என் காதலில்
மோட்சம் வேண்டி
நித்தமும் யாகம் செய்கின்றேன்
உன் நினைவுகள் எனும்
தீ மூட்டி...!!!
தீயணைப்பு படைவீரகளாய்
அடிக்கடி வந்து
அணைத்துவிட்டு போகின்றது
உன் பிரிவு...!!!
என் இதயமேடையில்
அமர்ந்து வீணை வாசிப்பதும்
நீதான்- அந்த சப்தங்களின்
சந்தங்களைக் கொண்டுதான்
என் காதலின் யாகத்திற்கு
மந்திரங்கள் சேர்க்கிறேன்...!!!
யாகம் முடியும் நேரம்
என் காதல் தாகம் தீருமோ..??
காதல் தாகம் தீரும் போது
என் மோக தேகம் தேயுமோ..??
தேகம் தேய்ந்து யாகம் செய்கிறேன்
என் காதல் தாகம் என்றும்
தீராதுபோயிருக்கட்டும்..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment