நாளிகைகள் நிமிஷங்களாய் யானபோதும்- உன்
நினைவுகள் என்னுள்ளேதான்
வாழ்கின்றதடி..!!!
நிமிஷங்கள் மனித்தியாலங்களாய் நீண்ட போதும்- நீ
மட்டும்தான் மறந்தே போகவில்லை
என்னுள் இருந்து..!!!
ஒவ்வொரு மணித்துளியும் நாட்களாய்
நகர்ந்தபோதும் -நீ என்னை நிச்சயம் தேடி வருவாய்
என்றிருந்தேன்...!!!!
ஆனால்
அந்த நாட்களும் கிழமைகளாய் பூப்பெய்தியபோதும்
நீ வரவில்லை...
இருந்தும் எங்கோ ஓர் மூளையில்
என்னை நினைத்து வாழ்வாய்
என்றெண்ணினேன்..!!!
மாதங்கள் பல கடந்தும்
வருடங்களாய் உனை தேடி தேடி
தேய்ந்துபோனேன்- நீ
வரமாட்டாயா என்றேங்கிபோனேன்...!!!
வருடங்கள் தசாப்தங்களாய் தடம்பதித்து....!!!
நானோ -தவம் புரிந்த முனிவனாய் தாடியோடும்
நீயோ -இன்னொருவனின் மனைவியாய் வாரிசுகளோடும்..!!!
இந்த நாளிகைகளுக்காகவா
நானும்---- என் காதலும்
தசாப்தங்களாய் உனக்காக காத்திருந்தேன்..!!!!
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment