
தாயே என் பிறப்பேன்
உனக்கோர் இறப்பாய் மாறியது??
உனக்கோர் இறப்பாய் மாறியது??
பாவத்தின் மூட்டை தனை
ஏதும் உன் கருவில் சுமந்தாயோ??
ஏதும் உன் கருவில் சுமந்தாயோ??
இல்லை ஜனனிக்கப் போவது
ஒரு பாவியென்று நீ காலகணிதத்தில்
முன்றிபே அறிந்திருந்தாயோ???
ஒரு பாவியென்று நீ காலகணிதத்தில்
முன்றிபே அறிந்திருந்தாயோ???
புரியவில்லை எனக்கெதுவும்
இன்னமும் தெரியவில்லை..!!
இன்னமும் தெரியவில்லை..!!
அடியே புன்னியவதியே...
அன்று இரத்தத்தில் மிதந்து வந்த
இந்த பிண்டத்தை
நீ உன் முத்தத்திலேனும்
துடைத்தாயோ??
நானறியேன்
இந்த பிண்டத்தை
நீ உன் முத்தத்திலேனும்
துடைத்தாயோ??
நானறியேன்
இல்லை அந்த முத்தத்தின்
முடிவில்தான் நீ மொத்தமாய்
போய்சேர்ந்தாயோ
அதையும்தான்
நானறியேன்..!!
முடிவில்தான் நீ மொத்தமாய்
போய்சேர்ந்தாயோ
அதையும்தான்
நானறியேன்..!!
பத்துமாதம்
நீ பத்தியம் காத்து
பக்குவமாய் என்னை
பெற்றெடுத்தது
பத்தினியே பாடையிலே போகத்தானா??
நீ பத்தியம் காத்து
பக்குவமாய் என்னை
பெற்றெடுத்தது
பத்தினியே பாடையிலே போகத்தானா??
இல்லை யாரும் உன்னை
மகபேறு இல்லாதவள் என்று
மறுதழித்துவிட கூடாதென்றோ
என்னை பெற்றெடுத்து
கொடுத்துவிட்டு
மகராசியே நீ
தாயாகி பாதியிலே
போய்சேர்ந்தாய்??
மகபேறு இல்லாதவள் என்று
மறுதழித்துவிட கூடாதென்றோ
என்னை பெற்றெடுத்து
கொடுத்துவிட்டு
மகராசியே நீ
தாயாகி பாதியிலே
போய்சேர்ந்தாய்??
எனக்கொரு சந்தேகம்
என் அச்சனின்
ஆசைக்கு உன் இளமையை
இறையாக்கி
ஐயிரண்டு மாதங்கள்
என்னை சுமந்து
உன் அய்யனின் ஆண்மைக்கு
வீரம் சேர்க்கவோ
இந்த பிள்ளையை ஈண்ரெடுத்து
அவன் கையில் கொடுத்துவிட்டு
பிரிந்து நீ சென்றாய்??
ஆசைக்கு உன் இளமையை
இறையாக்கி
ஐயிரண்டு மாதங்கள்
என்னை சுமந்து
உன் அய்யனின் ஆண்மைக்கு
வீரம் சேர்க்கவோ
இந்த பிள்ளையை ஈண்ரெடுத்து
அவன் கையில் கொடுத்துவிட்டு
பிரிந்து நீ சென்றாய்??
அம்மா உனக்கொன்று சொல்லவா??
உன் இறப்பு பற்றி
நான் முன்பே அறிந்திருந்தால்
நிச்சயம் நான்
பிறந்திருக்கவே மாட்டேனடி
ஒரு உருவமாய்..
கருவறையிலே
என்னை நானே
கரைத்திருப்பேனடி
தின்ம உதிரமாய்..!!
நான் முன்பே அறிந்திருந்தால்
நிச்சயம் நான்
பிறந்திருக்கவே மாட்டேனடி
ஒரு உருவமாய்..
கருவறையிலே
என்னை நானே
கரைத்திருப்பேனடி
தின்ம உதிரமாய்..!!
இன்றெனக்கு
“பிறக்கும்போதே தாயவளை
முழுங்கிட்டு பொறந்தவள்”
என்றொரு புதுபெயர் கூட
வைத்துவிட்டார்கள்...!!
“பிறக்கும்போதே தாயவளை
முழுங்கிட்டு பொறந்தவள்”
என்றொரு புதுபெயர் கூட
வைத்துவிட்டார்கள்...!!
ஆனால்
அவர்களுக்கும் கூட
தெரியாது இது எனக்காய் நீ
பரிசளித்துவிட்டுச்சென்ற
பிறவிப்பெயரென்று..!!
அவர்களுக்கும் கூட
தெரியாது இது எனக்காய் நீ
பரிசளித்துவிட்டுச்சென்ற
பிறவிப்பெயரென்று..!!
என்ன தாயே…!!!
என் உதடுகள் காய்ந்து கிடக்கின்றது
உன் மார்பு காம்புகளை சுவைக்காது..
உன் மார்பு காம்புகளை சுவைக்காது..
நாவரண்டு போய் தவிக்கின்றது
ஒரு சொட்டு தாய்பால்
சுவைகூட ருசிக்காது..!!
ஒரு சொட்டு தாய்பால்
சுவைகூட ருசிக்காது..!!
என்ன செய்வதம்மா???
வெந்நீரிலே என்னை குளியாட்டி
உன் முந்தானையில்
என் முகம் துடைத்து
என் பட்டுமேனியில் சற்று உன் கைப்பட்டதும்
நான் துள்ளிக்குதிக்க....
உன் முந்தானையில்
என் முகம் துடைத்து
என் பட்டுமேனியில் சற்று உன் கைப்பட்டதும்
நான் துள்ளிக்குதிக்க....
ஒடிகொலன் போட்டு
நீயும் என்னோடு
சேர்ந்து குதிக்கவும்
என்னருகில் இல்லையே தாயே…!!!
நீயும் என்னோடு
சேர்ந்து குதிக்கவும்
என்னருகில் இல்லையே தாயே…!!!
ஒருசேரு சவ்வரிசி
கருக காய்ச்செடுத்து
வசம்பையும் அதில் கொஞ்சமாய்
தட்டிபோட்டு
சூடாரி போவதற்குள்
தேங்காய் சிரட்டையில் ஊற்றி
காயவைத்த எடுத்த
அந்த கருப்பு பொட்டை
என் நெற்றியிலே
நிலாவட்டமாய் வஞ்சகமில்லாமல்
வச்சி அழகு பார்த்து
கண்பட்டுவிடுமோ என்று நினைத்து
கண்ணத்திலும் மூணுபுள்ளி
சேர்த்துவைத்து
என்னழகில் நீ சொக்கி நிற்கும்
உன் அழகை நான் இரசிக்க
கொடுத்துவைக்கவில்லையே தாயே..!!
கருக காய்ச்செடுத்து
வசம்பையும் அதில் கொஞ்சமாய்
தட்டிபோட்டு
சூடாரி போவதற்குள்
தேங்காய் சிரட்டையில் ஊற்றி
காயவைத்த எடுத்த
அந்த கருப்பு பொட்டை
என் நெற்றியிலே
நிலாவட்டமாய் வஞ்சகமில்லாமல்
வச்சி அழகு பார்த்து
கண்பட்டுவிடுமோ என்று நினைத்து
கண்ணத்திலும் மூணுபுள்ளி
சேர்த்துவைத்து
என்னழகில் நீ சொக்கி நிற்கும்
உன் அழகை நான் இரசிக்க
கொடுத்துவைக்கவில்லையே தாயே..!!
ஏன்டி ராசாத்தி...!!!
தத்தி தத்தி நடக்கும் வயதில்
சட்டென்று நான் தடுக்கிவிழ
நீ வேகம◌ாய் ஓடிவந்து
உன் உயிர் பதைத்து
என்னை உன் மார்போடு அணைத்துக்கொள்ளும்
அந்த அன்பின் அரவணைப்பை
சட்டென்று நான் தடுக்கிவிழ
நீ வேகம◌ாய் ஓடிவந்து
உன் உயிர் பதைத்து
என்னை உன் மார்போடு அணைத்துக்கொள்ளும்
அந்த அன்பின் அரவணைப்பை
கொடுக்காமலே சென்றுவிட்டாய் நீயே..!!
உத்தமியே..!!
நான் செய்யும் சுட்டிதனம் எல்லாம்
திட்டி திட்டி இரசிக்கத்தான்
கொடுத்துவைக்கவில்லை
உனக்கு..!!!
திட்டி திட்டி இரசிக்கத்தான்
கொடுத்துவைக்கவில்லை
உனக்கு..!!!
அதானால்தான் என்னவோ
நான் சுட்டித்தனம்
ஏதும் செய்யாது வளர்ந்துவிட்டேன்..!!
நான் சுட்டித்தனம்
ஏதும் செய்யாது வளர்ந்துவிட்டேன்..!!
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனையோ
ஏக்கங்கள் என்னுள் நமக்காக
எத்தனை எத்தனையோ
ஏக்கங்கள் என்னுள் நமக்காக
பரவாயில்லை தாயே..
நம் ஏக்கங்கள் தீர்ந்திட
வரமொன்று கேட்கிறேன்
வரமொன்று கேட்கிறேன்
மீண்டும் நீ பிறக்கவேண்டும்
என் மகளாய்
என் மகளாய்
அவளிடத்தில் நானிருந்து
உன் ஆசையெல்லாம்
தீர்த்துக்கொள்ளவேண்டும்
மீண்டும் உனக்கொரு மகளாய்..!!!!
உன் ஆசையெல்லாம்
தீர்த்துக்கொள்ளவேண்டும்
மீண்டும் உனக்கொரு மகளாய்..!!!!
பாலகிருஷ்ணன் சந்ரு
நன்றி தமிழ் FM இன் "பொக்கிஷம்"
நன்றி தமிழ் FM இன் "பொக்கிஷம்"
No comments:
Post a Comment