Monday, August 15, 2016

நினைவால்

உன் நினைவாலே 

என்
மேல் இமையும்
கீழ் இமையும்
சேருமிடத்தில்..

உன்
நினைவென்னும்
ஊசியால்
குத்தாதே...

என்
உயிர் குடிக்கும்
உன்
நினைவுகளுக்கு
உறவு கொடுப்பாயா..

நீ
தீண்டுவாய் என..
உன்
கால் மிதிபடும்
சருகாகவும்
காதிருப்பேனடா...

சில
நேரங்களில் 
சிலையாகிப்போகிறேன்..
பல நேரங்களில்
பைத்தியமாகிறேன்..
உன் நினைவாலே..

உன்
நிஜங்களோடு
பேசிக்கொண்டு,
என்
நிழல்களோடு
வாழ்கிறேன்..

உன் நினைவாலே..

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...