Tuesday, August 2, 2016

யாரவள்..???

கண்ணகளிலே பேசி பேசி
என் கவிதைளுக்கும் கூட தாகத்தை
ஏற்படுத்தினாள்..!!
அதுபோக
சிறு புன்னகையிலே என்
இதய நரம்புகளை அறுத்து
அவள் காதலிசைக்கு
வீணை அமைத்துக்கொண்டாள்..!!


அவள் பார்த்த பார்வையிலும்
சிந்தி சிதறிய வெட்கத்தினாலும்
என் பருவத்தின் கூண்டுகளை
உடைத்து நூறு மைல் வேகத்தில்
பறந்திட வைத்தாள்..!!
எனக்கே தெரியாமல்
அருகில் இருந்தவரும் அறியாமல்
என்னுயிரை கொன்று
அவள் உணர்வுகளுக்கு அரிதாரம் பூசிக்கொண்டாள்..!!!

இன்றென்னை அவள்
நினைவில் பைத்தியமாக்கிவிட்டு
என்னை விட்டுச் சென்றாளே...!!
யாரவள்????
-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...