Sunday, July 31, 2016

நினைப்பைத் தொலைத்து
உன் நினைவை மறக்க
நினைக்கும் பொழுதெல்லாம்

மறக்க மறந்து
நினைத்தே
தொலைக்கிறேன் உன்னை..!!!

தொலைவாய் போய்
தொலைந்த என்னை உன்னுள்
தொலைத்துப்போனவளே...!!!

நினைவாய் இருந்து என்னை
நித்தமும் கொள்பவளே...!!!
தொலைந்து போ 
நீ தனியாக என்னை விட்டு...!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...