Sunday, August 7, 2016

பார்வை..!!!

கட்டுக்கடங்காமல்
தட்டுப்பட்டு தலைத்தெறிக்க 
பாய்ந்தோடி வருகின்றது 
என் காதல்
உன் விழிகளை பார்த்திடும் போது..!!!

உன் பார்வை தீண்டி
நொருங்கியே போகின்றேன்
நீ மெது மெதுவாய் 
என்னை 
நெருங்கிவிடுகின்றபோது..!!!

உன் ஓரப் பார்வை மட்டுமல்ல
நேரப்பார்வையும் கூட நெஞ்சை 
கொன்றுவிட்டுதான் போகிறது...!!!

சில நேரப்பார்வை
அரவணைப்பாய்..!!

சில நேரப்பார்வை
கொஞ்சம் கதகதப்பாய்..!!!

சில நேரப்பார்வை
குறுகுறுப்பாய்..!!!

அடிக்கடி உன் பார்வை
கண்டிப்பாய்- எனக்குள் தினமும்
தண்டிப்பாய்..!!!

இந்தப் பார்வையெல்லாம்
என்னை மயக்கியும்
என் நிமிடங்களை உன் நினைவோடு
கடத்தியும் உன்னோடு வரச்செய்கிறது
கட்டளையிட்டு..!!!

கட்டுக்கடங்காத
காளையாக இருந்த என்னை
கட்டிப்போட்டு
விரதம்கொள்ள செய்யும்
உன் பார்வையின் ரகசியம்தான்
என்னடி..???
சொல்லடி..???
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...