Sunday, July 31, 2016

நினைப்பைத் தொலைத்து
உன் நினைவை மறக்க
நினைக்கும் பொழுதெல்லாம்

மறக்க மறந்து
நினைத்தே
தொலைக்கிறேன் உன்னை..!!!

தொலைவாய் போய்
தொலைந்த என்னை உன்னுள்
தொலைத்துப்போனவளே...!!!

நினைவாய் இருந்து என்னை
நித்தமும் கொள்பவளே...!!!
தொலைந்து போ 
நீ தனியாக என்னை விட்டு...!!!
-பிசாசு-

காளையர்
களவெடுத்துச்செல்லவும்
தடைவிதிக்கின்றாய்..!!!
மற்றயைவர்
பார்வைக்கும் படாமல்
பொத்தி பொத்தி வளர்கின்றாய்..!!!

அடிக்கடி
ஒறக்கண்ணால் பார்த்துக்கொள்கின்றாய்
கண்ணாடி முன் நின்று..!!!

என்னதான் செய்தாலும்
நீ எப்படிதான் மறைத்தாலும்
அதை முதல் நாளில்
எடுத்துக்கொள்வேனடி நான்..!!!

எங்கே நீ ஒழித்துவைக்க பார்கின்றாய்
வேண்டாமடி 
அதை
இப்பொழுதே தந்துவிடு 
எனக்கு
ஒரு ஒத்திகை
பார்த்துவிடுகின்றேன்
உன்
"வெட்கத்தை"
                                                            பிசாசு




மோட்சம்..!!!

நெஞ்சத்தில் சுமந்த 
உன்னை கல்லறையின் 
மடியில் கூட 
இறக்கி வைக்க மறுக்கும்
என் காதல் 
இன்று நீ தந்த உன் பிரிவால்
என் உடலோடு சேரந்து
தீக்குளிக்கப்போகுதடி...!!!

என் தீயே...!!

கருகிப்போய் கிடக்கபோகும்
என் நெஞ்சத்தின் மீது 
ஒரு துளி கண்ணீரையாவது
சிந்திவிட்டுச்செல்

என் காதலுக்கு 
கிடைக்காத மோட்சம்
என் உடலுக்காவது
கிடைக்கட்டும்...!!!
-பிசாசு-

ஏனடி..???


                                                                                           இரவுகளை கூட 
கனவுகளாக்கி- அந்த
கனவுகள் அணைத்திற்கும்
கற்பனை மூலாம் பூசி
கற்பனையை சிலையாக்கி
சிதைந்துபோன 
அச்சிலைக்கு
காதலென உருகொடுத்து
உருவாக்கிவிட்டு- இன்று
உயிர் மட்டும் கொடுக்காது
போனாயே ஏனடி..????

                                                 

இறுதியாசை..!!

நிஜமெது 

நிழலெது
நிதர்சனம் 

செய்ய தெரியவில்லை -நீ 
என்னை கொன்று

உயிரை உன்னோடு 
கொண்டுபோய்விட்டதால்...!!!

கொலையுண்டு கிடக்கும்
என்னை நெடுந்தூரம் தூக்கி எறிந்துவிடு
பறவைகளுக்காவது
இறையாகட்டும் என் 
உடல்..!!!
-பிசாசு-

Saturday, July 30, 2016

"வாழ்வை தொலைத்து வாழ்வை தேடுபவன்"

கருகிய மேனியும்
உடல் முலுதும் வியர்வையுமாக
இங்கே நான்- காய்ந்து சருகாகிப்போன
கனவுகளுடன்
விட்டு வந்த சொந்தங்களுக்கு
இன்னும் -நான் ஒரு
விடுகதையாக வருவேன்
குறைந்தது ஒரு "சென்ட்டு" போத்தலுடன்...!!!


கூழோ...கஞ்சியோ...
குடிக்கும் போது- நீ
வேண்டுமென எத்தனை முறை
சொன்னாலும்- நீ
மூட்டை முடிச்சுடன் அங்கே..!!!
நான் மூட்டைப் பூச்சிகளுடன்
இங்கே நம் வாழ்க்கையின்
நினைவுகளுடன்..!!!


பட்டதுப் போதும்
கட்டியவள் அங்கே என் வாரிசுகளுடன்
என காட்சிகள்
சாட்சிகள் சொன்னாலும்..!!!


முதுகெலும்பை ஒடிக்கும்
கடன் மட்டுமே
கண் முன்னாடி அலைமோத
பணம் தேடும்
பந்தயத்தில்
பணயமாக நான் மட்டுமே
நீயே என் கேடயமாக..!!!



விடைக் கிடைத்தால்
விடைக் கொடுத்துவிடுவேன்
வெளிநாட்டு வாழ்கைக்கு
சிக்கிய எச்சிலுடன்
சீக்கிரம் வந்துவிடுவேன்..!!!


இன்று வழிந்தோடும்
உன் கண்ணீரை என் கரம் கொண்டு
துடைக்கத்தான் ஆசை
ஆனால் அனுப்ப முடிந்தது
பள பளவென்று
பள்ளிலிக்கும்- ஒரு
"வெளி நாட்டு கைக்குட்டை" மட்டுமே
கரைபடியாத கொஞ்சம் பணத்துடன்..!!!



"வீட்டை முன்னால்
உடைத்து கட்டிவிடு
தொங்க வீட்டு ராமசாமியின்
கடனை அடைத்துவிடு...


பைப் லைன்ன நல்ல செய்துவிடு
குடம் தூக்கி வந்து தண்ணீர் சேர்க்க தாய்க்கு
தெம்பு இல்ல பாவம் அவள்..!!!

சின்னவனுக்கு சட்டை வாங்கிகொடு
பெரியவளுக்கு டியுசன் பீஸ் கட்டிவிடு

மிச்சமிருந்தால் உனக்கு ஒரு
கொழுசு வாங்கிவிடு..!!!

இப்படிக்கு....
-பிசாசு-
நன்றி தமிழ் FM இன் "பொக்கிஷம்"


நானறிவேன்..!!


இன்று நீ என்னை
பிரிந்து சென்றாலும்
மறந்து போனாலும்
பின் நான் இறந்து போனாலும்
ஏதாவது ஒரு நொடியில் 
உன்னை நீ மறந்து 
என்னை நீ 
நினைக்கும்போது....
உன் கண்களில் 
இருப்பேன் கண்ணீராக
அப்போதும் யாரேனும் 
கண்டுகொள்வதற்கு முன் 
துடைத்துவிடுவாயென்றும்
நானறிவேன்..!!
-பிசாசு-



கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ
இருந்தும் நான் எழவில்லை...!!!

சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ 
உன்னை கடந்துப்போக கூட 
நினைக்கவில்லை நான்...!!!!

வரண்டுவிட்டது என் நாவு
இன்னமும் கூட பேசவில்லை-நீ
தொடர்கின்றது என் பேச்சு...!!!

துவண்டுவிட்டது என் ஜீவன்
தாகம் தனிக்க கூட தயாராயில்லை-நீ
விரதத்தை தொடர்கின்றேன் நான்...!!!

இருந்தும் என்னடி அன்பே....

நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் 
நான் உன்னை..!!
நீ என்னை தொடர்ந்து போனாலும் 
வருவேன் -நான் உன் பின்னே...!!

ஒருவேளை மரணம் எனை 
கொண்டாலும் -மீண்டும் 
மரித்து எழுவேன் உன் முன்னே....
பெண்ணே
உனக்காக..!! 
-பிசாசு-

நன்றி தமிழ் FM 


தீண்டவா..!!!

என் கவிதைகளை நான்
உன் நினைவின்றியும்
உன்னைத் தீண்டாமலும் தான் 
எழுத முயல்கிறேன் 
ஏனோ அதில் தோற்றே போகின்றேன்...!!!

உன் நினைவின்றி நானும் இல்லை
உன்னை தீண்டாது- என் கவிதைகள் 
பிறப்பதும் இல்லை...!!!
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.
சகியே.......
உன்னை யாசிக்கும் என் 
கவிதைகளுக்காகவேனும்
நான் கொஞ்சம் யோசிக்காமல் 
தீண்டிக் கொள்ளட்டுமா  
உன்னை....!!!

-பிசாசு-

நீ..!!!


என் இரவுகளை தின்று 
வாழ்கின்றது
உன் நினைவுகள்..!
உன் நினைவுளை தின்று 
பிறக்கின்றது
என் கவிதைகள்..!
என் கவிதைகளை தின்று 
பிழைக்கின்று
நம் காதல்...!
நம் காதலை கொன்று
வாழ்கின்றவள் நீ...!!!!!
-பிசாசு-

தலையனை காதல்...!!

கனவுகளை திண்று உறங்காது
தாகத்தில் விழித்திருக்கின்றது
என் கட்டிலில் தலையணை..!!!

உன் நினைவுகளில் உறங்கும் போதெல்லாம்
அது விழித்துக்கொண்டு
காதல் ஆசை பேசுவது -என் காதுகளில்
மெதுவாக கேட்கின்றது...!!!

அதனால் தனியாகத்தானே இருக்கின்றாய் என்று
துணைக்கொன்று வாங்கி வைத்தேன்- அந்நொடி முதல்
நான் உறக்கம் கெட்டுபோனேன்..!!!

என் தலையணைப்பதற்கு பதிலாக
அவையிரண்டும் கட்டியணைத்துக் கொள்கின்றன..!!!

கவிதை புத்தகத்தை அவன் மீது வைத்து
நான் வைத்து எழுதும்போதெல்லாம்- என்
பின்னால் இருக்குமவள்
எட்டிப் பார்த்து ஓரக்கண்ணால் - கவி வரிகளை
திருடிக்கொள்கின்றாள்
திருடப்படுகின்ற கவிதைகள் அணைத்தும்
அவர்களின் காதல் பாஷையாக இரவில்
என் காதுகளில் கேட்கின்றன..!!!

ஒன்றன் மீதொன்றடுக்கி
நான் தலை சாயும் போதெல்லாம்
அப்பப்பா முத்த சத்தங்கள் விடாது கேட்கின்றன
முடியவில்லை என்னால்...
அவர்களுக்கு பதிலாய் 
நான் வெட்கி புன்னகைகின்றேன்...!!!

இது போக...
சில நேரங்களில் 
அவனை மட்டும் வைத்துக்கொண்டு
உறங்கும் போதெல்லாம் -என்னுறக்கம் கெடுத்து
என் கழுத்தை அழுத்தி வலி கொடுத்து
எப்படியோ அவளையும் -தன் அருகில் 
கொண்டுவந்து வைத்துவிட செய்கின்றான் 
சிறந்த காதலன்..!!!

நான் வடிக்கும் கண்ணீர் கொண்டு 
கவிதைகளை கிறுக்கிட கற்றுக்கொண்டான் 
கள்ளன்...!!!

பகல் முழுவதும் பிரித்து வைத்துவிடுகின்றேன்
என்று புலம்பி தவிக்கிறார்கள்
அதனால் எனக்கேன் இந்த பாவம் என்று 
இப்பொழுதெல்லாம் -என் போர்வைகளினால்
மூடிவிட்டே எழுகின்றேன்..!!!

நான்தான் தனியாகி போனாலும் காதலில்
இவர்கள் காதலிக்க கட்டியணைக்க நான்
சீக்கரமே உறங்கி போகின்றேன்...!!!

அவர்களாவது காதலித்து கொண்டே
வாழ்ந்துவிட்டு போகட்டும்..!!!

                                                 -பிசாசு-
நன்றி தமிழ் FM "உயிரின் ஓசை"

காத்திருப்பு

நாளிகைகள் நிமிஷங்களாய்

ஆனபோதும்- உன்
நினைவுகள் என்னுள்ளேதான்
வாழ்கின்றதடி..!!!

நிமிஷங்கள் மனித்தியாலங்களாய் நீண்ட போதும்- நீ
மட்டும்தான் மறந்தே போகவில்லை
என்னுள் இருந்து..!!!


ஒவ்வொரு மணித்துளியும் நாட்களாய்
நகர்ந்தபோதும் -நீ என்னை நிச்சயம் தேடி வருவாய்
என்றிருந்தேன்...!!!!

ஆனால்

அந்த நாட்களும் கிழமைகளாய் பூப்பெய்தியபோதும்
நீ வரவில்லை...
இருந்தும் எங்கோ ஓர் மூளையில்
என்னை நினைத்து வாழ்வாய்
என்றெண்ணினேன்..!!!

மாதங்கள் பல கடந்தும்
வருடங்களாய் உனை தேடி தேடி
தேய்ந்துபோனேன்- நீ
வரமாட்டாயா என்றேங்கிபோனேன்...!!!

வருடங்கள் தசாப்தங்களாய் தடம்பதித்து....!!!
நானோ -தவம் புரிந்த முனிவனாய் தாடியோடும்

நீயோ -இன்னொருவனின் மனைவியாய் வாரிசுகளோடும்..!!!

இந்த நாளிகைகளுக்காகவா
நானும்---- என் காதலும்
தசாப்தங்களாய் உனக்காக காத்திருந்தேன்..!!!!

-பிசாசு-
              

பிரித்துவிடாதே..!!1

காத்திருந்த காதல் என் கண்களில்
கானல்நீர் போல ஆனாலும்....!!
கண்மணியே உன் நினைவுகள் -என்னை
இரவில் தாலாட்டும்

பிறந்த குழந்தையின்
கைவிரல் தீண்டுகைபோல் -உன் ஸ்பரிசம்
என்னுயிர் உள்ளநாள் வரை மறந்துபோகாதடி சகி...!!
தனித்தீவுபோல் இன்று நானிருக்க
எனக்கென்னவோ துணையானது

உருவமில்லா கடவுளைப்போல்

உன் நினைவுகள் மட்டுமே..!!!
பிரித்துவிடாதே நினைவுகளை
பிரிந்துப்போன நிஜங்களை போல..!!!

                                                   பிசாசு

நினைவுகள்


நொடிக்கொரு முறை
உன் மடிதேடி என் காதல் 
ஓடி வந்த நினைவுகள் 
மறந்துவிட்டதா..???

சகியே..
இன்று 
தினமொரு முறையேனும்
கண்ணீரிலே கரைத்து
துடைத்துவிடுகின்றேன் 
நீ பிரிந்து சென்ற அந்த நாளின்
நினைவுகளை...!!!

அன்று ஆசைகளே
இல்லா ஆடவனாய் நான் வாழ்ந்த 
அந்த நாட்களில்
எனக்கு மீசை முளைக்கும் முன்பே
காதல் ஆசை காட்டியவளே
இன்றும் 
பசுமையாகவே 
படந்து கொண்டிருக்கின்றது
அந்த நினைவுகள்..!!!

காத்திருக்கின்றேன்
கண்மணியே என்றோ ஓர் நாள்
நீ என் கரம்பற்றுவாயென்று
ஆனால் இன்றுவரை 
கைரேகைகளே மீதமாய்
காட்சி தருகின்றது..!!!

உன் கொழுசொலியில்
அன்று பிறந்த என் கவிதைகள் கூட
எங்கே உன் மெட்டி ஒளியில்
மரணித்துவிடுமோ என்று
அதன் பார்வைகளை கூட
மறைத்தே வைத்து வளர்க்கின்றேன்
பாவம் அவையாவது
உயிருடன் திரியட்டுமடி
உன் நினைவுகளை சுமந்தபடி
என் நாட்குறிப்பேடுகளில்...!!!
                                                              -பிசாசு-

Friday, July 29, 2016

தரிசனம் தருவாயா..??

பல நாள் மௌனம்
உன்னை பார்க்காமல்
சில நாள் துன்பம்
உன் அருகில் இல்லாமல்..!!

ஒவ்வொரு நொடியும்
சிரித்து சிரித்து பேசி
சின்ன சின்னதாய்
குறும்புகள் பல செய்து
சிந்தை முழுவதும் -உன் 
நினைவுகளை சுமந்து
சுற்றிதிரிந்த என் நிமிடங்கள்
சிறைவைக்கப்பட்டுவிட்டது
நகரமுடியாமல்- கடவுள் தரிசனம்
காணாத பக்தனாய்..!!

உன் மௌனங்களின் 
கனங்களைக்கொண்ட
மறு பரிசீலனை செய்ய சொல்கிறது
என் விழிகள்

பாவம் அவை
எவ்வளவு நாட்கள்தான்
பார்வையிழந்து கிடக்கும்- உன்
தரிசனத்துக்காய்..!!!

                             -பிசாசு


யாகம்


என் காதலில் 
மோட்சம் வேண்டி 
நித்தமும் யாகம் செய்கின்றேன்
உன் நினைவுகள் எனும்
தீ மூட்டி...!!!

தீயணைப்பு படைவீரகளாய்
அடிக்கடி வந்து 
அணைத்துவிட்டு போகின்றது
உன் பிரிவு...!!!

என் இதயமேடையில் 
அமர்ந்து வீணை வாசிப்பதும்
நீதான்- அந்த சப்தங்களின் 
சந்தங்களைக் கொண்டுதான் 
என் காதலின் யாகத்திற்கு
மந்திரங்கள் சேர்க்கிறேன்...!!!

யாகம் முடியும் நேரம்
என் காதல் தாகம் தீருமோ..??
காதல் தாகம் தீரும் போது
என் மோக தேகம் தேயுமோ..??

தேகம் தேய்ந்து யாகம் செய்கிறேன்
என் காதல் தாகம் என்றும்
தீராதுபோயிருக்கட்டும்..!!!

                                              -பிசாசு-
சில்லென்று
சிந்தும்
சிறு பனிபோல் உன் சாரல் வீச..!!!
சில்லரையாய்
சிதறும்
சிரிப்போ என்னை நோக்கிதாக்க..!!
தீண்டாமலும்
சிதறாமலும்
சிக்கிக்கொள்ளாமலும்
உன் வாசம் என்னில் வந்து சேர...!!!
நான் சொக்கி போகிறேனடி
தங்கமே உன்
வலைந்து நெழிந்த கூந்தலில்..!!!
சிக்கனம் கானாத அந்த அழகும்
உன்னை தொற்றிகொண்டதன்
அதிசயம்தான் என்னவோ..???
அடியே பார்வதியே
ஆடை உடுத்திய பூவே
ஆட்டிப் படைக்கின்றாயடி இந்த
ஆறடி ஜீவனை
இம்சை கொடுத்தும் ரசித்துப் போகிறாயடி..!!!
                         -பிசாசு-

பட்டதெல்லாம் போதும் என 
பராமல் சென்றாய்
என்னை விட்டு..!!!

இன்று- உன் ஸ்பரிசம் தொட்ட 
தென்றல் பட்டு
"பட்டு போன என் காதல்"
மெல்லமாய்
மொட்டு விட துடிக்குதடி..!!!

கெட்டுப்போன மனம் என்று 
என்னை தட்டிவிட்டுச் செல்லாதே...
இது வெட்டுபட்டு கிடப்பதும்
கெட்டுபோய் கிடப்பதும் -உன் காதலுக்குதான் 
என்பதை மட்டும் மறக்காதே..!!!!
-பிசாசு-

பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

என்னவள் அழகு..!!!

நீ ஆற்றில் குளிக்கும் அழகை கண்டு
மீனை கவ்வும் நாரையும் தனை மறந்து
பாறைபோல் நிற்குதோ..!!!
நீ பூசும் மஞ்சளோடு சேரத்தான் 
அதிகாலை கதிரவனும்
மஞ்சள் நிறத்தில் உதிகிறானோ..!!!
உன் மேனி பட்டுபோகாமல் காக்க...
நீ சூடும் பட்டாக மாற...
பட்டு பூச்சிகள் தன் கூட்டுக்கள்
தவம் கிடக்குதோ..!!!
நீ கண்ணோரம் இடும் கண்மைக்கு
கருமை சேர்கத்தான்
கார்மேகம் வானில் கூடுதோ..!!!
உன்னை சேரும் வரம் வேண்டி
உன் பின்னலில் ஓர் இடம் தேடி
மின்னலும் உன் ஜன்னல் வழி
எட்டி பார்குதோ..!!!
நீ அணியும் வளையலில்
ஓர் வண்ணமாய் சேரத்தான்
வானவில்லும்
வளைந்து பூமிக்கு வர
துடிக்குதோ..!!!
தமிழ் மரபில் வளர்ந்த பெண்ணே....
தான் படைத்த இயற்கை அனைத்தும்
மயங்கி நிற்பதை கண்டு
இறைவனும் பூமிக்கு வந்தானோ????
உன் அழகை கண்டு அவனும் பேச்சற்று
சிலையாய் கோயிலில் நின்றானோ..!!!!

-பிசாசு-


திசைகள் எத்தனை
இருந்தும் என்ன பயன் ..??
உன் தரிசனம் தரவில்லை
அத்தனையும்... 
பயணிக்கிறேன் நான் 
புதியதொரு திசை தேடி...
அங்காவது உன் முகம் 

காண கிடைக்கும் என்று..!!
                                   -பிசாசு-
நீ
மௌனமான பிறகு,
நான்
நிறைய எழுதுவது
உனக்கும் சேர்த்துதான்
"நீ எனக்காய் எழுதுவதுபோல்
ஒரு கற்பனையில்
பல காதல் கவிதைகளை"
மொளனம் கலைத்து
ஒரு முறை வாசித்துவிடு
பெண்ணனே
அந்த கவிதைகளுக்காவேனும்..!!!!!
                           -பிசாசு-

--மீண்டுமொரு முறை மகளாய்--




பாலகிருஷ்ணன் சந்ரு's photo.


தாயே என் பிறப்பேன்
உனக்கோர் இறப்பாய் மாறியது??
பாவத்தின் மூட்டை தனை
ஏதும் உன் கருவில் சுமந்தாயோ??
இல்லை ஜனனிக்கப் போவது
ஒரு பாவியென்று நீ காலகணிதத்தில்
முன்றிபே அறிந்திருந்தாயோ???
புரியவில்லை எனக்கெதுவும்
இன்னமும் தெரியவில்லை..!!
அடியே புன்னியவதியே...
அன்று இரத்தத்தில் மிதந்து வந்த
இந்த பிண்டத்தை
நீ உன் முத்தத்திலேனும்
துடைத்தாயோ??
நானறியேன்
இல்லை அந்த முத்தத்தின்
முடிவில்தான் நீ மொத்தமாய்
போய்சேர்ந்தாயோ
அதையும்தான்
நானறியேன்..!!
பத்துமாதம்
நீ பத்தியம் காத்து
பக்குவமாய் என்னை
பெற்றெடுத்தது
பத்தினியே பாடையிலே போகத்தானா??
இல்லை யாரும் உன்னை
மகபேறு இல்லாதவள் என்று
மறுதழித்துவிட கூடாதென்றோ
என்னை பெற்றெடுத்து
கொடுத்துவிட்டு
மகராசியே நீ
தாயாகி பாதியிலே
போய்சேர்ந்தாய்??
எனக்கொரு சந்தேகம்
என் அச்சனின்
ஆசைக்கு உன் இளமையை
இறையாக்கி
ஐயிரண்டு மாதங்கள்
என்னை சுமந்து
உன் அய்யனின் ஆண்மைக்கு
வீரம் சேர்க்கவோ
இந்த பிள்ளையை ஈண்ரெடுத்து
அவன் கையில் கொடுத்துவிட்டு
பிரிந்து நீ சென்றாய்??
அம்மா உனக்கொன்று சொல்லவா??
உன் இறப்பு பற்றி
நான் முன்பே அறிந்திருந்தால்
நிச்சயம் நான்
பிறந்திருக்கவே மாட்டேனடி
ஒரு உருவமாய்..
கருவறையிலே
என்னை நானே
கரைத்திருப்பேனடி
தின்ம உதிரமாய்..!!
இன்றெனக்கு
“பிறக்கும்போதே தாயவளை
முழுங்கிட்டு பொறந்தவள்”
என்றொரு புதுபெயர் கூட
வைத்துவிட்டார்கள்...!!
ஆனால்
அவர்களுக்கும் கூட
தெரியாது இது எனக்காய் நீ
பரிசளித்துவிட்டுச்சென்ற
பிறவிப்பெயரென்று..!!
என்ன தாயே…!!!
என் உதடுகள் காய்ந்து கிடக்கின்றது
உன் மார்பு காம்புகளை சுவைக்காது..
நாவரண்டு போய் தவிக்கின்றது
ஒரு சொட்டு தாய்பால்
சுவைகூட ருசிக்காது..!
!
என்ன செய்வதம்மா???
வெந்நீரிலே என்னை குளியாட்டி
உன் முந்தானையில்
என் முகம் துடைத்து
என் பட்டுமேனியில் சற்று உன் கைப்பட்டதும்
நான் துள்ளிக்குதிக்க....
ஒடிகொலன் போட்டு
நீயும் என்னோடு
சேர்ந்து குதிக்கவும்
என்னருகில் இல்லையே தாயே…!!!
ஒருசேரு சவ்வரிசி
கருக காய்ச்செடுத்து
வசம்பையும் அதில் கொஞ்சமாய்
தட்டிபோட்டு
சூடாரி போவதற்குள்
தேங்காய் சிரட்டையில் ஊற்றி
காயவைத்த எடுத்த
அந்த கருப்பு பொட்டை
என் நெற்றியிலே
நிலாவட்டமாய் வஞ்சகமில்லாமல்
வச்சி அழகு பார்த்து
கண்பட்டுவிடுமோ என்று நினைத்து
கண்ணத்திலும் மூணுபுள்ளி
சேர்த்துவைத்து
என்னழகில் நீ சொக்கி நிற்கும்
உன் அழகை நான் இரசிக்க
கொடுத்துவைக்கவில்லையே தாயே..!!
ஏன்டி ராசாத்தி...!!!
தத்தி தத்தி நடக்கும் வயதில்
சட்டென்று நான் தடுக்கிவிழ
நீ வேகம◌ாய் ஓடிவந்து
உன் உயிர் பதைத்து
என்னை உன் மார்போடு அணைத்துக்கொள்ளும்
அந்த அன்பின் அரவணைப்பை 
கொடுக்காமலே சென்றுவிட்டாய் நீயே..!!
உத்தமியே..!!
நான் செய்யும் சுட்டிதனம் எல்லாம்
திட்டி திட்டி இரசிக்கத்தான்
கொடுத்துவைக்கவில்லை
உனக்கு..!!!
அதானால்தான் என்னவோ
நான் சுட்டித்தனம்
ஏதும் செய்யாது வளர்ந்துவிட்டேன்..!!
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனையோ
ஏக்கங்கள் என்னுள் நமக்காக
பரவாயில்லை தாயே..
நம் ஏக்கங்கள் தீர்ந்திட
வரமொன்று கேட்கிறேன்
மீண்டும் நீ பிறக்கவேண்டும்
என் மகளாய்
அவளிடத்தில் நானிருந்து
உன் ஆசையெல்லாம்
தீர்த்துக்கொள்ளவேண்டும்
மீண்டும் உனக்கொரு மகளாய்..!!!!
பாலகிருஷ்ணன் சந்ரு
நன்றி தமிழ் FM இன் "பொக்கிஷம்"

காதல் பைத்தியம்


கொஞ்சம் தூரமாய்
தவம் கொண்ட முனிவனாய்
தாடிக்குள் ஒளிந்துக்கொண்ட முகத்தின்
மௌனத்தின் ஜனனங்களுக்குள்
எத்தணையோ மரணங்கள்...!!!
கண்கள் இரண்டிலும்
கனவுகளின் கதவடைப்பு தெரிகின்றது
நெற்றியின் நடுவில்
அவமானத்தின் தழும்புகளின்
அடையாளம் தெரிகின்றது...!!!
மேலாடை அவனது
மேனியேயானது..
கீழாடையோ கொஞ்சம் அதிகமாய்
கிழிந்தே போய் கிடந்தது..!!!
மழைதுளிகள் மட்டும்
அவனை தொடுகின்றது
வெயிலும் ஏனோ அவனை
வெறுத்தே எறிக்கின்றது..!!!
இருந்தும் அவனது உதடுகள்
உச்சரிப்பில் நச்சரிக்கிறது மழலையாய்
ஏதோ ஒன்றை..!!!
கறுத்த மேனியில்
ஆங்காங்கே கல்வெட்டுகளாய்
பால சதை தட்டுகள்..!!
இதயத்தில் சுமந்தது
போதாதென்று அவன் நெஞ்சிலும் சுமக்கின்றாய்
"கண்மணி" அவள் பெயரை..!!!
இப்போத உணர்கின்றேன்
இவன் காதலால்தான் இப்படியாகினானோ??
இல்லை காதலியால் இப்படியாக்கப்பட்டானோ??
யாரிவன்??
யாருக்கு பிறந்தான் இவன்??
இலட்சியங்கள் கொண்டு
சாதிக்க வேண்டிய வயதில்
இலட்சணமே இல்லாமல்
தொலைந்து போனதே இவன் வாழ்வு..!!
காதலால் வாழ்வை தொலைத்தானா???
மோதலால் முகம் கிழிந்தானா???
ஆதலால் இப்படியானானோ???
தொலைத்ததை அறிவானோ??
தொலைந்ததை மீண்டும் அடைவானோ??

உணர்வாயா நண்பா..???

பாலகிருஷ்ணன் சந்ரு's photo.


இளைஞனே
துள்ளும் கலைஞனே
தூய தமிழனா நீ..???
Hai முதல்
Bye வரை நீ 
ஆங்கிலத்திலேயே அங்கலாய்கின்றாய்
என்றாவது
வணக்கமும் நன்றியும்
சொல்லியிருக்கின்றாயா??
தாயை கொன்றுவிட்டு நீ
தாய்மடி தேடுவதை யாதென்று நான் சொல்ல..!!
உதிரம் தந்த உறவுகளை நீ
உதறுகின்றாய்
உள்ளத்தில் முகமறியா எவரையோ
உறவென்கிறாய்..!!
உணர்வென்கிறாய்..!!!
உயிரும் விடுகின்றாய்..!!!
உன் உணர்வுகள் கொலையுண்டால்
உதிரத்து உறவுகள்தான்- உன்
உயிர்தாங்கும்..!!!
காதலிக்கிறாய்
கனவு காண்கின்றாய் நீயும்
மனிதன் என்பதினால்தானே..!!!
பார்த்து பேசி
மனம் மாத்தி
உணர்ச்சி தீ பந்தங்களில்
உடல்வேர்வை குளித்து
முத்தங்களில் துடைத்தெடுப்பதா
உன் காதல்..???
சத்தியமாய் சொல்கின்றேன்
உள் உணர்வாய் நேசி...!!
உன் உயிராய் சுவாசி..!!
நின் உலகமாய் யாசி...!!
அப்போது நீயடைவாய்
காதலெனும் கடவுளின்
சந்நிதியை..!!!
ஓடுகின்றாய்- நீ
பாடாத பாடும் படுகின்றாய்..!!!
ஓய்வில்லாமல்
உழைத்து ஓடாயும் தேய்ந்து
போகின்றாய்...!!!
என்றாவத ஒரு முறையேனும்
தியானித்திருக்கின்றாயா??
சிந்தனைகளுக்கு கொஞ்சம்
இறக்கை கட்டி விட்டுருக்கின்றாயா???
இல்லையென்பது உண்மையானால்
இன்றே... இப்பொழுதே...
தியானத்தில் மூழ்கு- உன்
சிந்தனைகளுக்கு தானாகவே
சிறகு முளைக்கும்...!!!
விடிகின்ற பொழுதுகள்
விடிவதில்லை என்னுள்..!!!
முடிகின்ற மாலைகள்
புது விடியலை தருவதில்லை..!!!
அது முடிவதில்லை
இது நடப்பதில்லை
எதிலும் ஒன்றுமேயில்லை
என்றே ஒலிக்கின்றது - உன்
உள்ள குமுறல்கள்..!!!
இனியாவது சிந்திக்கட்டும்..
முடியாததொன்றுமில்லை
இயலாமையென்று
இங்கு எதுவுமில்லை
கைசேரா கனவுகள்- உன்
இரவுக்கும் கூட இல்லையென்று..!!!
இன்பம் பாதியாய்
துன்பம் பாதியாய்
பிரிந்த உன்- வாழ்க்கையை
இணைத்திடு நீ உன் அன்பால்
அப்போது நீயறிவாய்
"கடவுள் தந்த வாழ்வு
அழகானதென்று"
பாலகிருஷ்ணன் சந்ரு
(நன்றி தமிழ் FM இன் "பொக்கிஷம்"

தாயவள்



உலகம் உயிர் பெற மனித வாழ்வு
நிலை பெற- நமக்கு
உடல் தந்து
உயிர் தந்து- வாழ்க்கை தந்து
அந்த வாழ்க்கைகாய்
தினம் தன்னுயிர்
சிந்தும் அன்பின்
அடையாளம் "தாய்"


அப்படி பட்டவளுக்காய்
வாழ்வதும்
பிறார்த்திப்பதும் ஏன்
உயிர் விடுவதும் சுகமே..!!!

அழுக்காய் இருந்த என்னை
அழகாய் வளர்த்தவள்...!!

பல நேரம் தான் பசித்திருந்து
என்னை புஷிக்க வைத்தவள்..!!

தன் முதுகில் கூடை சுமந்து
என்னை புத்தகம் சுமக்க வைத்தவள்
அந்த பாரத்தை கூட அவள் சுமக்க..!!

தான் கந்தை துணியுடுத்தியபோதும்
என்னை காற்சட்டை உடுத்தி
அழகு பார்த்தவள்..!!!

நானின்று வாழ தன் வாழ்வை கொடுத்தவள்
அவளுக்காய் வாழ்வதும்
அவளோடு வாழ்வதும்
நான் செய்யும் சிறு கைமாறுதானே..!!!

என் பிரியமானவளே...

என் பிரியங்களையெல்லாம் 
உனக்காய் சேர்த்து வைத்துக்கொண்டு
காத்திருக்கின்றேன் - உன் பிரியங்களோடு
குடும்பம் நடத்த..!!!
நீ மட்டும்
எனக்காய் பிரியாத வரம் ஒன்றை
தந்துவிடு போதும்- என்
உயிர் பிரியும் வரை
உன் உணர்வுகளிலே நான்
கூடு கட்டி வாழ்வேனடி உனக்காய்..!!!
உரிமையானவளே..!!!
பிரிந்து இருந்தது போதும்
என் உயிர் கொதித்ததும்
என்னுள் காயம்...
மீண்டும் நீ
திரும்பிவந்துவிடு
"உனது பிரியமானவன் நான் மட்டும்"தான்
என்று ஊருக்கே சொல்லிவிடு
என்றும் பிரியாது வாழ்ந்திடுவோம்..!!
இப்படிக்கு
உண்மையானவன்..
                                        -பிசாசு-

ஏனடி வந்தாய்


பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

ஏனடி வந்தாய் 
சருகாகிக் கிடந்த என் இதயத்தில்
காதலை பூக்கச்செய்து
உயிர் நோக பறித்துச் செல்லத்தான்
வந்தாயா..???


வெறுமையாய்
கிடந்த என் வாழ்க்கை தாளில்
கவிதைகள் ஆயிரம் எழுதி
படித்திடும் முன்பே கிழித்தெறிந்திட
வந்தாயா..???

குருடென கிடந்த என் கண்களுக்கு
பார்வை கொடுத்து வழிக்காட்டி
பயணங்கள் தொடங்கும் முன்
விழிகளை பிடுங்கிட
வந்தாயா.???

கல்லென கிடந்த -என்
கனவுகளை எடுத்து சிலையென
செதுக்கி உருகொடுத்து உருவாக்கிவிட்டு
உயிர் கொடுக்கும் நேரம் பார்த்து
உடைத்திட வந்தாயா..???

உறைந்து கிடந்த
உதிரத்தை கரைய வைத்து
உணர்வூட்டி - அது உடலோடு
உறவாடும் முன்பே
பொசுக்கிட வந்தாயா..????

முடமென கிடந்த எனக்கு
உயிரூட்டி நடைபயிலும் முன்பே
மண்ணுக்குள் புதைத்திட வந்தாயா..???

ஏனடி வந்தாய் நீ
எதற்காக என்னை விட்டுச் சென்றாய்???

என் சிந்தனைகளை சிறையெடுக்கவா..??
உறவாடி உயிர் பறிக்கவா..???
ஏனடி வந்தாய் நீ..???

முத்தம்



இமைகளை மூடி
இதழ்களை குவித்து
விரல்களை அணைத்து
இதயத்தை விரித்து
சுவாசத்திற்கு புது வாசம்
சேர்த்து- இளம் பறவைகளுக்கு
சிறகு கொடுத்து-
இரத்தத்தின் சாற்றைக்கொண்டு
நரம்புகளை
எல்லாம் அறுத்து -நீ
என்னில்
வரைந்த அற்புத ஓவியம்
உன் "முத்தம்"


நான் காத்திருக்கிறேன்
மீண்டும் ஒரு ஓவியத்திற்காக

மலையகத்தவர்கள் நாங்கள்



மலை முகடுகளில்

மழை நீராய் தவழும்
நாங்கள் "மலையகத்தவர்"

மலையகம்
தந்தது எமக்கு வாழ்வு- அதை
மறைத்து வைத்தன சில
நாவு..!!!


கொழுந்து மணிகளை
பண மணிகளாய்
மாற்றும் எம் கைகள் நாளும்..!!
அதையும் கூட
ஒலித்து வைக்கும் சில
ச(கெ)ட்ட பைகள் யாவும்..!!!

இரவுகள் முழுதும்
கனவுகள்தான்- அந்த
கனவிலும் கூட- எம்
கற்பனைகள்தான்

ஆயிரம் வாக்குறுதிகள்
எம் கண்முன்னே
"ஆழமாய் சிந்திப்பேன்" என்ற
அரசியல் வாதியால்..!!!

அந்த வாக்குறுதிகள்
எல்லாம் வாக்குப்பெட்டிக்குள்
வரைவிலக்கணமாய் போக
எம் வாழ்வு மட்டும்
தேர்தலில் செல்லா ஓட்டாய்
ஒதுக்கப்பட்டது..!!!

இனியும் வேண்டாம்
வாக்குறுதிகள் எல்லாம்
வஞ்சனை செய்யும்
வானரங்களிடம் இருந்து..!!!

உயிர்த்தெழுந்துவிடடோம்
உதிரத்தை வியர்வையாய்
உதிர்த்த நாங்கள்..
இனி ஒருபோதும்
மலைத்துப்போக மாட்டோம்
காரணம்
"மலையகத்தவர்கள்"
நாங்கள்
உன்னை
நினைக்க வைத்து
என்னை
நினைவிழக்க செய்யும்
தனிமையை -நான் 
வெறுக்கிறேன்…!!
என்னை
மறக்க வைத்து
உன்னை
அணைக்க வைக்கும்
அந்த இனிமையை
மீண்டும் ஏற்கின்றேன்..!!!

-பிசாசு-

வருகை..!!!

காற்றாய் உன்னை தேடி வருவேன்
பூக்களின் தேவதை நீயானால்
வாழ்க்கைக்கு
வாசம் கூட்டிட..!!!


இரவாய் உன்னை நாடி வருவேன்
நிலவாய் நீ அழகானால்
நிலாச்சோறு ஊற்றிட..!!



குழந்தையாய் கைவீசி ஓடி வருவேன்
தாயாக நீயானால்
மடிசாய்ந்து
உறங்கிட..!!!


கார்மேகமாய் தவழ்ந்து வருவேன்
செம்மண்ணாய் நீயானால்
மழைத்துளியால்
ஈரமாக்கிட...!!!


கடல் அலையாய் புறண்டு வருவேன்
கரையாய் நீ ஒதுங்கினால்
கிழிஞ்சல்களை
சேர்த்திட.!!!


இவையாவும் தீர்ந்துபோக


கவிதையோடு வருவேன்
உயிரே நீயானால்
காதலாய் கலந்து - உன்னோடு
வாழ்ந்திட..!!!!


பிசாசு

அட குலசாமி நீயே சொல்லு....!!!!


மனந்தும் பல நாள்
மனம் நொந்தது 
மகப்பேறு இல்லை என்று
லெச்சுமிக்கு....

ஊருக்குள் இவள் உலக அழகி ஐஸ்வரியா
உள்ளத்தில் இவள் அன்னை திரேஷா
கணவனுக்கு இவள் கன்னகி
மாமியாருக்கோ இவள் ஒரு ''மலடி"

பூவாக பிறந்தாளோ அன்று 
எல்லோரும் பூரித்து போக
பூ இன்று கருகி சருகாகி போனதோ???
காரணம்தான் கண்ணீரோ????

போகாத கோவில் இல்ல பொம்பள இவ
வேண்டாத வேண்டுதல் இல்ல

மண்சோறு மண்டியிட்டு 
கண்ணீரை உப்பு துளியாயிட்டு
கையேந்தி மடி பிச்சை கேட்கிறாள் வரம் தரும் லெச்சுமி...

தான் செய்த பாவம் என்ன பாவியாய்
பொறந்தது தானென்ன....!!!
இதையெண்ணி எண்ணி இவ அழுகாத
நாளுதானென்ன....!!!

''பரம்பரைய வளர்க பாவி இவ வயித்துல
ஒரு புளு பூச்சி கூட இல்லையே"
பாவி பாவி என் பொளம்புரா இவ அத்த

-இத கேட்டு கேட்டு...

தாங்காத இவ மனசு
தற்கொலைக்கு தூண்டுறப்ப 
ஆத்தோடு போவ ஓடோடி போரா 
ஒலகத்த வெறுத்து....!!!!

-பாதியில....

தல சுத்தி தடுக்கி விழ
மயங்கிபோறா மண்ணுமேல

-வழியில-

கொழுந்தெடுத்து சுமந்த வந்த கருபாயக்கா
கண்டா இந்த காட்சிய..!!!
ஓடோடி இவ வந்து ஐய்யய்யோ என்றழர
பக்கத்து மல கங்காணி 
பதறி போய் பக்கத்துல வர
தண்ணிய தெளிச்சி லெச்சுமிய எழுப்ப
எழுந்தவள கூட்டி போறா ஆஸ்பத்திரிக்கு...

என்னாச்சுனு நாடி புடிச்சி பாத்த ஆறடி மனுசே
அடடா இவ உன்டாயிட்டானு சொல்ல
தன்னையே மறந்து பட்டாம் பூச்சியா பறந்தா
"நன்றி"னு ஒரு வார்த்தையோடு

-வீட்டுக்கு போனா-

மாமி மூதேவினு மூஞ்ச திருப்ப
காலுல விழுந்த சீதேவி "உன்டாகிட்டேனு"  சொல்ல

நாலுவருசத்துக்கு பொறகு தோள் தொட்டு தூக்கி
'' மகளேனுசிரிச்சா இந்த மாமியா சி(கி)றுக்கி...!!!

பத்து மாசமா மாங்காவும் சாம்பலுமா திண்ண இவளுக்கு
சரசுனு பொறந்தா ஒருத்தி சந்ததிய வளக்க

மலடிய கொண்ணுட்டு தாயா இவள பார்க்க
லெச்சிமி நெனச்சா....
" குலசாமி உனக்கு நா வச்ச நேத்தி கடன் 
நெனவுல எனக்கிருக்கு"
ஆடு வெட்டி பூச தாரே...!!!!!

பலமில்லா இவ உடம்பு 
பலமானது கருசுமக்க நாலு வருசம்..

ஆனால் இது தெரியாத இவ மாமியா
மூதேவி..... மலடினு.... சொல்ல
இன்னும் எத்தனை எத்தனை
மாமியார் ஊருக்குள் இப்படியோ????

அட குலசாமி நீயே சொல்லு....!!!!

-பிசாசு-

நனறி தமிழ் FM "பொக்கிஷம்"

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...