Tuesday, August 30, 2016

நேற்றிருந்தோம் ஒன்றாய்
இன்று நீ எங்கே..??? 
என்னுள் வலிகொடுத்து
வெளியே பறந்து சென்றாய்..???

நினைவோடு உறையாடும் 
உள்ளம் தந்து சென்றாய்
நிழலோடு உறவாடும்
உருவம் செதுக்கி வைத்தாய்

கண்ணீரோடு கவியெழுதும்
கற்பனை புதைத்துவிட்டாய்
கனவோடு கலைந்திடும்
காதல் கடத்திச்சென்றாய்

பிரிவோடு பிரிந்திடும்
பிரியம் கொடுத்து பிரிந்தாய்
இவையெல்லாம் 
தந்துவிட்டு நீ இருளோடு
உருவமாய் மறைந்து போனாய்
நானோ பகலோடு
நிலவாய் இருந்தும் இல்லாமலே 
இறந்துபோனேன்..!!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...