Saturday, July 30, 2016

நானறிவேன்..!!


இன்று நீ என்னை
பிரிந்து சென்றாலும்
மறந்து போனாலும்
பின் நான் இறந்து போனாலும்
ஏதாவது ஒரு நொடியில் 
உன்னை நீ மறந்து 
என்னை நீ 
நினைக்கும்போது....
உன் கண்களில் 
இருப்பேன் கண்ணீராக
அப்போதும் யாரேனும் 
கண்டுகொள்வதற்கு முன் 
துடைத்துவிடுவாயென்றும்
நானறிவேன்..!!
-பிசாசு-



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...