கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ
இருந்தும் நான் எழவில்லை...!!!
சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ
உன்னை கடந்துப்போக கூட
நினைக்கவில்லை நான்...!!!!
வரண்டுவிட்டது என் நாவு
இன்னமும் கூட பேசவில்லை-நீ
தொடர்கின்றது என் பேச்சு...!!!
துவண்டுவிட்டது என் ஜீவன்
தாகம் தனிக்க கூட தயாராயில்லை-நீ
விரதத்தை தொடர்கின்றேன் நான்...!!!
இருந்தும் என்னடி அன்பே....
நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன்
நான் உன்னை..!!
நீ என்னை தொடர்ந்து போனாலும்
வருவேன் -நான் உன் பின்னே...!!
ஒருவேளை மரணம் எனை
கொண்டாலும் -மீண்டும்
மரித்து எழுவேன் உன் முன்னே....
பெண்ணே
உனக்காக..!!
-பிசாசு-
நன்றி தமிழ் FM
No comments:
Post a Comment