Sunday, August 28, 2016

காத்திருப்பு..!!!

நாளிகைகள் நிமிஷங்களாய் யானபோதும்- உன்
நினைவுகள் என்னுள்ளேதான்
வாழ்கின்றதடி..!!!

நிமிஷங்கள் மனித்தியாலங்களாய் நீண்ட போதும்- நீ
மட்டும்தான் மறந்தே போகவில்லை
என்னுள் இருந்து..!!!

ஒவ்வொரு மணித்துளியும் நாட்களாய்
நகர்ந்தபோதும் -நீ என்னை நிச்சயம் தேடி வருவாய்
என்றிருந்தேன்...!!!!

ஆனால்

அந்த நாட்களும் கிழமைகளாய் பூப்பெய்தியபோதும்
நீ வரவில்லை...
இருந்தும் எங்கோ ஓர் மூளையில்
என்னை நினைத்து வாழ்வாய்
என்றெண்ணினேன்..!!!

மாதங்கள் பல கடந்தும்
வருடங்களாய் உனை தேடி தேடி
தேய்ந்துபோனேன்- நீ
வரமாட்டாயா என்றேங்கிபோனேன்...!!!

வருடங்கள் தசாப்தங்களாய் தடம்பதித்து....!!!
நானோ -தவம் புரிந்த முனிவனாய் தாடியோடும்

நீயோ -இன்னொருவனின் மனைவியாய் வாரிசுகளோடும்..!!!

இந்த நாளிகைகளுக்காகவா
நானும்---- என் காதலும்
தசாப்தங்களாய் உனக்காக காத்திருந்தேன்..!!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...