இன்று நீ என்னை
பிரிந்து சென்றாலும்
மறந்து போனாலும்
பின் நான் இறந்து போனாலும்
ஏதாவது ஒரு நொடியில்
உன்னை நீ மறந்து
என்னை நீ
நினைக்கும்போது....
உன் கண்களில்
இருப்பேன் கண்ணீராக
அப்போதும் யாரேனும்
கண்டுகொள்வதற்கு முன்
துடைத்துவிடுவாயென்றும்
நானறிவேன்..!!
-பிசாசு-
No comments:
Post a Comment