Tuesday, August 2, 2016

காதல்...!!!

வானம் அங்கும்
பூமி இங்கும்
மழைதுளியாய் விழுகிறது
காதல்..!!!
நிலவு அங்கும்
இரவு இங்கும்
கனவாய் வந்து பார்கின்றது
காதல்...!!!
கடல் அங்கும்
கரை இங்கும்
அலையாய் மோதுகிறது
காதல்...!!!
பூ அங்கும்
வண்டு இங்கும்
தேனாய் திகட்டுகிறது
காதல்..!!!
உயிர் அங்கும்
உடல் இங்கும்
மூச்சாய் சேர்கிறது
காதல்..!!!
நீ அங்கும்
நான் இங்கும்
கவிதை கிறுக்கி வாழ்கிறது
காதல்..!!!
எங்கும் எதிலும் "காதல்"
எப்படியும் சேர்ந்து விடுகிறது "காதல்"
எப்படியோ சேர்த்து வைத்துவிடுகிறது "காதல்"
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...