Tuesday, August 2, 2016

கைம்பெண்..!!!

வாழ்வேன் உன்னோடு
என்றெண்ணி ஏற்றிவைத்த
தாலி கொடி நெஞ்சை விட்டு
நகர்ந்ததென்ன நான் செய்த பாவமா???


ஆசைகள் எல்லாம் கானல் நீரானது
என் கற்பனைகளும் கனவுகளும்- உன்
சவப்பெட்டியில் உன்னோடு சேர்ந்து
சமாதியானதோ....????

அதன் பின்னர்..

கண்ணீர் துடைக்க கரங்கள்
நீட்டப்படுவதில்லை
கட்டியணைத்து சேலை கசக்கவே
கண்கள் பல துடிக்கின்றன...!!!


நீ தந்த உயிருக்காக உழைக்க
நான் சென்றால்- அங்கயும்
பேசுகின்றான் என்
இளமைக்கு விலையை..!!!
சதைபிண்டமாக மட்டும் பார்த்து
காம தாகம் தீர்த்துகொள்ள மட்டுமா
பெண் என்றவள்???


சாணத்தில் பூவை சூடி
கொண்டாடும் இச் சமூகம் -நான்
மட்டும் மலரணிந்தால்
வார்த்தையிலே மலரை
வாட வைப்பதேனோ???
அந்த மலருக்கும் கூட
வாசனை உண்டென்று நுகர்ந்த
கேடுகெட்ட நாசிகள்- என் மனதின்
நேசத்தை மறுதழிப்பதேனோ???


விதவையானது விதியென்று
விளக்கம் கொடுப்பதென்ன
விதையொன்று முளைப்பதற்கு
தடைசெய்வதென்ன???

பட்டு புடவை என்னை பார்த்து
பல் இளிக்குன்றது பாவம் இனி உன்னிடம்
எனக்கு வேலையில்யையென்று...!!


வெள்ளை புடவை மட்டும்
ஏக்கத்தோடு என்னை தாங்கிகொள்கின்றது
காவியுடை கொண்ட முனிவனாய்..!!


சமூகச் சடங்குகளுக்குள்
பூட்டிவைக்கப்பட்ட -பெண் என்ற
பொக்கிஷத்துக்கு
தடை உடைத்து தூசு தட்டி
புதுபொளிவொன்று தருமா மனமுள்ள
மானிடவர்க்கம்???
மானமுள்ள மங்கையருகளுக்கு..!!!
-பிசாசு-


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...