Tuesday, August 2, 2016

முரன்பாடு..!!!

உணவுதேடி வந்து
தன் பசியாறிக்கொள்ள
என் தேகத்தில் மீதமர்ந்து
"என்னுதிரம்" உறிஞ்சும்
கொசுக்களை கூட
இறுதியாசை என்னவென்று கேளாது -நான்
அடித்தே கொல்லுகின்றேன்..!!

ஆனால் காதல் தேடிவந்து
என் இதயத்தின் மீதமர்ந்து
நொடிக்கொரு முறை "என்னுயிர்"
பருகும் உன் நினைவுகளை
மட்டுமேனடி
அணைத்தே நான் கொலையுண்டு
போகின்றேன்???

இது என்ன முரண்பாடோ?

-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...