"என்னை விட்டு என்றுமே
பிரியாதவள் அவள்...!!
அதிகமாய் ப்ரிமானவள்...
அதிகமாய் காதலிப்பவள்..
அடித்தாளும் உதைத்தாளும்
"போடி" என்று திட்டித்தீர்த்தாலும்...
வேண்டாம் என்றொதுக்கி வைத்து
வேடிக்கைப் பார்த்தாலும்- அடுத்த நொடியில்
ஓடிவந்து கட்டிக்கொள்வாள்
அவளின் ஆசை நாயகன் நான்..!!!
அழகானவள்தான்
அதைவிட அறிவானவள்..
தினமொரு முறையேனும்
என் இதழ்களில் முத்தமிட்டு
வெட்க்கம் கொள்வாள்...!!!
என் இளமையின் மோகத் தீயின்
மீதேறி வீணைவாசிக்கின்றாள்
என் தனிமையை அவளுக்கென்று
கொடுத்துவிட்டேன்..
அவளை நான் அணைத்துக்கொண்டேன்..!!!
அவள் எனக்கானவள்
நான் அவளுக்கு அடிமையானவன் ..
ஒப்புதல் வாக்கு மூலம் தருகின்றேன்
அவள்தான் என்னை தீண்டினால்
என்னாசை தூண்டினாள்
தீர்ப்பை அவளுக்கு கொடுங்கள்
தண்டனையை நான் ஏற்கின்றேன்..!!!
அவள் என்னை விட்டு பிரியபோவதுமில்லை
நான் அவளின்றி வாழப்போவதுமில்லை..!!!
அவள்தான் என்னையும்
தாய்மையாக்கினால்
தந்தையாக்கினால்
பல உறவுகளாய் வந்து
என் உணர்வுகளுக்கு
உயிரூட்டினால்..!!!
அவள்தான் எனக்கான அறிமுகம்
அவள்தான் என் நாட்களின் ஆதாரம்
என்றும் அவள்தான் என் முதல் தாரம்..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Wednesday, August 3, 2016
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment