோதெல்லாம்
என்னோடு சேர்ந்தே அழுகின்றான்
அந்த ஆண்டவன் எதற்காக??
நான் உன்னை பார்ததற்காக
அவன் உன்னை படைத்தற்காக
எல்லா பெண்களும் ஒன்றுதான்
காதல் அன்பு கொள்வதிலும்
காதல் ஆசை காட்டி "கொல்"வதிலும்..!!!
உன்னை மட்டும்
குற்றம் சொல்ல வரவில்லையடி
என் கவிதைகள் கொண்டு..!!
என்னச் செய்ய பாவம் -நீயும்
அந்த ஆண்டவன் படைப்புதானே...!!!
என் காதல் பசிக்கா -உன்
நினைவுகளை தின்றும்
கண்ணீர் குடித்தும் -என்
வாழ்வோடு நகர்கின்றேன்
விரதம் கூட ஏற்க முடியாமல்..!!
-பிசாசு-
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

கைம்பெண்..!!!

வாழ்வேன் உன்னோடு
என்றெண்ணி ஏற்றிவைத்த
தாலி கொடி நெஞ்சை விட்டு
நகர்ந்ததென்ன நான் செய்த பாவமா???


ஆசைகள் எல்லாம் கானல் நீரானது
என் கற்பனைகளும் கனவுகளும்- உன்
சவப்பெட்டியில் உன்னோடு சேர்ந்து
சமாதியானதோ....????

அதன் பின்னர்..

கண்ணீர் துடைக்க கரங்கள்
நீட்டப்படுவதில்லை
கட்டியணைத்து சேலை கசக்கவே
கண்கள் பல துடிக்கின்றன...!!!


நீ தந்த உயிருக்காக உழைக்க
நான் சென்றால்- அங்கயும்
பேசுகின்றான் என்
இளமைக்கு விலையை..!!!
சதைபிண்டமாக மட்டும் பார்த்து
காம தாகம் தீர்த்துகொள்ள மட்டுமா
பெண் என்றவள்???


சாணத்தில் பூவை சூடி
கொண்டாடும் இச் சமூகம் -நான்
மட்டும் மலரணிந்தால்
வார்த்தையிலே மலரை
வாட வைப்பதேனோ???
அந்த மலருக்கும் கூட
வாசனை உண்டென்று நுகர்ந்த
கேடுகெட்ட நாசிகள்- என் மனதின்
நேசத்தை மறுதழிப்பதேனோ???


விதவையானது விதியென்று
விளக்கம் கொடுப்பதென்ன
விதையொன்று முளைப்பதற்கு
தடைசெய்வதென்ன???

பட்டு புடவை என்னை பார்த்து
பல் இளிக்குன்றது பாவம் இனி உன்னிடம்
எனக்கு வேலையில்யையென்று...!!


வெள்ளை புடவை மட்டும்
ஏக்கத்தோடு என்னை தாங்கிகொள்கின்றது
காவியுடை கொண்ட முனிவனாய்..!!


சமூகச் சடங்குகளுக்குள்
பூட்டிவைக்கப்பட்ட -பெண் என்ற
பொக்கிஷத்துக்கு
தடை உடைத்து தூசு தட்டி
புதுபொளிவொன்று தருமா மனமுள்ள
மானிடவர்க்கம்???
மானமுள்ள மங்கையருகளுக்கு..!!!
-பிசாசு-


உயிரே உன் உயிரென நானிருப்பேன் அன்பே..!!!



















அளவுக்கதிகமானால் 
அமிர்தமும் நஞ்சென்பார்கள்
ஆச்சரியம்தான் நான் இன்னமும் 
உயிருடனே இருக்கின்றேன்
அளவில்லாமல் உன் 
இதழ் சுவை(த்த) பின்னும்..!!!!!
-பிசாசு-
 
இன்று என் கவிதைகளோடு 
நானும் நகர்கின்றேன்
உன்னை விட்டு தூரம் சென்று விட 
கூடாதென்பதற்காக..!!

நீயும் கூட மெதுவாகவே 
தொடர்கின்றாய் 
என்னை தொட்டுவிட கூடாது 
என்பதற்காக..!!!
-பிசாசு-

காதல்...!!!

வானம் அங்கும்
பூமி இங்கும்
மழைதுளியாய் விழுகிறது
காதல்..!!!
நிலவு அங்கும்
இரவு இங்கும்
கனவாய் வந்து பார்கின்றது
காதல்...!!!
கடல் அங்கும்
கரை இங்கும்
அலையாய் மோதுகிறது
காதல்...!!!
பூ அங்கும்
வண்டு இங்கும்
தேனாய் திகட்டுகிறது
காதல்..!!!
உயிர் அங்கும்
உடல் இங்கும்
மூச்சாய் சேர்கிறது
காதல்..!!!
நீ அங்கும்
நான் இங்கும்
கவிதை கிறுக்கி வாழ்கிறது
காதல்..!!!
எங்கும் எதிலும் "காதல்"
எப்படியும் சேர்ந்து விடுகிறது "காதல்"
எப்படியோ சேர்த்து வைத்துவிடுகிறது "காதல்"
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...