அங்கு மதங்களற்ற மனிதப்பிறவிகள்
பிறந்திட ஆசை
ஜாதிகள் எல்லாம்
சாட்டையடிக்கப்பட்டு
சம்பிரதாய சடங்குகலெல்லாம்
பூட்டுப்போடப்பட்டு
மனித பண்பாடுகள் மட்டும்
மகத்துவம் பெற்று வளர்ந்திட ஆசை
அனைவரும் அன்பே கடவுளாய்
வணக்கிட ஆசை..!!!
எல்லோரும் கூடி மகிழ்ந்து
கூட்டுக்குடும்பமாய் இணைந்து
அன்பையும் பண்பையும்
தினம் பகிர்ந்திட ஆசை..!!!
இல்லாமை இல்லாதொழிந்திட
இயலாமை என்றொன்று
இல்லாமல் போய்விட
தீண்டாமை கூட தீக்கிறையாகிட
பொதுவுடைமை மட்டும்
புது பண்பாடாய் காத்திட ஆசை..!!!
வறுமைகள் இல்லா தேசமாய்
உழைப்பவர்கள் எல்லாம்
தேச தலைவராய்
புது சரித்திரம் படைத்திட ஆசை
அங்கு
துயிலுரிக்கும் துச்சாதன் எல்லாம்
தூக்கிலடப்பட்டு
நட்பு கற்பு இரண்டையும் காக்கும்
கர்ணனாய் அணைவரும்
கற்புடன் வாழ்ந்திட ஆசை..!!!
யுத்தங்கள் இல்லா தேசமாய்
ஆயுத சத்தங்கள் இல்லா அமைதியாய்
பூக்களின் வாசங்கள் மட்டும்
வளியெங்கும் பரவிட ஆசை..!!!
எல்லைகளில் பிரியாமல்
கண்டங்களாய் சிதையாமல்
ஒரே கடலாய் ஒரே நிலமாய்
எல்லோரும் ஒன்றாய்
வாழ்ந்திட ஆசை..!!!
அரசியல் ஏதும் இல்லா யாப்புக்களாய்
முதலாளி தொழிலாளி என்றில்லா கோப்புக்களாய்
வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கையை
அங்கு எல்லோரும்
தேடிட ஆசை..!!!
விவசாய நிலங்களும்
தாணிய பயிர்களும்
கரவை பசுக்களின் ஊர்வலமுமாய்
தினம் விவசாய திருவிழா கண்டு
நோய்களற்று ஆயுள் நீடி
அனைவரும் ஆரோக்கியமாய்
வாழ்ந்திட ஆசை..!!!
கணணியும் இணையமும்
காலத்தின் தேவையாகி
அது எம் தேசத்தை சிதைத்திடாமல்
நம் கட்டுப்பாட்டுக்குள்
வளர்ந்திட ஆசை..!!!
அங்கும் இங்கும் எங்கும்
ஏன் அந்த புது தேசத்திலும்
என் தேகத்திலும் உயிரிலும் என்றும்
தமிழே புது மொழியாய்
முதன் மொழியாய்
தேன் மொழியாய் இனித்திட ஆசை
அனைவரும் அதையுண்டு திளைத்திட
ஆசை..!!! ஆசை..!! ஆசை..!!
-பிசாசு-
No comments:
Post a Comment