உன்னை பார்க்காமல்
சில நாள் துன்பம்
உன் அருகில் இல்லாமல்..!!
ஒவ்வொரு நொடியும்
சிரித்து சிரித்து பேசி
சின்ன சின்னதாய்
குறும்புகள் பல செய்து
சிந்தை முழுவதும் -உன்
நினைவுகளை சுமந்து
சுற்றிதிரிந்த என் நிமிடங்கள்
சிறைவைக்கப்பட்டுவிட்டது
நகரமுடியாமல்- கடவுள் தரிசனம்
காணாத பக்தனாய்..!!
உன் மௌனங்களின்
கனங்களைக்கொண்ட
மறு பரிசீலனை செய்ய சொல்கிறது
என் விழிகள்
பாவம் அவை
எவ்வளவு நாட்கள்தான்
பார்வையிழந்து கிடக்கும்- உன்
தரிசனத்துக்காய்..!!!
-பிசாசு
No comments:
Post a Comment