மனந்தும் பல நாள்
மனம் நொந்தது
மகப்பேறு இல்லை என்று
லெச்சுமிக்கு....
ஊருக்குள் இவள் உலக அழகி ஐஸ்வரியா
உள்ளத்தில் இவள் அன்னை திரேஷா
கணவனுக்கு இவள் கன்னகி
மாமியாருக்கோ இவள் ஒரு ''மலடி"
பூவாக பிறந்தாளோ அன்று
எல்லோரும் பூரித்து போக
பூ இன்று கருகி சருகாகி போனதோ???
காரணம்தான் கண்ணீரோ????
போகாத கோவில் இல்ல பொம்பள இவ
வேண்டாத வேண்டுதல் இல்ல
மண்சோறு மண்டியிட்டு
கண்ணீரை உப்பு துளியாயிட்டு
கையேந்தி மடி பிச்சை கேட்கிறாள் வரம் தரும் லெச்சுமி...
தான் செய்த பாவம் என்ன பாவியாய்
பொறந்தது தானென்ன....!!!
இதையெண்ணி எண்ணி இவ அழுகாத
நாளுதானென்ன....!!!
''பரம்பரைய வளர்க பாவி இவ வயித்துல
ஒரு புளு பூச்சி கூட இல்லையே"
பாவி பாவி என் பொளம்புரா இவ அத்த
-இத கேட்டு கேட்டு...
தாங்காத இவ மனசு
தற்கொலைக்கு தூண்டுறப்ப
ஆத்தோடு போவ ஓடோடி போரா
ஒலகத்த வெறுத்து....!!!!
-பாதியில....
தல சுத்தி தடுக்கி விழ
மயங்கிபோறா மண்ணுமேல
-வழியில-
கொழுந்தெடுத்து சுமந்த வந்த கருபாயக்கா
கண்டா இந்த காட்சிய..!!!
ஓடோடி இவ வந்து ஐய்யய்யோ என்றழர
பக்கத்து மல கங்காணி
பதறி போய் பக்கத்துல வர
தண்ணிய தெளிச்சி லெச்சுமிய எழுப்ப
எழுந்தவள கூட்டி போறா ஆஸ்பத்திரிக்கு...
என்னாச்சுனு நாடி புடிச்சி பாத்த ஆறடி மனுசே
அடடா இவ உன்டாயிட்டானு சொல்ல
தன்னையே மறந்து பட்டாம் பூச்சியா பறந்தா
"நன்றி"னு ஒரு வார்த்தையோடு
-வீட்டுக்கு போனா-
மாமி மூதேவினு மூஞ்ச திருப்ப
காலுல விழுந்த சீதேவி "உன்டாகிட்டேனு" சொல்ல
நாலுவருசத்துக்கு பொறகு தோள் தொட்டு தூக்கி
''ஏ மகளேனு" சிரிச்சா இந்த மாமியா சி(கி)றுக்கி...!!!
பத்து மாசமா மாங்காவும் சாம்பலுமா திண்ண இவளுக்கு
சரசுனு பொறந்தா ஒருத்தி சந்ததிய வளக்க
மலடிய கொண்ணுட்டு தாயா இவள பார்க்க
லெச்சிமி நெனச்சா....
"ஏ குலசாமி உனக்கு நா வச்ச நேத்தி கடன்
நெனவுல எனக்கிருக்கு"
ஆடு வெட்டி பூச தாரே...!!!!!
பலமில்லா இவ உடம்பு
பலமானது கருசுமக்க நாலு வருசம்..
ஆனால் இது தெரியாத இவ மாமியா
மூதேவி..... மலடினு.... சொல்ல
இன்னும் எத்தனை எத்தனை
மாமியார் ஊருக்குள் இப்படியோ????
அட குலசாமி நீயே சொல்லு....!!!!
-பிசாசு-
நனறி தமிழ் FM "பொக்கிஷம்"