"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Saturday, July 30, 2016
நினைவுகள்
நொடிக்கொரு முறை
உன் மடிதேடி என் காதல்
ஓடி வந்த நினைவுகள்
மறந்துவிட்டதா..???
சகியே..
இன்று
தினமொரு முறையேனும்
கண்ணீரிலே கரைத்து
துடைத்துவிடுகின்றேன்
நீ பிரிந்து சென்ற அந்த நாளின்
நினைவுகளை...!!!
அன்று ஆசைகளே
இல்லா ஆடவனாய் நான் வாழ்ந்த
அந்த நாட்களில்
எனக்கு மீசை முளைக்கும் முன்பே
காதல் ஆசை காட்டியவளே
இன்றும்
பசுமையாகவே
படந்து கொண்டிருக்கின்றது
அந்த நினைவுகள்..!!!
காத்திருக்கின்றேன்
கண்மணியே என்றோ ஓர் நாள்
நீ என் கரம்பற்றுவாயென்று
ஆனால் இன்றுவரை
கைரேகைகளே மீதமாய்
காட்சி தருகின்றது..!!!
உன் கொழுசொலியில்
அன்று பிறந்த என் கவிதைகள் கூட
எங்கே உன் மெட்டி ஒளியில்
மரணித்துவிடுமோ என்று
அதன் பார்வைகளை கூட
மறைத்தே வைத்து வளர்க்கின்றேன்
பாவம் அவையாவது
உயிருடன் திரியட்டுமடி
உன் நினைவுகளை சுமந்தபடி
என் நாட்குறிப்பேடுகளில்...!!!
-பிசாசு-
Subscribe to:
Post Comments (Atom)
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...
No comments:
Post a Comment