தூரமாய் இருந்து ரசித்து
அவள் மெய்யழகை ருசித்து
தன் உயிர்
வாழ்ந்துக்கொண்டிருக்கின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் உயிருடன்..!!!
என் காதலை
அவள் மறுத்து எப்படி வாழ்கின்றாளோ
அதைவிட அதிகமாய்
அவள் நினைவுகளை சேர்த்து சேமித்து
திரிகின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் உணர்வுடன்..!!!
அவள் கூந்தல் கடந்து வந்த
காற்றின் வாசத்தை சுவாசித்தும்
அவள் உடல் பட்டு தெறித்துவிழும்
மழைத்துளியில் தாகம் தீர்த்தும்
அவள் பாதச்சுவடுகளில்
புதுப் பாதையமைத்தும் ஊர்வலம்
போகின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் உற்சாகத்துடன்...!!!
மேகமே இல்லாத வான் போல்
நிர்வாணமாய்
என்னிதயம் அவள் இல்லாது இருந்தாலும்
அவள் நினைவுகளை
உடுத்திக்கொண்டுதான் சிரிக்கின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் அழகுடன்..!!!
அவள் முத்தங்களையோ
அவள் சினுங்கள்களையோ
அவள் கொஞ்சல்களையோ
கெஞ்சிடாது தன் எல்லை மிஞ்சிடாது
என்னில் மஞ்சமிட்டு கிடக்கின்றது
என் ஒருதலை காதல்
இன்னமும் கற்புடன்..!!!
என்றோ ஓர் நாள்
அவள் வருவாள் -என் மீதொரு
மலர் வலயமும் வைத்திடுவாள்
அன்று அவளுக்கென
ஓரிரு குழந்தைகளும்
கூட இருக்கலாம் அன்றேனும்
தன் காதலை அவள் சொன்னால்
நிம்மதி பெறும் என் ஒருதலை காதல்
அப்பொழுதும்
ஒருதலை காதலுடன்..!!!
-பிசாவு-
No comments:
Post a Comment