Thursday, August 11, 2016

தனியான என் நிமிடங்களில் 
துணையாகி பிணை கூட 
தரமறுக்கின்றது 
உன் ஞாபகங்கள்..!!! 

முயற்சிக்கின்றேன் 
முடியவில்லை மறந்து 
உன் நினைவுகளை விட்டு 
பறந்து போக..!!! 

ஞாபக வழக்குகளை 
மறுபரிசீலனை 
செய்யச் சொல்லி 
கெஞ்சிக்கேட்கின்றேன் 
கொஞ்சமும் 
காதுகொடுக்காது 
செல்லமாய் சொல்லிச் செல்கின்றது 
"கட்டாயம் தண்டனை உண்டு என்று" 

தண்டிக்க துடியாய் துடிக்கும் 
உன் ஞாபகங்களைதான் 
தேடித் தேடி தவியாய் தவித்து 
நான் ஓடி ஒழிந்துக்கொள்கின்றேன் 

அப்பொழுதும் 
பிடியாணை பிரபிக்கப்பட்டு 
தேடி ஓடி வருகின்றது 
உன் ஞாபகங்கள்..!!! 

போதுமடி சகியே 
உன் தண்டனைகளை ஏற்பதுதான் 
என் விதியே..!!! 

தண்டனைகள் எதுவோ 
சீக்கரமாய் எழுதிவிடு 
உன் ஞாபகங்களோடு நான் 
சிறைப்பட்டுக்கிடந்துவிட..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...