Friday, July 29, 2016

காதல் பைத்தியம்


கொஞ்சம் தூரமாய்
தவம் கொண்ட முனிவனாய்
தாடிக்குள் ஒளிந்துக்கொண்ட முகத்தின்
மௌனத்தின் ஜனனங்களுக்குள்
எத்தணையோ மரணங்கள்...!!!
கண்கள் இரண்டிலும்
கனவுகளின் கதவடைப்பு தெரிகின்றது
நெற்றியின் நடுவில்
அவமானத்தின் தழும்புகளின்
அடையாளம் தெரிகின்றது...!!!
மேலாடை அவனது
மேனியேயானது..
கீழாடையோ கொஞ்சம் அதிகமாய்
கிழிந்தே போய் கிடந்தது..!!!
மழைதுளிகள் மட்டும்
அவனை தொடுகின்றது
வெயிலும் ஏனோ அவனை
வெறுத்தே எறிக்கின்றது..!!!
இருந்தும் அவனது உதடுகள்
உச்சரிப்பில் நச்சரிக்கிறது மழலையாய்
ஏதோ ஒன்றை..!!!
கறுத்த மேனியில்
ஆங்காங்கே கல்வெட்டுகளாய்
பால சதை தட்டுகள்..!!
இதயத்தில் சுமந்தது
போதாதென்று அவன் நெஞ்சிலும் சுமக்கின்றாய்
"கண்மணி" அவள் பெயரை..!!!
இப்போத உணர்கின்றேன்
இவன் காதலால்தான் இப்படியாகினானோ??
இல்லை காதலியால் இப்படியாக்கப்பட்டானோ??
யாரிவன்??
யாருக்கு பிறந்தான் இவன்??
இலட்சியங்கள் கொண்டு
சாதிக்க வேண்டிய வயதில்
இலட்சணமே இல்லாமல்
தொலைந்து போனதே இவன் வாழ்வு..!!
காதலால் வாழ்வை தொலைத்தானா???
மோதலால் முகம் கிழிந்தானா???
ஆதலால் இப்படியானானோ???
தொலைத்ததை அறிவானோ??
தொலைந்ததை மீண்டும் அடைவானோ??

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...