பேருந்தில் உன்னை கண்டேன்
காதல் நான் கொண்டேன்
சொல்லிட தயங்கிய நெஞ்சம்
பேசிடவே ஆவள் கொண்டேன்
பெயர் தெரியாது அழகே
ஊர் தெரியும்
உண்மை எதுவென்று அறியாது
நீ யாரென்று தேடிய ஆவலில்
கிடைத்தாய் நீ பொக்கிஷமாய்...
நட்போடு நீ கிடைத்தாய்
ஆறுதலாய் அரவணைத்தாய்
அடிக்கடி உன் முகம் காண நேரம் காலம் மறந்தேன்....
உன் அருகில் அமரந்திட பல பேருந்து பயணங்களை ரசித்தேன்
பல முறை காய்ச்சல் கொண்டேன் உன் கைகளில் மருந்துகள் வாங்கிட உன் தேடி வந்தேன்
கைகள் உரசிட
கண்கள் களந்திட
விரல்கள் கோர்த்துக்கொள்ளும்
சில மணித்துளிகளுக்காய்
பல மணி நேரம் தனிமையில் காத்திருந்தேன்....
தூரமாய் நீயிருந்து அருகினில் வந்திட கண்கள் சுருங்க உன் இதழ்கள் தரும் புன்னகையில் வலிகள் நான் மறந்தேன்
வார்த்தைகள் அற்றுக்கிடந்தேன்...
பயணங்கள் ரசித்தேன்
உன் வார்த்தைகளில்
உயிர் கொண்டேன்
பேசிட பழகினேன்
காதலை மட்டும் இதயத்தில் வைத்துக்கொண்டு
பிரிந்திடுவாய் என்ற பயத்தினிலே உனை நான் இழந்தேன்....
இறுதியில் எனை நானும் இழந்தேன்
நான் யாரென்பதை மறந்தேன்...
அன்பே
உன்னோடு வாழமுடியாத
சோகம் -நான் உயிரோடு
வாழும்வரை ஒட்டியிருக்கும்
என் உதிரத்தில் உயிராய்
உனக்கான உள்ளத்தில்..!!
மறு ஜென்மம் என்பதில்
நம்பிக்கை இல்லை
எனக்கு...
போதுமடி இத்துன்பம்
இதோடு முடியட்டும் நிஜத்தினில் தொலைத்த உன்னை நினைவினில் தேடினேன்
கனவுகள் கலைந்திட
மறுபடி நிழலினை தொடர்கிறேன்.....


No comments:
Post a Comment