தன் பசியாறிக்கொள்ள
என் தேகத்தில் மீதமர்ந்து
"என்னுதிரம்" உறிஞ்சும்
கொசுக்களை கூட
இறுதியாசை என்னவென்று கேளாது -நான்
அடித்தே கொல்லுகின்றேன்..!!
ஆனால் காதல் தேடிவந்து
என் இதயத்தின் மீதமர்ந்து
நொடிக்கொரு முறை "என்னுயிர்"
பருகும் உன் நினைவுகளை
மட்டுமேனடி
அணைத்தே நான் கொலையுண்டு
போகின்றேன்???
இது என்ன முரண்பாடோ?
-பிசாசு-

No comments:
Post a Comment