Friday, July 29, 2016

எங்கும் உன் முகம்

சின்ன சின்ன
மழைத்துளிகளிலும்
உன் முகம்தான் புன்னகைக்கிறது
அது என் உள்ளங்கைகளில்
விழுந்து
சிதறும் போதும் கூட
இன்னும் அழகாய் தோன்றுகிறது..!!


கண்ணாடி பார்த்தாலும்
உன் முகம்தான் ரசமாகின்றது- அது
உடைந்து சிதறும் துகள்களிலும்
அத்துகள்கள் பட்டு வெட்டுப்பட்டு
பாய்கின்ற உதிரத்திலும்
உன் முகம்தான்
உறைந்துபோய்கிடக்கிறது..!!!

தட்டுப்பட்டு நான்
விழும் தரை முழுவதிலும்
தங்கமே உன் முகம்தான்- என்
கைகளில் ஒட்டிக்கொள்கிறது..!!!

பின்....
தட்டுத்தடுமாறி
எழுந்து நான் நடந்தாலும் என்
எதிரிலும் உன் முகமே என்னை
அழைக்கிறது...!!!

"போடி நீ" என்று நான்
திரும்பிடும் போதும் காற்றாய்
என்னை வந்து தழுவிக்கொள்வதும்
உன் முகம்தான்..!!!

தழுவிக்கொள்ளும்
காற்றைக்கூட
தடுக்க முடியாமல்
சுவாசித்துவிடுகிறேன்
அந்த சுவாசத்திலும் -உன்
முகம்தனையே
யாசிக்கிறேன்...!!!
                                                      பிசாசு



No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...