Friday, July 29, 2016

மலையகத்தவர்கள் நாங்கள்



மலை முகடுகளில்

மழை நீராய் தவழும்
நாங்கள் "மலையகத்தவர்"

மலையகம்
தந்தது எமக்கு வாழ்வு- அதை
மறைத்து வைத்தன சில
நாவு..!!!


கொழுந்து மணிகளை
பண மணிகளாய்
மாற்றும் எம் கைகள் நாளும்..!!
அதையும் கூட
ஒலித்து வைக்கும் சில
ச(கெ)ட்ட பைகள் யாவும்..!!!

இரவுகள் முழுதும்
கனவுகள்தான்- அந்த
கனவிலும் கூட- எம்
கற்பனைகள்தான்

ஆயிரம் வாக்குறுதிகள்
எம் கண்முன்னே
"ஆழமாய் சிந்திப்பேன்" என்ற
அரசியல் வாதியால்..!!!

அந்த வாக்குறுதிகள்
எல்லாம் வாக்குப்பெட்டிக்குள்
வரைவிலக்கணமாய் போக
எம் வாழ்வு மட்டும்
தேர்தலில் செல்லா ஓட்டாய்
ஒதுக்கப்பட்டது..!!!

இனியும் வேண்டாம்
வாக்குறுதிகள் எல்லாம்
வஞ்சனை செய்யும்
வானரங்களிடம் இருந்து..!!!

உயிர்த்தெழுந்துவிடடோம்
உதிரத்தை வியர்வையாய்
உதிர்த்த நாங்கள்..
இனி ஒருபோதும்
மலைத்துப்போக மாட்டோம்
காரணம்
"மலையகத்தவர்கள்"
நாங்கள்

2 comments:

  1. இயற்கையை ரசிக்க பயணப்பட ஓர் இடம் எம்மை புத்துணர்வாக்க காலை ஒரு தேனீர் இவைகளையெல்லாம் நினைக்கும் நாங்கள் அவை தந்த மக்களை மட்டும் என்றும் நினைப்பதில்லை, நினைக்க நேரமும் இல்லை, யாரையும் பிழை கூறவும் முடியாத அவசர அவலங்கள் நிறைந்த உலகம். எமக்காக நாமே போராட வேண்டிய அவசியம். மண்சரிவும் இரத்தம் குடிக்கும் அட்டைகளும் என்று இயற்கையும் தண்டிக்க , பாதுகாக்க வேண்டிய அரசியலும் சுரண்டியே வாழ போராட எத்தனை முகங்களால் முடியும்.

    ReplyDelete
  2. இயற்கையை ரசிக்க பயணப்பட ஓர் இடம் எம்மை புத்துணர்வாக்க காலை ஒரு தேனீர் இவைகளையெல்லாம் நினைக்கும் நாங்கள் அவை தந்த மக்களை மட்டும் என்றும் நினைப்பதில்லை, நினைக்க நேரமும் இல்லை, யாரையும் பிழை கூறவும் முடியாத அவசர அவலங்கள் நிறைந்த உலகம். எமக்காக நாமே போராட வேண்டிய அவசியம். மண்சரிவும் இரத்தம் குடிக்கும் அட்டைகளும் என்று இயற்கையும் தண்டிக்க , பாதுகாக்க வேண்டிய அரசியலும் சுரண்டியே வாழ போராட எத்தனை முகங்களால் முடியும்.

    ReplyDelete

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...