உன் முகம் பார்த்து
நேசித்தேன்..!!!
காரிருள் நேரத்தில்
உன் கூந்தலின் கருமையில்
நான் ஒழிந்துக்கொண்டேன்..!!!
விட்டு விட்டு துடிக்கும்
இமைகளுக்கு இடையில்
என் இதயம்
எட்டி எட்டிப் பார்க்க கண்டேன்..!!!
காதோடு அசைந்தாடி கதை பேசும்
காதணியில் என் கனவுள்
மின்னக் கண்டேன்..!!!
கொஞ்சமாய் நீ சேர்த்த
உதட்டு சாயத்தில்
என் உதிரம் சொட்ட கண்டேன்..!!!
உன் நடைதனில்
என் சுவடுகள் பதியக்கண்டேன்..!!!
தீண்டியும் தீண்டாமலும்
தொக்கி கிடக்கும் கழுத்து மாலையில்
என் நெஞ்சம் படபடக்க உறைந்தேன்..!!!
கால்கொழுசு
மணிகளில் இரண்டடுக்காய்
என் காதலை சேர்த்துவிட்டேன்..!!!
காற்றோடு நிறம் தீட்டும்
விரல்களின் இடுக்குகளில்
அணைப்பட்டு -நான்
முழு ஓவியமானேன்..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment