Monday, August 15, 2016

"முதல் பரிசம்"

ஓர் ஜென்மம் கொண்டதாய்
போராடி வென்றுவிட்டு
மறு ஜென்மம் பிறந்துவிட்டதாய்
புது உயிர் தளிர்விட்டு

கண்ணீரிலே வடித்தெடுத்த ஆனந்தத்தின்
பிசுபிக்களை புறங்கைகளிலும்
புன்னகை இதழ்களிலும்
பூசிவிட்டு

வாரி எடுத்து தன் கக்கத்தில் வைத்து
கொஞ்சிகின்ற பரிசம்
பெண்மையில் இருந்து தாய்மைக்கான

"முதல் பரிசம்"


இருண்ட ஒரு உலகத்துள்
இதயம் துடித்து
நரம்பு நாண்களும் வேர்போல்
தோள்களில் பரவிக்கிடந்து

சுவாசத்தை கருவறை வாசத்தில்
கடன் வாங்கி
ஐயிரண்டு மாதங்கள் தவம் கிடந்து

சதைபிண்டமாய் வெளியில்
விழுந்தழுது
தாயின் விரல்களை பற்றிக்கொண்டு
துள்ளுகின்ற பூரிப்பு குழந்தையின்

"முதல் பரிசம்"


இரு உயிர் ஒரு உயிராகி
அது ஒரு புது உறவாகி
உடலோடு உறவாட
காத்திருந்த நிமிடங்கள் கண்களிலே
வியர்த்துக்கொட்ட கண்ணீராய்

கக்கத்தில் கிடக்கும்
முத்தை தன் பக்கமாய் எடுத்து
முத்தத்தால் துடைத்து
கொஞ்சும் பெருமிதம்
தந்தையின்

"முதல் பரிசம்"

காத்திருந்து காதல் வழி பார்த்திருந்து
காலை பொழுதின் மலராய் பூத்திருந்து
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
விரல்கள் விரல்களோடு உரசிவிட

இதயங்கள் இரண்டும்
இருபுறமும் இடம் மாறி துடிக்க
கண்கள் படப்படக்க

சட்டென்று கொடுத்த
கண்ணத்தின் முத்ததின்
கண்கள் சிவக்க
காதலியின் இதயத்தில் வீழ்ந்தது
முத்தமாய் காதலில்

"முதல் பரிசம்"

எதில் தொடங்கி எங்கு முடிப்பதென்று
தெரியாது தினறிக்கொண்டு
ஓர் முழுமையை தேடி ஓடி விடும்
பேனைகளின் தீண்டல்களில்
காகித தாள்களில் சிதறி விழுகின்றது
கவிதைகளாக..!!!

"முதல் பரிசம்

                                                                     -பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...