Saturday, July 30, 2016

பிரித்துவிடாதே..!!1

காத்திருந்த காதல் என் கண்களில்
கானல்நீர் போல ஆனாலும்....!!
கண்மணியே உன் நினைவுகள் -என்னை
இரவில் தாலாட்டும்

பிறந்த குழந்தையின்
கைவிரல் தீண்டுகைபோல் -உன் ஸ்பரிசம்
என்னுயிர் உள்ளநாள் வரை மறந்துபோகாதடி சகி...!!
தனித்தீவுபோல் இன்று நானிருக்க
எனக்கென்னவோ துணையானது

உருவமில்லா கடவுளைப்போல்

உன் நினைவுகள் மட்டுமே..!!!
பிரித்துவிடாதே நினைவுகளை
பிரிந்துப்போன நிஜங்களை போல..!!!

                                                   பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...