எழுத்துக்களை எல்லாம்
ஒன்றுவிடாமல் பார்த்துப் பார்த்து
வாக்கியங்களாய்
வாசித்த நான்..
ஒரு பெயரில்லா நாண் போல்
உன் நினைவுகள்
ஏடுகளில் ஊடுறுவி
எழுத்துக்களை
பிரித்து வாக்கியங்களை
சூரையாட- வெறுமனே
ஏடுகளை மட்டும்
புரட்டிப் புரட்டி பக்கங்கள்
தாண்டிச்செல்கின்றேன்
இறுதியாய் -நீ
புன்னகைத்துச்சென்ற
அந்த வலிதரும் பக்கங்கள்
எங்காவது
என் இந்த புத்தகத்தில்
எழுதப்பட்டிருக்குமோ என்று..!!!
இல்லவேயில்லை
இறுதி பக்கம் வரை புரட்டிவிட்டேன்
காற்று மட்டுமே உருவாகி
விழிகளை கலங்கச்செய்கின்றது
உன்னை போலவேதானடி
உன் நினைவுகளை சுமக்கும்
புத்தகமும் என் கண்களை
நீராடச்செய்கின்றது
புறங்கைக் கொண்டு
துடைத்துவிடும் போதும்
துடைப்படாமல் விடுபட்டு
வழிந்தோடும் சிறு துளிகளில்
நனைந்த பக்கங்களில்தான்
உன் புன்னகை ஒழிந்திருப்பதை
உணர்ந்தேனடி..!!!
புன்னகையை ரசித்துவிட்டு
மூடுகின்றேன்
புத்தகத்தின் பக்கங்களை...
சற்றென்று வெளியில் குதித்தி
என இதயம்
அந்த பக்கத்தினுள் விழுந்து
நசுங்கி போய்விடுகின்றது
உன்னோடும்
உன் எழுதுக்களாய்
உதிர்ந்த நினைவுகளோடும்..!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Saturday, August 13, 2016
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment