Friday, July 29, 2016

உணர்வாயா நண்பா..???

பாலகிருஷ்ணன் சந்ரு's photo.


இளைஞனே
துள்ளும் கலைஞனே
தூய தமிழனா நீ..???
Hai முதல்
Bye வரை நீ 
ஆங்கிலத்திலேயே அங்கலாய்கின்றாய்
என்றாவது
வணக்கமும் நன்றியும்
சொல்லியிருக்கின்றாயா??
தாயை கொன்றுவிட்டு நீ
தாய்மடி தேடுவதை யாதென்று நான் சொல்ல..!!
உதிரம் தந்த உறவுகளை நீ
உதறுகின்றாய்
உள்ளத்தில் முகமறியா எவரையோ
உறவென்கிறாய்..!!
உணர்வென்கிறாய்..!!!
உயிரும் விடுகின்றாய்..!!!
உன் உணர்வுகள் கொலையுண்டால்
உதிரத்து உறவுகள்தான்- உன்
உயிர்தாங்கும்..!!!
காதலிக்கிறாய்
கனவு காண்கின்றாய் நீயும்
மனிதன் என்பதினால்தானே..!!!
பார்த்து பேசி
மனம் மாத்தி
உணர்ச்சி தீ பந்தங்களில்
உடல்வேர்வை குளித்து
முத்தங்களில் துடைத்தெடுப்பதா
உன் காதல்..???
சத்தியமாய் சொல்கின்றேன்
உள் உணர்வாய் நேசி...!!
உன் உயிராய் சுவாசி..!!
நின் உலகமாய் யாசி...!!
அப்போது நீயடைவாய்
காதலெனும் கடவுளின்
சந்நிதியை..!!!
ஓடுகின்றாய்- நீ
பாடாத பாடும் படுகின்றாய்..!!!
ஓய்வில்லாமல்
உழைத்து ஓடாயும் தேய்ந்து
போகின்றாய்...!!!
என்றாவத ஒரு முறையேனும்
தியானித்திருக்கின்றாயா??
சிந்தனைகளுக்கு கொஞ்சம்
இறக்கை கட்டி விட்டுருக்கின்றாயா???
இல்லையென்பது உண்மையானால்
இன்றே... இப்பொழுதே...
தியானத்தில் மூழ்கு- உன்
சிந்தனைகளுக்கு தானாகவே
சிறகு முளைக்கும்...!!!
விடிகின்ற பொழுதுகள்
விடிவதில்லை என்னுள்..!!!
முடிகின்ற மாலைகள்
புது விடியலை தருவதில்லை..!!!
அது முடிவதில்லை
இது நடப்பதில்லை
எதிலும் ஒன்றுமேயில்லை
என்றே ஒலிக்கின்றது - உன்
உள்ள குமுறல்கள்..!!!
இனியாவது சிந்திக்கட்டும்..
முடியாததொன்றுமில்லை
இயலாமையென்று
இங்கு எதுவுமில்லை
கைசேரா கனவுகள்- உன்
இரவுக்கும் கூட இல்லையென்று..!!!
இன்பம் பாதியாய்
துன்பம் பாதியாய்
பிரிந்த உன்- வாழ்க்கையை
இணைத்திடு நீ உன் அன்பால்
அப்போது நீயறிவாய்
"கடவுள் தந்த வாழ்வு
அழகானதென்று"
பாலகிருஷ்ணன் சந்ரு
(நன்றி தமிழ் FM இன் "பொக்கிஷம்"

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...