Saturday, July 30, 2016

கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ
இருந்தும் நான் எழவில்லை...!!!

சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ 
உன்னை கடந்துப்போக கூட 
நினைக்கவில்லை நான்...!!!!

வரண்டுவிட்டது என் நாவு
இன்னமும் கூட பேசவில்லை-நீ
தொடர்கின்றது என் பேச்சு...!!!

துவண்டுவிட்டது என் ஜீவன்
தாகம் தனிக்க கூட தயாராயில்லை-நீ
விரதத்தை தொடர்கின்றேன் நான்...!!!

இருந்தும் என்னடி அன்பே....

நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் 
நான் உன்னை..!!
நீ என்னை தொடர்ந்து போனாலும் 
வருவேன் -நான் உன் பின்னே...!!

ஒருவேளை மரணம் எனை 
கொண்டாலும் -மீண்டும் 
மரித்து எழுவேன் உன் முன்னே....
பெண்ணே
உனக்காக..!! 
-பிசாசு-

நன்றி தமிழ் FM 


No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...