Wednesday, December 21, 2016

வலிகளின் குத்தகை..!!!

துருபிடித்த இரும்புகளாய்
இற்றுபோனதோயென
உடையும்படி
உயிரற்றுப்போய் கிடக்கும் 
கால்களோடும்


இடியும் மின்னலும்
சேர்ந்து கொழுத்திய தீயாய்
எரிந்துகொண்டிருக்கும் அடிவயிற்றில்
உயிர்கொல்லும் 
வலியொன்றோடும்


கடவுளும் தூரமாயிருக்க
தீண்டாமை நான் என்று சொல்லியிருக்க
ஓரமாய் ஒதுங்கிருக்கியிருக்கிறாள்.!!!


தூரப்பயணங்கள் துன்பமாகின்றது
இன்பம் கொள்வதென்பதே
பெரும் மாயமானது 
இவளுக்கு..!!!


ஒரு நாளைக்கு பல முறை
ரத்த கறைபடிந்த அதை 
மாற்றியாக வேண்டி
உடல் குழித்து உயிர் வெறுத்து
சாவிலும் வாழவும்
வாழ்விலும் சாகவும்
யார் விட்ட சாபம் இவளுக்கு
அந்த மூன்று நாட்களில்..???


ஆண்மையும்
தோற்றுதான் போகவேண்டும்
இவளின் வலிகளுக்கும்
தியாகத்திற்கும்..!!!


அதுமட்டுமா
அடித்து துவைத்து அலசி
யார் கண்ணுக்கும் தெரியாது
காயவைத்தெடுத்த
அழியாதிருக்கும் கறைபடிந்த
துணிகளை அடுக்கி வைத்து
அடுத்த மாதமும் பயன்படுத்த
காத்திருக்கும் பெண்களும்தான்
எவ்வளவோ..???

பெண் என்பவள் 
பேரின்ப பெட்டகம் மட்டுமா..??
வேர் முதல் நுனிவரை
வலிகளின் குத்தகை..!!!
-பிசாசு-

Monday, December 19, 2016

காதல் நீ..!!

உன் அன்பெனக்கு 
எவ்வளவு முக்கியமானது
உணர்ந்தேன் உன் சிறு பிரிவில்....!!

உடல் பிளந்து உயிர் அளந்து
இதயத்தில் நுழைந்தவளே
உனை தாண்டி -என் 
சிந்தனை போகவில்லை..!!!


யார் யாரோ எனக்கென்று
கைகோர்த்து நடக்க 
வலையில் நழுவிய மீனாய்
பாய்ந்தோடி போக 
திசை மாறி நின்றேன்- நீ வந்து 
என் திசை காட்டினாய்
எனையும் மாற்றினாய்..!!!


காதலிக்கின்றோம்
கனவுகளில் தொலைந்து 
போகின்றோம்
மீண்டும் நாம் மடிமாறி 
பிறக்கின்றோம்

சேர்வதாயினும் நாமகவே
பிரிவதாயினும் 
உயிராகவேயென்று
உள்ளத்தில் உயிலெழுதி 
வைக்கின்றோம்..!!!


இணைந்திருக்கும் தருணங்களில்
நீ எனக்கு வெளியே
இருக்கிறாய்...!!
சிறு ஊடலில்
எனக்குள்ளேயே இருந்து
உன் நினைவு தாளத்திற்கு
என்னை ஆட வைக்கிறாய்


நீ அடிக்கடி
மேகத்துள் நிலவாய் 
ஒளிந்துகொண்டு
உனை தேடவும் வைக்கின்றாய்…!!!!
காதலில் ஏனடி இப்படி எனை போட்டு
வதைக்கின்றாய்..????
-பிசாசு-



Saturday, December 17, 2016

நாளை உன் முன்னே..!!!

உயிர் மெய் 
எழுத்துகளை  எடுத்து
உயிரான நீயே என் மெய்யென்று
கிறுக்கி வைக்கின்றேன்
உறவே 
உன் நினைவில் சில
கவிதைகள் தினம் தினம்..!!!

சித்தமதில் 
நீ நுழைய நித்தம் நான்
கனவுக்குள் விழுந்தேன்..!!

பத்திரமாய் உனை நான் பத்தியபடுத்த
மொத்தமாய் நான் 
எழுந்தேன் உன்னவனாக..!!!


கவிஞர்கள் கலைஞர்கள்
எல்லாம் எழுதி வைத்த 
கதைகளில் காணதொரு
இன்பம் கண்டேனடி
புன்னகைத்து சிக்கி திக்கி வரும்- உன்
வார்த்தைகளில்

ஓ… இதுதான் காதல் கிறுக்கா..???


அழகிகள் ஓராயிரம் சொல்ல கேட்டிருக்கின்றேன்
தேவலோக ரதிகளை பற்றியும்
கொஞ்சம் வாசித்திருக்கின்றேன்
தேவதைகளும் பூமிக்கு வந்து போகும்
மாய கதைகளையும் அறிந்திருக்கின்றேன்
எல்லாமே பொய்யாய் போக -நீ
வந்தாயடி தேரழகே 
என் முன்னே மெய்யாய்..!!!



நிலவின் முகம்
கார்மேகம்
வண்ணத்து பூச்சிகளின் ஊர்வலம்
வண்ணசோலையின் வாசனை
இவையெல்லாம் ஒன்றாய் கண்ட இன்பம் 
நீ..!!!

சொல்லடுக்கி சொல்லப்போனால்
சொல்லிக்கொண்டே இருப்பேன்
தொல்லை தரும் வரிகளும் கூட
செல்லமாய் உனை கொஞ்ச சொல்வேன்..!!!



சேமித்த உண்டியல் காசாய்
நினைவுகள் காதலில் நிரம்பியிருக்க -நான்
காதருகே கொண்டுவந்து குலுக்க
கவிதைகளும் உனை காதல் செய்வதாய்
சொல்ல கேட்கின்றேன்..!!
நாளை உன் முன்னே காதலை
உடைக்க போகின்றேன்
சில்லரையாய் சிதறலாம்
உன் இதயவறையை 
நான் வெல்லலாம்

ஆகையால் இன்று இங்கு
முற்று வைக்கிறேன்….!!!
-பிசாசு-

Thursday, December 15, 2016

காதலில்.....!!!!!

அன்றுனை தாமியில் பார்த்தேன்
அடுத்த நொடி எனை மறந்தேன்..!!
இனி என்றுனை பார்ப்பேன் என்றே
ஏங்கியே நான் கிடந்தேன்..!!!

உன் விழி அம்பு என் வழி வந்து தாக்கி
வீழ்ந்து கிடக்கும் என் இதயம்
துடிப்பதை மறுக்குமா.???
உனை நினைப்பதைதான் நிறுத்துமா..???

வானத்து நிலவாய் நீ சிரித்தும்
சோறுண்ணும் சிறு பிள்ளையாய் 
நானிங்கிருந்தும்
குறுகிட முடியா இடைவெளியிது
சேர்ந்திட முடியா தூரமது… புரிந்தும்..
தீயை தொடும் மழலையாய்- உனை
நான் தீண்டினேன்..!!!



இடைவெளி பனியென உருக
மனமது இருப்பிடம் மாற
இணைந்தது புது காதல்..!!!

நிமிடங்கள் ஒவ்வொன்றும் 
கற்பனையில் குளிக்க
தெப்பமாய் நனைந்து நாட்கள்..!!!

சந்திக்கவே தூண்டி எனை தினம் நிந்தித்தது
உனை தீண்டி என்னுடல் தாண்டும் காற்றும்..!!


பனி மலையும் மீன் பாடும் தேனாடும்
ஒன்றோடொன்று கலக்க
புது உலகொன்று பிறந்தது- காதல் இதுதான்
என்றது..!!!


உடல்தாண்டி உளம் சேர்ந்த காதல்
உயிரோடி மோட்சம் காணுமோ..???
யாரறிவார்..??

சுற்றி நின்று தீ மூட்டும்
உயர்வு தாழ்வுகளுக்கு நடுவில்
உருகி உருகி காதலிக்கும் நம் இதயங்கள்
இணையுமா இல்லை பிரியுமா
தெரியாது தவித்திருக்கு இன்னும்
அதிகமாய் காதலிக்கிறது காதல் நம்மை..!!!

நிலவாய் இருக்கும் நீ
வசிக்க வருவாயா என்னில்??
சிறு பிள்ளையாய் நான் வசிக்கவாரவா 
நிலவில்..???
முடிவில்லா தூரமாயுமில்லை
இது பிரிந்திடும் நூலாயுமில்லை
காதல் இனி என்றும் அழிவதாயுமில்லை..!!!
-பிசாசு-

Thursday, December 8, 2016

நீ எனை மாற்றினாய் நீயாக..!!

மலர் மாலை
பூ மழை
வெண்பனிக் கூட்டம்
சேர்ந்து நடந்து வந்ததாய்
உன் தோற்றம்..!!!

கடலலை
கரை நுரை
கிழிஞ்சல்களின் கூட்டம்
கூடி நின்றதாய்
உன் ஏற்ற இறக்கம்..!!!

நீண்ட வானம்
முழு நிலவு
நட்ச்சதிரங்களின் கூட்டம்
ஒட்டிக்கொண்டதாய்
உன் வதனம்..!!!


மலை முகடு
மாலை நேர சூரியன்
மறைந்து கொள்ளும் காட்சியாய்
உன் மாரழகு..!!


மழலை புன்னகை
மந்திர வார்த்தைகள்
கூட்டு ஒப்பந்தம் செய்யததாய்
உன் பேச்சு..!!!


நடைபழகும் குழந்தையாய் -நான்
இடையழகு கொண்ட குமரியாய் -நீ
இடை பிடித்து 

இடம் எடுத்து 
தடம் பதிப்பதாய் -காதல்..!!!
-பிசாசு-

Saturday, December 3, 2016

ஏ9..!!!

உலக தமிழர்களின் அடையாளப்பாதை
புத்தனில் தொடங்கி  கந்தனில் முடியும் பாதை

அடிக்கடி மூடுபாதையில்
வராலாறு படைத்திருக்கின்றது
திண்பண்டங்களும் சிறு தேங்காயும்
வாகன விலைக்கு விற்றுபோயிருக்கின்றது


செந்நாட்டு அரசன்போல் பாதுகாப்பில்
நீண்டு வலைந்துகிடக்கின்றது.
அன்று யுத்தத்தின் இரத்தத்தில்….
இன்று நாளுக்கு இரண்டாய்
வீதி விபத்தின் கோரத்தில்…
என்றும் அடிக்கடி இரத்த வெள்ளத்தில்
குளித்துக்கிடக்கின்றது..!!!




ஊடகங்களில் வாயிலும்
வெளிநாட்டுக் காரன் கண்ணிலும் அடிக்கடி
போதையேற்றிய பாதை
வீர மங்கைகள் எம்பெண்கள் உலாவி திரிந்த
பெருமைகொண்ட பாதை..!!!


யுத்தத்தின் பிடியில் பெயர் பெற்று
செம்மண் புழுதி காற்றில் கலந்து
வானளவு உயர்ந்த பாதை..
வானவூர்திகளும் வாகனத்துள் ஒழிந்து
பயணித்த பாதை..!!!


வரலாற்று கதைகளெல்லாம்
கடந்து வரும்- மதம்கொண்டு மனம் கெட்ட
மனிதரின் மனதையும் சொல்லிவரும்
இந்த பாதை…!!!!




செல்களின் செதுக்கள்களில்
அன்று ஆயிரமாயிரம் உருக்கள் பெற்றது
வடக்கின் வசந்தத்தில்
இன்று செப்பணிட்டு சிரித்து
உள்ளே விம்மலுடன் விசும்புகினறது..!!!


காவலரண்களுக்கு இங்கு பஞ்சமில்லை
ஓமந்தை முதல்
துரையப்பா மைதானம் வரை..!!!
மனித ஓலங்கள் குறையவில்லை
தமிழர் மேளம் முழங்கிடும் வரை..!!!


தமிழ்ச்சுவை கொண்ட 
விருந்தகங்களுக்கு பஞ்சமில்லை
சிங்கள மொழியும் 
தங்கசிலை புத்தனையும்
தம்புள்ளையில் தரிசிக்க 
முடியாது போவதுமில்லை..!!!


வீதியோர விளக்குகள்
கிளிநொச்சியில் ஜொலிக்கிறது
ஏ9 தாண்டி உள்ளே சென்றால்
கோவில்களும் செல்லடியில்
ஊனமாய் கிடக்கினறது..!!!


உடைந்த நீர்தாங்கி
அடையாளமாகி போனது
தெய்வங்களும் அவமானத்தில்
தூக்கிட்டுக்கொண்டது..???



இலங்கையின் கழுத்தின் அசலக்க வீரனின்
சிலை உயர்ந்து நிற்கின்றது
தமிழுக்காய் தன்னுயிர் தியாகித்த
வீரர்களின் உருவங்கள் எல்லாம்
மண்ணோடு மண்ணாய் 
புதைக்கப்பட்டுவிட்டது..!!!



முள்ளிவாய்கால் போய்வந்த வைரமும்
இதன் வழியே பயணிக்கவில்லையா..???
இவர் வரிகளில் இதையெழுத
மறந்து போனதும் தெரியவில்லையா..???



மாண்டு மடிந்த வரலாறுகளும்
மறந்துபோகுமா..??
மீண்டு எழுந்து நின்று
புது காவியம் எழுத அது மறைந்துபோகுமா..???
தீது செய்த மாற்றான் வாழ்வு செழிக்குமா..??
முள்வேளிக்குள்
முடங்கிக்கிடந்த தமிழர்தம் வாழ்வு
முடிந்து போகுமா..???


இது வெறும் பாதையல்ல
வலிகளின் வரிகளையும்
துரோக விதிகளின் வெறுப்புக்களையும்
சுமந்துக்கொண்டு கிடக்கும்
உலக தமிழர்களின் அடையாளப்பாதை…!!!

-பிசாசு- தமிழன்



Wednesday, November 23, 2016

வேலிகளை இழந்த வயல் நிலங்கள்

தேடித் தேடி கட்டிய சிறு கூடு அது
அன்புக்கும் ஆசைக்கும் பஞ்சமில்லா
சொர்க்கமது..!!!
வாசங்கள் வீசும் பூக்களும் தோற்றுப்போகும்
அழகிய நந்தவன சோலையது..!!!

ஆசைக்கொன்று ஆஸ்த்திக்கொன்று
அற்புதமாய் செதுக்கி வைத்த கோவிலது..!!!
பார்பவரெல்லாம் பழகிப்பார்க ஏங்கும்
அன்பான உறவுகள் வாழும் இல்லமது..!!!

சோறோடு பாசம் பினைந்து ஊட்டியவள் தாய்
உறவோடு அறிவூட்டி ஆழாக்கியவன் தந்தை
சண்டையிலும் சமரசம் பேசும் சுட்டியவள்
கடமையையும் காதலிக்கும் கன்னியமவன்..!!!

நூறாண்டு வாழ தவம் கொண்ட வாழ்வில்
வாரிசுகளுக்கு வரம் கொடுத்துவிட்டு
பாதியில் சிறகுதொடுத்து
போகின்றன கோவிலின் பலிபீடங்கள்…!!!

விதைகளாய் தூவி 
வேலியாய் பயிர் காத்த இரு உயிர்கள் 
விடைபெற்று போக
வாடி நிற்கின்றன
ஆசையும் ஆஸ்த்தியும் வேலியை பார்த்து..!!!
--பிசாசு-

Monday, November 21, 2016

அவளோடு ஒரு கனவு

ஓர் சந்திப்பில்
காதல் மையல் கொண்டு
மேகத்துள் ஒளிந்த நிலவாய்- எனக்குள் நீ
மறைய நான் மயங்கித்தான் போனேன்
உன் மடியழகில்..!!!

விரலோடு விரல் கோர்த்த கணம்
உயிரோடு உயிர் சேர்த்து கட்டிவைத்தது
காதல்..!!!

மாரோடு நீ சாய மறுகணமே
நான் தாயாக மாற
தாலட்டும் கூட தானாய் பிறந்தது..!!!


உச்சிமுதல் பாதல் வரை
எத்தனை மச்சங்கள் விரல்கள் தேடலில்
குதிக்க- கண்களும் கூடவே
கணக்கெடுப்புக்களில்
தவறவில்லை..!!!


நீ அழகி
என்பதை நானறிவேன்
பேரழகியும் நீயே தான்
வெட்கத்தில் இன்றறிந்தேன்..!!!

காற்று பட்டு திறக்கும் மொட்டாய்
என் இதழ் பட்டு திறந்ததடி
உன் மீன்விழிகள்…!!!


கவிதைகள் இடம் மாறியது
நம் இதழ்கள் வழியில்
முடிவதாயுமில்லை 

உன்னிதழ் பக்கங்களில்
எழுதுகின்ற என் இளமை கவிதைகள்..!!!


நெருப்பிலும் நீர்துளி சிரிக்குமா..???
உணர்ந்தேன் உன் தேக சூட்டில்
என் வியர்வை துளிகள் முத்தாக…!!!


“போதுமடா மச்சம் பார்த்தது
மிச்சமாய் ஏதேனும் வைத்துவிடு” என்ற உன்
இமை துடிப்பில் நான் ஒடுங்கிபோனேன்..!!!

அடுத்த கணமே
விழித்துபார்கிறேன் அது ஒரு கனவு..!!!

சில்லென்ற காற்று போர்வையின்
இடைவெளிகளில் சில்மிசம் செய்ய
இழுத்து மூடிய போர்வைக்குள்
உறங்கிப்போனேன்
மிச்சமாய் இருந்த
மச்ச கனவுக்காய்…!!!
-பிசாசு-

Sunday, November 20, 2016

அணையாத நெருப்பு..!!!

காடுகளாய் கிடந்த எம் நாட்டை களையெடுத்து 
கற்பாறைகளை தவிடுபொடியாக்கி
உயர் நிலமேறி புது ஊரென உருவாக்கி
“சிலோனுக்கு” உலகமெல்லாம்
தேயிலையில் அடையாளம் கொடுத்தவர்
கள்ளத்தோணி என்று வஞ்சித்த எங்கள்
பரம்பரைதான்…!!!


மாசிக்கும் தேங்காய்க்கும் ஆசைகொண்டு
நாடுதாண்டிய கூட்டம்தானென
வரலாறு எழுதியவர் ஏறாழம்- எழுதியதை
எதைகொண்டு மாற்றிட..???


கொழுந்து கூடைகளையும்
கவ்வாத்து கத்திகளையும் கொண்டு
நாம் படைத்தோம் புது தேயிலை வரலாற்றை..!!!


ஆண்டு அனுபவிக்க தகுதியுடைய நாங்கள் எல்லாம்
நாண்டுகொண்டு சாக- எம் சவத்திலும்
சாக்கடை அரசியல் பேசியவரும் இன்னமும் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறனர்
ஈனபிறவியொன்று…!!!


பிறந்த மண்ணைவிட்டு
புறம்காட்டி ஓடிடவும் முடியாது
தமிழ் தாய் பாலுட்டி வளர்த்ததால்..!!!
இறந்தாலும் இனியொரு
புதுவிதி செய்வோமென்று போராடி
அட்டைக்கடி இரத்தத்தில் நீராடி
வாழ பழகியதால்…!!!


அன்று எவனோ ஒருவன் ஏற்றிய நெருப்பு
இன்றும் அணையாது எறிகின்றது எம் முன்
பத்தடி கொண்ட வீட்டு லயமாய்…
அரசியல் நாடகமாய்…..
வருமான ஏய்பாய்…
பணச்சுறண்ணடலாய்…
உரிமை மீறலாய்…
-பிசாசு-

நிழலாடும் நினைவுகள்

கண் மூடி உனை நான் கனவுகளிலும்
காதல் செய்வேன்- நிஜமாக நீ என்னுள்
உயிரோடி கிடக்கின்ற போதும்…!!!

நீயும் நானும் சந்திக்காத போதும்
ஒருவரையொருவர் காதலை 
சிந்தித்தோம்..!!!

தனித்தனியே காதல் கொண்டும்
தனிமையில் எமை நாம் 
வஞ்சித்தோம்..!!!

இன்று நீயும் நானும் நாமாகி
உயிராய் ஓர் உறவாகி காதலில் 
தித்தித்தோம்..!!!



உன் வெட்கங்கள் உடைத்து
நீ கொட்டித்தீர்தாய் உன் காதலை
நான் என் கவிதைகளை கடன் கொண்டு
முட்டி மோதினேன்..!!!



நிஜமாகவே
இன்னமும் ஆச்சரியம் தானடி
ஏன் நீ என்னுள் விழுந்தாய்
நானெப்படி உன்னுள் 
தொலைந்தேனெற்று..!!!


தேடித் தேடி தீராத காதலை நீ தந்தாய்
இனி நாம் கூடிக் கூடி காதல் செய்வோமடி..!!!


நிஜங்கள் எல்லாம்
நம்முள் நின்றாட தினம் தினம்
காதலும் கவிதைகளுமாய்
என்னுள் நிழலாடிக்கிடக்க
மீண்டும் மீண்டும் நானுள்ளே
உயிராடிப் போகின்றேனடி…!!!!

-பிசாசு-

Saturday, November 12, 2016

“மீனு குட்டி”

அனிச்சம் பூவின் நகலே
அன்பே என் ஆயுளின் முழு தவமே..!!!
வரத்தினை தந்துவிட்டு நீ ஏன்
காற்றிடை கலந்தாயே பூவம்மா
வேரோடு அறுந்தாயே..!!


உன்னை அனைத்த நெஞ்சில்
இன்னமும் வாசனை தீரலையே..!!!
சுவாசத்தில் சேரும் முன்பே யாரம்மா..??
மூச்சினை தடுத்தாரே..???

அம்மா என்றும் அழைத்தாய்
செல்லமாய் அப்பன் என்றும் அழைத்தாய்
உன்னை நான் அழைக்ககையிலே
“மீனு குட்டி” காதுகள் அடைத்தாயே
குட்டிமா எழுந்து நீ வாராயோ..???


தேடிவந்த தெய்வமே
உன்னை நான் ஓடிவந்து அனைத்தேன்
கூடி வாழும் முன்பே
ஏனம்மா கூடுவிட்டு பிரிந்தாய்
செல்லமே நாடி நரம்பை அறுத்தாய்..!!!

பாடிய பாடல் கோடி
உன்னோடு ஓடிதிரிந்த நாட்கள் தேடி
அலையும் எந்தன் ஆவி
குட்டிமா..
மீண்டும் பிறந்த நீ வாராயோ
அப்பனின் அழுகுரல் கேக்கலையோ..???


-மகளை இழந்த ஒரு தந்தைக்காக...
                     பிசாசு


Friday, November 11, 2016

அவளும் நானும் காதலும்

எதை இழ‌ந்து தேடினாலும்
நீயே கிடைக்க‌ பெறுகிறாய்
எது தொலைந்து போனாலும்
உன்னாலேயே க‌ள‌வாட‌ப்ப‌டுகிற‌து
எவை ம‌ற‌க்க‌ப்ப‌டுகிற‌தோ
அவைள் அணைத்தும் 
நீயாகிறாய்

பின் என்ன‌தான் செய்வ‌து
உன்னை காதலிப்பதை தவிற..!!!
******************************************************************

இற‌கு தொலைத்த‌
ப‌ற‌வை போல‌
உன்னை தேடுகின்றேன்
வ‌ன‌மெல்லாம்

எங்காவ‌து உன் வாச‌த்தின்
சாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா
என்று தேடிபார்த்து..!!!

******************************************************************


ஆயிர‌ம் முறை சொன்னாலும்
அறிவே இல்லை உன‌க்கு என்று
முத்த‌மிடுகின்ற போதெல்லாம்
யுத்த‌மிடுகின்றாய் என்னோடு..!!!

ச‌ளைக்காம‌ல் எச்சிலை துடைத்து
ச‌த்த‌மில்லாம‌ல் உன் க‌ன்ன‌ம்
காட்டுகின்றாய் மீண்டுமொரு முத்தத்துக்காய்..!!!

இம்சையே..!!!
ச‌த்த‌திற்காக‌ யுத்த‌மிடுகிறாயா..???
இல்லை இதழ்
முத்த‌திற்காக‌ ச‌த்த‌மிடுகிறாயா..???


****************************************************************


என் சுவாச சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை சித்தரிப்பேன்...!!!

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை செய்யவேன்..!!!

உன் பேரழகில்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்..!!!

மேகத்தால் உனக்கொரு
மெத்தையிட்டு
மழை மேகமாய் உனை நனைத்து
பெண் வாசனை நுகர்வேன்..!!!

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும் அருகிலிருப்பேன்

****************************************************************

முத்தத்தோடு 
கொஞ்சம் சத்தம் சேர்த்தேன்
நீ வெட்கம் கொள்ளும்
அழகை ரசிக்க..!!!

வெட்கத்தோடு 
முத்தத்தையும் 
நீ பரிசளித்தாய்- வேடிக்கையில்
நான் வியர்த்து நிற்க..!!!

காதல் மட்டுமில்லையடி
காமமும் கூட கூடிபோய் கிடக்கின்றது
நீ என்னவள் எனக்கானவள் என்பதால்..!!!
-பிசாசு-





Wednesday, November 9, 2016

என்னுயிரே..!!!

உன் புன்னகையால்
வெளிச்சம் கூட்ட நேர்ந்தால்
இரவுகளும் 
விழித்திருக்க கூடும்..!!!

உன் விரல்களால்
வண்ணம் தீட்டுவதாக இருந்தால்
நிலாக் கூட வண்ணமாய் 
மாறியிருக்க கூடும்..!!!


உன் கண்ணகளால்
உலகை காண கிடைத்தால்
கிரகங்கள் அணைத்தும் 
சுவாசிக்க கூடும்...!!!

உன் உயிரால்
எனை நீ தாலாட்ட முடிந்தால்
மீண்டும் நான் குழந்தையாய் 
பிறக்கவும் கூடும்...!!!
-பிசாசு-
வாழ்க்கை
நாம் கணக்கு பார்க்க
முடியா விறுவிறுப்பாக திசை மாறி
பயணப்பட வைக்கும் சுவாரசியம்....

கொட்டுகிறது வெண்பனி
பார்க்க அதுவும்
பாம்பை போல் அழகு
பாதம் பதித்து சென்றேன்
என் பலாச்சுழை உதடு முதல்
பாதம் வரை வெடித்து வருகிறது
ரத்தம்
எத்தனை கிறீம் பூசியும்.....


யுத்த பூமியில்
இல்லா தனிமையும் வெறுமையும்
சமாதான நாட்டில்
சுற்றி வர தெரிந்தும் தெரியாமலும்
பல முகங்களும் போலியான சிரிப்பும்
நலவிசாரிப்பும் 
திசை மாறிய வாழ்க்கையில்....


செல்வச் செழிப்பிற்கு பஞ்சமில்லை
பணம் கொடுத்தும் வாங்க அன்பில்லை
விற்பவர்களை தேடி
போலிகளிடம் ஏமாறி
தனிமைத் தீவில் தள்ளி
காலில் தளை தனை பூட்டி
வந்தோம் வாழ்ந்தோம் எனும் அந்த நொடியில்
மனமோ யுத்தமே என்றலும்
நம் நாடாகுமா என்ற ஏக்கங்களுடன்
திசை மாறிய வாழ்க்கையில்
பயணிக்கிறது.....

சிறிமதி.

Monday, November 7, 2016

ஒரு நாளில் சந்திப்போம்

கோவில் படியேறவில்லை
தவம் ஏதும் கொள்ளவில்லை
அக்கினியிலும் கால் பதிக்கவில்லை
அலகு குத்தி நேத்தி செய்யவில்லை
உனை காணவேண்டி கடவுளிடம்
கை கூப்பிடவுமில்லை- இவையேதும் செய்யாது
எதிர்பாராமல் கிடைத்தவள் நீதானடி
மாறிவந்த கோலமில்லை
எனை தேடிவந்த வரமேதான் நீ..!!!

பேசிடத்தான் வார்த்தைகள்
தேடினோம்
வாழ்ந்திடத்தான் புது காதலையும்
நாடினோம்- காணாத போது
கைப்பேசி வழியே நிமிடங்கள்
முழுதும் கலந்தோம்..!!!
குரல் கேட்காத பொழுதெல்லாம்
குறுஞ்செய்தி வழியே
குறைவின்றி மொழிந்தோம்..!!!

நித்தமும் சத்தங்களோடு
முத்தங்களும் பொழிந்தோம்..!!!
நீயும் நானும் நாமாகவே
நமக்குள் காதலாகவே
தாம்பத்தியம்
வளர்த்தோம்..!!!

புகைப்படங்கள்
இடம்மாறியது நம் இதழ் பழங்கள்
இன்னும் சுவை கூடியது..!!!

கற்பனையில் நீ என்னோடு வாழ்கிறாய்
கவிதையில் நான் உன்னோடு கரைகிறேன்
நாம் சந்திக்கும் நாட்கள்
வெகுதொலைவில் இல்லை


வெட்கங்களை கொஞ்சம்
ஒத்திகை செய்துகொள் பெண்ணே..!!!
நம்மை கண்டு காதலும்
ரசித்து வெட்கம் கொள்ள வேண்டும் ..!!!
-பிசாசு-

Sunday, November 6, 2016

சகியே..

சகியே..
உன் இடையை சுற்றி
தவழும் புடவையின்
சின்ன நூலாக மாற 
தவமிருந்திருக்கிறேன் ..!!!


நீ மார்போடு
அணைக்கும் புத்தகமாய்
நானிருக்க கூடாதா
என அழுதுமிருந்திருக்கிறேன்..!!! 


வெட்கத்தை விட்டு சொல்கின்றேனடி 
உனது  பூம்பாதம் தாங்குகின்ற
பூமியாகக் கூட  பிறந்திருக்க கூடாதா என
என்னையே நான்
நொந்திருக்கிறேன்...!!!

உன் கால்களில்
தழுவும் கொலுசுகளின்
மீது பொறாமைப் பட்டிருக்கிறேன்
அதன் ஓசையிலும் நான்
ஒழிந்திருக்க கூடாதா என்று எனை நானே
வருந்தியிருக்கிறேன்...!!!


உன் விரல் தீண்டிய 
கைகுட்டையாய் நான் நெய்யப்பட்டிருக்க 
கூடாதா என்று -நீ கண்ணீரில் விழும்போது
ஏங்கியிருக்கிறேன்..!!!

ஒவ்வொரு 
அசைவிலும் உன் இடை நடுவில்
தொலைந்து போய்விட கூடாதா
என்று- இன்று நான் 
காத்திருக்கிறேன்..!!!
-பிசாசு-


Friday, November 4, 2016

முறிந்த காதல்

முறிந்த காதல்
முறிந்தது காதல்

ஒளிச்சு ஒளிச்சு பேச்சுமில்லை
தனிமை சிறையுமில்லை
கொண்டாட்டம் நண்பர்கள் பட்டாளமுடன்
கும்மாளம் குடும்பத்துடன்.....

முறிந்த காதல்
முறிந்தது காதல்

தூக்கம் தொலைக்கா இரவுமில்லை
உனக்கான காத்திருப்புமில்லை
தலையணை நனையும் தேவையுமில்லை
போர்வைக்குள் தொலைபேசிக்கும் வேலையுமில்லை......

முறிந்த காதல்
முறிந்தது காதல்

கண்ணுக்குள் நீ ,
இதயத்தில் உன் உருவம்
பசி மறந்தேன் என்ற
பொய்யான வார்த்தையில்லை
வட்ஸ் அப்பில் வேலையில்லை
முகநூலில் கவிதையில்லை
வீணடிக்க நேரமில்லை
வீணான செலவுமில்லை.....

முறிந்த காதல்
முறிந்தது காதல்

எனையும் நேசிப்பேன்
மழலைகளையும் கொஞ்சுவேன்
கிழவனுக்கும் காதல் சொல்வேன்
குறுகுறுப்பும் படபடப்பும் எனக்கில்லை ...

சுவாசிக்கிறேன் முறிந்த காதல் என்று
நிம்மதியாகிறேன் முறிந்தது காதல் என்று.....

முறிந்த காதல்
முறிந்தது காதல்


-சிறிமதி-

Thursday, November 3, 2016

நீ -நான்-நாம்- சிறு பிரிவு

விடியும் பொழுதும் உன்னோடு
முடியும் மாலையும் உன் நினைவோடு
தொட்டுச்செல்லும் காற்றும் 
உன் பரிசத்தோடு
பட்டுத்தெறிக்கும் நீர் குமிழும்
உன் அழகோடுதான் என -என் நிமிடங்கள்
கடந்துபோகின்றதடி சகியே..!!!


சின்ன சின்ன சண்டைகள் கூட
சுகங்களாக நமக்குள் ஆறுதலுக்கு
அன்னையாக நீ மட்டும்தான்
இன்று எனக்குள்..!!!

ஒவ்வொரு வைகறை பொழுதையும் நான்
வாரியனைத்து புது நாட்களாய் மாற்றியது
நீ என்னோடு இருக்கும் 
நாளிகைகளுக்காகத்தான்..!!!
நான் பசியாற மறக்கும் போதெல்லாம்
நீயேதான் வந்தாய் நிலா சோறாக…!!!
பசியாறி கிடந்தேன் உன் காலடியில்தான்
காதல் ருசிகூட உணர்ந்தேன்
உன் இதழ்களில்தான்..!!!



என்னுயிரே..!!!
என்னோடு நீயிருந்து 
உன்னோடு எனை கட்டிவைத்து
அழகுபார்தவளும் நீதான்..!!!

என்னை மனிதனாக மாற்றி 
மகிழ்ச்சி தந்தவளும்
நீ மட்டுமேதான்..!!!


இரவோடு நிலவாக
வானோடு நீலமாக
என்னோடு நீயிருந்த நேரமெல்லாம்
இனிக்குதடி- பத்துநாளாய் உனை
பார்க்காது எப்படியிருப்பேன் என்று
உள்ளே பைத்தியமும் 
பிடிக்குதடி…!!!!


உறவுகளை தேடி நீ போக போகின்றாய்
என் உறவான உன்னை விட்டு நான்
எப்படியடி உயிர் வாழப்போகிறேன்..????

நீயில்லாத பொழுதுகளில்…

தனிமையில் உனை களவாடிட போகிறேன்
நிமிடங்களில் உன் புன்னைகையை
சிறைவைக்கப்போகிறேன்..!!!
இரவுகளில் உன் மடியில் 
தலையசைக்கபோகிறேன்
கனவுகளில் உன்னோடு 
கதைபேச போகிறேன்..!!!


தீயின் மேல் அமர்ந்து உன் 
வருகைக்காய்
தவம் கிடக்கபோகிறேன்..!!!
காலங்கள் மறந்து கவிதையில் 
உன்னோடு
கட்டியனைத்து கிடக்கப்போகிறேன்..!!!


நீ நானாய் திரும்பி வரும் வரை
நான் நீயாய் உருமாறி உன்
உயிரில் கலந்து உயிர்வாழப்போகிறேன்
என்னுயிரே…!!!!
-பிசாசு-



எதிர் பாராத சந்திப்பு!!!

தமிழ் அன்னையவள்
தந்த பொக்கிஷமே!!!
தேன் சிந்தும் தமிழால் 
எனைத் தீண்டியவனே!!!
நான் செய்த புண்ணியத்தால் 
நட்பெனக்களித்த..
நன்கொடை நீயடா!!


பத்துமாதம் சுமக்கவில்லை...
பத்தியமும் காக்கவில்லை!!!
மார்மீதும் அணைக்காத உன்னை..
மகனாக சுமக்கின்றேன் என் இயத்தில்!!!


கவியால் எனைத்்தீண்டி..
கருத்துக் கேட்டு களவு
கொண்டனையோ எனை??
மகனே உன் முகம் காணாமலேயே 
களவு போனேன் உன்னிடம்!!!

கனிந்த மனதோடு காதருகில் 
அம்மா அம்மா எனும் போது...
கனிந்துருகுது என் இதயம்!!!


முகம் காணா முகப் புத்தகத்தில் கிடைத்த..
முத்தானான சொத்தடா நீ!!!
மகனே உனை அணைத்து...
மகிழும் நாள் தான் எப்போ??


எங்கேயோ இருந்த எம்மை ...
எதிர் பாராமல் இணைத்த இறைவன்...
அந்த இன்ப நாளை இனிதே தருவான்!!
-சந்ரா குகதாஷ்-



Wednesday, November 2, 2016

நீ இல்லாத நாட்கள்

நீ இல்லாத நாட்கள்
வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!!
வெளிச்சமற்ற விண்மீன்களின்
ஊர்வலமாய் எந்தன் வானம்..!!!


நீ இல்லாத நாட்கள்
உறங்காத கண்களாய் என் இரவுகள்
முடியாத கதைகளாய் 
எந்தன் கனவுகள்..!!!



நீ இல்லாத நாட்கள்
தந்தியறுந்த வீணையாய் என் நகர்வுகள்..!!!
பொருளற்ற பக்கங்களாய்
எந்தன் உறவுகள்..!!!



நீ இல்லாத நாட்கள்...
பூக்காத செடியாய் என் கவிதை..!!!
பதிக்காத தடங்களாய் 
எந்தன் பாதை..!!!


நீ இல்லாத நாட்கள்...
எழுதாத எழுத்துக்களாய் என் பேனா..!!!
மூடிய பக்கங்களாய் 
எந்தன் புத்தகங்கள்..!!!



சகியே..!!!
நான் இல்லாத உன்னையும்
நீ இல்லாத என்னையும்
நாம் என்று சேர்வதை
கண்டேன் நீ இல்லாத நாட்களில்..!!!
-பிசாசு-

Wednesday, October 26, 2016

காதலா காயமா..!!!

என் இதயத்தின் நரம்புகளை அறுத்து -உன்
காதலிசைக்கு வீணை அமைத்தவள் நீ
மௌனங்களின் விதைகளை தூவி 

என் மொழிகளை காயப்படுத்தியவளும் நீ.!!!


உலகையும் மறந்து 
உணர்வுகளையும் துறந்து
உயிரற்றுகிடந்த என்னில் காதலுயிர்
தந்தவளும் நீ மட்டும்தான்..!!!


இதுதான் காதலா..????


நான்தான் தனியாகி கிடந்தேன் நீயேதான் 
துணையாகி வந்தாய்- காய்ந்த நிலமதில்
காதல் துளி சிந்தினாய்..!!!


வசந்தமில்லை வாழ்ககையில் 
வண்ணம் தந்தாய்
சொந்தமில்ல உறவுகளில் நீ 
புது பந்தம் தந்தாய்
சொர்கத்தின் சாயலை காதல் 
சொற்களில் தந்தாய்
நரகத்தின் வேதனைகளையும் 
மறக்க வைத்தாய்
நீ தந்ததுதான் உலகின் காதலா..???


இன்று நீ
மொளனம் கரைந்து
வார்த்தை திரவங்களில்
என் நெஞ்சமதில் தீட்டியதான் காயமா..???
காதல் தந்த நீயே காயமும் தருவதா..???

சகியே..!!!
பூக்களும் முற்களாகுமா.???
மேகமும் தீயை பொழியும்..???
காற்றும் காயம் கூட்டுமா..???
தேவதைகளும் பொய்யாய் போகுமா…???
உண்மை காதலும்
காயமாகுமா..?????

--பிசாசு-

Tuesday, October 25, 2016

என்னை என்ன செய்தாய்

என் வழியில் நான் தனியாகி கிடந்தேன்
உன் வழி மறந்து நீ வந்த வழி 
என் வழியானதோ..???
காதல் வழி கொண்டு நீ
காயங்களின் 
வலியாற்றினாயே அன்பே..!!!!


தடை மறந்து நடை பயின்று
நான் உன் இடை வந்து சேர்ந்தேனடி
இடைவேளையின்றி 
இன்பங்கள் நாம் பகிர்வோம்
முடிந்த துன்பங்களை மறந்து..!!!


மேகமில்லா வானாய் அம்மனமாய்
நான் கிடந்த போது வானவில் கொண்டு
வர்ணங்கள் ஏழு செய்தவளே
என்ன தான் தவம் செய்தேன்- ஏழு ஜென்மமும்
என்னோடு நீ கைகோர்த்து வர..!!!!


எனை என்ன செய்தாய் அன்பே..!!!
கல்லாய் கிடந்த என்னை சிற்பமாக்கினாய்
சொல்லாய் பிரிந்த என்னை
கவியாக்கினாய்…!!!
விதையாய் விழுந்து என்னில் தளிராய்
தடைகள் உடைக்க வைத்தாய்..!!!
கடலாய் கடந்த என்னில் அலையாய்
கரை தொட வைத்ததாய்..!!!


கனவாய் மடிந்த என்னில்
தினம் இரவாய் 
தொடர்கின்றாய் அன்பே
புது விடியலில் பூத்திடும் பூவாய் நீ..!!!!

-பிசாசு-




Friday, October 21, 2016

சகியே..!!!

இறுகிபோய் கிடந்த இதயம்
இடைவிடாது துடிப்பது உனக்காகவே..!!
முடமாகி கிடந்த கால்கள் கூட
துள்ளி எழுந்து ஒடுவதும் உனக்காகவே…!!!
சுவாசிக்க மறந்த என் ஜீவன்
யாசித்து யோசித்துக்கிடப்பதும் உனக்காக..!!!

கண்களிலும் மஞ்சம் அமைத்து
நீ கொஞ்சிவிளையாட பார்வைகள்
பார்த்திருப்பதும்
உனக்காக..!!!


நெஞ்சத்தில் வஞ்சமில்லா
காதலொன்றை
பொத்தி பொத்தி வளர்ப்பதும்
உனக்காக..!!!



இரவுகளை தொலைத்து
கனவுகளை கடன் வாங்கி
கவிதைகளில் வட்டி கொடுப்பதும்
உனக்காக..!!!!


காலை நேர நிலவாய்
மாலை நேர வெயிலாய்
கண் சிமிட்டி காத்திருக்கின்றேன்
உனக்காக..!!!


பாலுக்காய் அழும் குழந்தையாய்
உன் காதலை வேண்டி அழுதுபுறண்டு
கிடப்பதும் உனக்காகவே..!!!


என் கக்கத்தில் ஓர் அனைப்பும்
உனக்காகத்தான்
நெற்றிபொட்டில் பதித்திடும் முத்தமும்
உனக்காகத்தான்..!!!


உள்ளங்கை இணைப்பில் உஷ்ணமும்
உனக்காகத்தான்
காதோர தென்றலின் ஈரமும்
உனக்காகத்தான்..!!!


என் இளமையின்
இன்பங்கள் உனக்காக..!!!
முதுமையின் பாசங்கள் உனக்காக
தாயன்பின் நகழ்கள் உனக்காக
மழலைகளின் சத்தங்கள் கூட
உனக்காக மட்டுமே…!!!


சகியே..!!!
ஓர் ஜென்மம் நான் வாங்கி
வந்ததென்னவோ எனக்காகத்தான்
என் ஜென்மத்தின்
மோட்சம் என்றுமே நீயாகத்தான்..!!!


என் எதிர்காலம்
எல்லையில்லா கிரகமாய்
உனக்காகத்தான்..!!!
-பிசாசு-

Thursday, October 20, 2016

மழலை சிரிப்பு

மயக்கும் ரீங்கார பொன்வண்டு போல்
மழலை சிரிக்க -மனதில் சுரக்கும்
அமுதாய் தேன் சொட்டு..!!!


கவலைகளை எல்லாம் 
நொடிப்பொழுதில்
மறந்திடச் செய்யும் மந்திரம்
உயிர் கொடுத்தவள் சோர்ந்திருக்க
புன்னகைக்க வைத்திடும் தந்திரம்..!!!


அழகு முகத்தின் அடையாள சின்னம்
மழலை சிரிப்பு- இடம் பொருள் பாராது
அனைத்திட தோன்றும் தினம் தினம்..!!!

உலகத்து மொழிகளெல்லாம்
மொளனமாய் மொழிபெயர்க்க
மழலை மொழி போதுமே
புது புது பாஷைகளும் வழி பிறக்க..!!!


காணத கடவுளை காண
கண்கோடி தேவையில்லை
கண்டுவிட்டால் போதும் 
மழலையின் சிரிப்பை
அந்த சொர்கமே கைவந்து சேரும்..!!!!
-பிசாசு-

காதல்..!!!

காதல் ஒரு
கைக்குழந்தை
வா என்று கை நீட்ட
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..! 

நினைக்கும் போது வலியாகவும்
மறக்கும் போது நினைவை கூட்டும்
வழியாகவும் தொடர்கின்ற பயணம்..!!!

இளமையின் உயிர்பின்
இதயத்தின் தீண்டல்
உயிரின் வார்ப்பில்
ஜென்மத்தின் தேடல்..!!!

கனவுகளின் பிரசவம்
கவிதைகளின் வசம் காதல்...!!!

கண்கள் வளர்க்கும்
அருசுவை அமிர்தம்
இதழ்கள் சுவைக்கும்
கசப்பு தீணி..!!!

அவள் எழுதும் எழுத்து
இவன் வாசிக்கும் வரிகள்..!!!

ஊசி முனையின் அழுத்தம்
வெண்பஞ்சின் வருடல்..!!!

காதல்..!!!
ஓற்றை  இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
வாழும் உயிருக்குள்
உயிர் தேடுவது..!!!
-பிசாசு-

Wednesday, October 19, 2016

என் தேவதைக்கு

நான் கண்ட சோகங்களை
எல்லாம் நீ கொண்ட காதலில்
சுமந்தவளே என்னவளே..!!!

எத்தனை ரணங்கள் 
எத்தனை ஏமாற்றங்கள் 
அத்தனையும்  மறந்து நான் 
புன்னகைத்திருப்பது
உன்னாலே..!!!

பாரமாய் நான் இருக்க 
உன் விழியோரமாய் எனை சுமந்து
கண்ணீரை துடைத்தவளே..!!!

சிலையான என்னை 
சிரிக்க வைத்தவளே
என் உத்தமியே..!!!

உடல் கொண்ட காதல் எல்லாம்
மண்ணாகி போயிருக்க
மனம் தந்த உன் காதல் மணக்குதடி
என் வாழ்வில்..!!!

சின்ன சின்ன சண்டைகள்
சிங்கார சில்மிசங்கள்
மிச்சமே வைக்க முடியாத 
உன்  அழகை பருகி 
அன்பில் உருகி எழுதி திளைக்கின்றேன் 
இங்கு ஒரு கிறுக்கள்..!!!


காதலியாய் வந்து 
என் ஓர்  அன்னையாகி 
மரணத்தை  கொன்று  நீ
ஜனனத்தை கொடுத்த
என் தாயுமானவளே..!!

மறு பிறப்பிலும்  நான்
வேதனையில் பிறந்திட
நீயே  வந்துவிடு காதலாய்
காயங்கள் ஆற்றி ஆறுதலாய்..!!!
-பிசாசு-
 

வேசம்..!!

என் தேரழகே உன் வருகைக்காய்
காத்திருந்து உன் காலடி தளத்தில்தான்
சிதருண்டு போகின்றது மனமது..!!

காற்றிலே கலந்த உன்வாசம்
சுவாசம் வரை சென்று சட்றென்று
திரும்பிட திக்ககுமுக்காடி
மூச்சிறைத்துப்போகின்றது
என் காதல்..!!!

வந்தவரெல்லாம் வந்த வழி திரும்பிவிட
அந்த வழி பார்த்தே என் விழிகள்
கண்ணீரில் கவியெழுத- புது வரி கொண்டு
சகியே நீயெழுதிய புதுக்காவியம் இன்று
செல்லரித்து கிடப்பதேனோ..???


தியாகங்களை நீ கொண்டாய் எனக்காய்
மோகங்களையும் களைத்து
நீள் வானம் நான் கொண்டேன் உனக்கயா
தேகம் இரண்டும் சேரும் வேளை 
தூரம் போனதேனோ???

அன்பே
காதல் இன்று மாயமாகி மறைவதுமேனோ..???

உடல் கொண்ட வேசம் எல்லாம்
என்றோ மேடையேறி தோற்றுப்போனதடி
உன்மீது கொண்ட காதலில் மட்டும்
உள்ளம் போட்டதில்லையடி காதல் வேசம்..!!!


என் அகம் கிழித்து உன்னில் தடம் பதித்தேன்
உன் தடையுடைத்து என்னில்
எப்போது நீ கலந்திடுவாய்.???


என் காதல் தீவிரமே
நீ போட்ட வேசங்கள் களையட்டுமடி
நேசமோடு வந்துவிடு
என்னில் இருக்கும் உன் மஞ்சத்தில் நீயே
தங்கிவிடு..!!!!
-பிசாசு-





Monday, October 17, 2016

அரசியல் திருடன்களே..!!!

மலையகம் மாய்ந்துவிட வில்லை
மாற்றங்களை கேட்டுக் கேட்டு
நாங்கள் மடிந்தும் போகவில்லை

சுற்றங்களின் சுகவிசாரிப்புகள்
இங்குபோல் எங்கும் இல்லை
ஏற்ற இறக்கம் வந்த போதும்
விட்டுப்போனவர்கள் யாருமில்லை..!!


சீற்றங்கள் நாங்கள் கொண்டதில்லை
எம்மை சீண்டி தீண்டி பார்க்கின்ற
சீமை தொரையானாலும்
காதை திறுகாமல் விட்டதில்லை..!!

விட்டுக்கொடுப்பதிலும்
தோள் தட்டிக்கொடுப்பதிலும்
நாங்கள் வீரர்கள்..!!!
வந்தாரை வாழ வைத்து- எம்
வாழ்வில் கெட்டுப்போனவர்களும்
நாங்களே...!!!

அமர்ந்து ஆறுதல் பெற நாலடி
படுத்துறங்க ஆறடி- எம்மவர்
வாழ்வென்ன வெறும் பத்தடியிலா..???

எம் வாக்குகளை வாங்கிக்கொள்ள
உம் வார்த்தைகளை வீசியவர்களே
சொன்ன நாக்கையும்
வாக்கையும் காப்பாற்றிட
மறந்துபோனதேனோ..??

உண்பது உணவென்றால்
அதில் இட்டதும் உப்பென்றால்
சொரனையும் பிறக்கட்டும்
நீயும் மனிதன்தான் என்பது புரியட்டும்..!!!

கட்சி விட்டு கட்சி மாறி
கண்ட இடமெல்லாம் நாக்கை நீட்டி
நற்சுவை மறந்த
அரசியல் திருடன்களே..!!!

ஒரு வேளை உணவையாவது
உண்மையாக
உண்ண வேண்டுமென்று
நினைத்துவிடுங்கள்- நீங்கள்
செய்த பாவங்கள்
உம் வாரிசுகளுக்காவது
வட்டியாய் சேராதிருக்கட்டும்..!!!!
-பிசாசு-

விழிகளும் மொளனமாய்

உன் விழி அம்புகளால்
எனை தாக்கி கொஞ்சிடும் 
புன்னகையால் எனை வீழ்த்தி 
காதல் மது ஊட்டியவளே
கிறங்கடித்துக் கிடக்கின்றேனடி
நான் உன் விழி பேச்சில்..!!!

எட்ட நீ நடந்து போகையில்
ஒட்டி உன்னோடு வருகிறது 
என் மனது .....
நீ எட்டிப்பிடித்து 
வைத்துக்கொள்வதும்
உன் நெஞ்சோடு சேர்த்து 
தைத்துக்கொள்வதும்
உன் இஷ்டமடி..!!!

காதல் சொல்ல வார்த்தைகளை
கடன் வாங்கினேனடி அந்த கம்பனிடம்
கூடவே வட்டியாய் உன் அழகையும்
தந்து சென்றானடி அந்த பிரம்மனும்


என் காதலை சொன்னேனடி
கவிதையின் வடிவில்- உன் காதலை
எப்படி சொல்வாயடி தமிழ் மொழியில்..???


காதல் வழிகாட்டிய உன்னழகில்
என் ஜீவனின் உயிரை கண்டேனடி..
உன் வலைந்து நெழிந்த 
கூந்தலின் கருமையில் 
என் இரவுகளை தொலைத்தேனடி..!!!


பூக்காதிருக்கும் பூக்களுண்டு -உன்
கண்களில் கண்டேன் அதை இன்று..!!!
பேசிடும் உதடுகளும்
வார்த்தைகளை விழுங்கிவிட- எனை
தாக்கிய விழிகளும் மொளனமாய்
கடப்பதேனோ..???
-பிசாசு-

Friday, October 14, 2016

நினைவால் தீ அணைப்பேன்..!!!

நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை எனக்கு..!!!

நீ யாரென்று தெரியாமல் தொடங்கிய
என் காதல் கதையில
நீதான் கருவானாய்.- என் உயிரின்
கதாபாத்திரமானாய்..!!!

என் வாழ்க்கை புத்தகத்திற்கு
முகவுரை எழுதுவதற்காக - நான்
என் இதய பக்கங்களை திறந்து 
வைத்தேனடி சகி
நீ எழுத வைத்தாய் ஓர் அழகான
கவிதை புத்தகத்தை..!!!


பக்கமாய் நீ இருக்கும் போது
உன் கக்கத்தில் நான் இருப்பேன்
கொஞ்சம் தூரமாய் நீயிருக்கையில்
உனை காற்றாய் நான் தொடுவேன்

பார்க்கின்றபோது காதலால் 
நான் இழைத்தேன்
பார்க்காது தவிகின்றபோது கவிதையால்
உனை ரசித்தேன்..!!!


வெட்கமாய் நீ விழி மூடுகையில்
வெப்பமாய் உனை தீண்டினேன்..!!
தெப்பமாய் நான் நனைந்து
நினைவால் தீ அணைப்பேன்..!!!



இதற்கு மேலும் என்னடி சொல்ல
எனக்காக உன்னை நீ கொடுத்துவிடு
என்னையே உனக்காய் எழுதிக்
கொடுத்த பிறகு….!!!
-பிசாசு-


நம் காதல்

என்னிலே நீ என் எண்ணம் எல்லாம் நீ
உன்னிலா நான் உன் உள்ளம் எல்லாம் நான்
கண்ணிலே நீ என் கண்ணீரிலும் நீ
வெண்ணிலா நீ என் வானத்து 

கன்(னி)நிலா நீ


உன்னிலும் நான் 
என் உணர்விலும் நீ
உன் உலகம் நான் என் அழகும் நீ
பிரமன் செய்த பெண்ணழகும் நீ..!!!


கற்பனையில் நான் கவிதையில் நீ
கனவினில் நான் காத(லி)ல் நீ


தீயானது குளிர்கின்றது
பனியானது சுடுகின்றது
உயினரானது உறவே 
உன்னோடு வருகின்றது
என்னுடலானது நிலழாக 
இங்கு கிடக்கின்றது
நீ வந்து உரு தருவாய் என்று..!!!



நான் என்றும் நீ நீ என்றும் நான்
நாம் என்பது இன்றுள்ளது
நம்மை சேர்த்துவைக்கும்
காதல் என்றும் உயிரானது..!!!
-பிசாசு



Thursday, October 13, 2016

மோட்சத்தை எப்போது தருவாய்..???

உயிரே…!!!
உன்னோடு சேர்ந்து- உன் அணைப்புகளும்
நம் காதலின் இணைப்புகளுக்கு
இட ஒதுக்கீடு செய்தது..!!!

விரல்கள் தொட்ட
சிறு உரசல்களும் -நீள்
விரிசல்களில் இடைவெளிகளை
நிரப்பியது..!!!


மாறாது மறவாதிருக்கும்
உன் நினைவுகளும் -இரவுகளோடு
ஒட்டிக்கொண்டு கனவுகளில் வந்து
குந்திக்கொண்டது..!!


குறையாதிருக்கும்
உன் பேரழகும் நூறழகாய்
உருமாறி ஓரழகாய் கவிதைகள்
கிறுக்கியது..!!

உனக்காய் ஏங்கியிக்கும்
என் மாரழகும் தேரழகாய்
புது பூவழகாய் வாசம் சேர்த்து
காத்திருக்கு மழலையாய் நீ சாய..!!!


எனக்கான விடியலாய் -உன்
புன்னகையும் புது வெளிச்சம் கூட்டி
என் மன(ண)வறைகளை
மின்னிட தவம் கொண்டது..!!


உன் கோபங்கள் கூட
கூட்டாயிணைந்து -என்
தாபங்களையெல்லாம் தீர்த்து
இதயத்தை வருடி
நிமிடங்களை இனித்திட வைத்தது..!!!

இதயத்தை வருடி காதல் ராகம்
இசைத்த காதலனே…!!!!
என்னிதழ் வருடி உடலோடி
உயிர் வரை சென்று
பிறப்பின் மோட்சத்தை
எப்போது தருவாய்..???

--பிசாசு-

நீயா பேசியது..!!!

கண்ணோடு கண் வைத்து
கனவுகளில் எனை தைத்து
காதலை கூட்டியவளே
காதலை மடித்து உன் -கக்கத்தில்
வைத்துக்கொண்டு
காணாது தேடுவது ஏனோ…??

மடியோடு தலை சாய்ந்து
மனதோடு உறவாடி உயிரின் நிழலாய்
உடன் வந்தவளே- மறந்துவிடு என்று
மட்டும் சொல்லிவிட்டு
திசைமாறி நீ போவதேனோ..??ஃ


மொளனமாய் காதலிசைத்து
உருவமாய் என்னுள் சிலைசெய்து
உயிர் தந்து உணர்வூட்டிய
தேவதையே- சிலையுடைத்து மண்ணாக்கி
நீ மாயமானதேனோ..???


கவிதைகள் நானெழுத
காற்றாகி எனை நீ தீண்ட
கற்பனைகளிலும் பற்றியதடி
காதல் தீ- கண்ணீரை கடன் வாங்கி
காதலணைக்க நான் பித்தனாகினேன்..!!!


நிசப்த இரவில் நீயும் நானும்
நிலவின் ஒளியில் தேடிய தேடலின்
முடிவில் வார்த்தைகளே மரணித்து
மொளனங்களில் உடைந்தது நம் இடைவெளியின்
கண்ணாடி குவளைகள்- சிதறிய துகள்களில்
வந்து போகும் உன் விம்பங்களிடம்
கேட்கின்றேன் “நீயா பேசியது”
இனி என்னோடு பேசாதே என்று..!!!

-பிசாசு-




Saturday, October 8, 2016

காதலின் இறுதிவரை..!!!

உன்னாலே உயிர் பெற்று
உணர்வுகளை சுவாசிக்கின்றேன்

உன் பிரிவுகளிலும் 
நான் பிரியப்படுவது -என்
உயிர் எனைவிட்டு
பிரிவதையே சகியே..!!!

அடைக்கலம் கேட்கின்றேன்
நான் உனக்குள் மட்டும்
ஆயுள் தண்டனையில்
சிறைகைதியாய்..!!!


என் ஒவ்வொரு நாளும்
உனக்காய் உன்  மடியினில்
மட்டுமே விடிய
ஆசைப்படுகின்றேன்
எனக்குள் நீ விடியலாய்
வாழ்வதால்..!!!


உனை சிந்திக்க மறந்தால்
என் இதயம் 
சின்னாபின்னமாகின்றது
சந்திக்க வேண்டுமென்று 
கதறி அழுகின்றது
அது உயிர்ப்பதாயினும் 
துடிப்பதாயினும் உனக்காகவே 
வேண்டுமென்கின்றதடி சகியே..!!!

வாழும் நாட்கள் உனக்காகவே
நகரும் போது உயிர்விட்டு போவதாயினும்
உனக்காய் உயிர்விட்டு போகவே
ஆசைப்படுகின்றேன்..!!!


என்னவளே எனக்குள்
உயிராய் கலந்தவளே..!!!
உன்னதமானவளே 
உணர்ச்சிகளையும்
உடைத்தெறிந்து
உயிராய் காதலை  
சுமந்தவளே..!!


எனக்குள்ளேயே 
தொலைந்துவிடு நீ
உனக்குள்ளே -என்னை 
நான் தேடி
நாம் வாழ்ந்துவிடுவோம்
காதலின் இறுதிவரை..!!!
-பிசாசு-


கோடி உறவுகள் வேண்டாம்

அழும் போது ஆறுதலாய்
விழும் போது தாங்குதலாய்
இருக்கும் உறவுகளுக்காய்
எப்பொழுதும் ஏங்குதலாய்
என்னிதயம் துடிக்கின்றது
கிடைக்காத அந்த
உறவுகளுக்காய்..!!!


பூவில் வாழும் வாசமாய்
காற்றில் கலந்த சுவாசமாய்
முப்பொழுதும் நேசமாய் பாசம்
காட்டும் உணர்வுகளுக்காய்
காத்திருந்தே
கடந்துபோகின்றது- என் நிமிடங்கள்
நிலையற்ற அந்த
உரிமைகளுக்காய்..!!!

பேசும் வார்த்தையில் 
அன்பில்லாத உறவுகளும்
வாழும் வாழ்க்கையில்
தொடராத உறவுகளும்..!!!
கூடி நின்று ஒப்பாரி வைத்து
ஓடி வந்து தூக்கிப்போக
நாலு உறவுகள் போதும்
கோடி உறவுகள் ஏன் வேண்டும்..???
வேசம் கொண்ட இந்த பூமியில்..!!!!
-பிசாசு-


உன்னோடு இருந்த ஒரு பொழுது

ஆழ்கடல் முத்துக்களாய்
மின்னிடும் உன் புன்னகையில்
எத்தனை யுகங்கள் தான் நான்
உயிர்த்திருந்தேன்..!!!

சில்லென்ற காற்றில்
கலந்துவந்த உன் குளிர்
வார்த்தையின்
துளிகளின் சாரல்களில்
எத்தனை கவிதைகள் தான்
நான் எழுதியிருந்தேன்..!!!


கட்டுண்டு கிடந்த என்
கைவிலங்குகளை ஒரு
நிமிடதொடுகையில்
உடைத்றெிந்த உன் ஸ்பரிசத்தில்
எத்தனை சொர்கங்களை
நான் கண்டிருப்பேன்..!!!

உள்ளங்கள் இணைந்த நம்மில்
உதடுகள் இணைகையில்
காதலும் மோட்சம் கண்டதை -உன்
கண்களில் நான் காணும்போது
எத்தனை ஜென்மங்கள்
நான் எடுத்திருப்பேன்..!!!


கொஞ்சம் வேகமாய்
கொஞ்சம் மேகமாய் தவழ்ந்து போன
வசு வண்டியின் இருக்கையில்
என் தோளில் நீ சாய்கையில்
எத்தனை கற்பனைகளை நான்
கடந்திருப்பேன்..!!!


ஒரு பொழுது உன்னோடு
நான் பயணிக்கையில்
என் முப்பொழுதும்
மறந்து புதுபொழிவு கண்ட
என் ஜீவனின்று
எத்தனை பொழுதுகளை கடந்தாலும்



“உன்னோடு இருந்த பொழுதுகளையே
சுவாசித்து உயிர்வாழ்ந்து கிடக்கின்றது”
மீண்டுமொரு ஒரு பொழுதுக்காய்..!!!

-பிசாசு-

ஒற்றை முத்தத்தில்

கொட்டும் மழையிலும்
கொளுத்தும் வெயிலிலும்
கவிதைகளாய்
காதலை கட்டிக்கொண்டு
புறண்டுகிடக்கின்றது
என் நாட்குறிப்பேடுகள்..!!!


பசியின்றியும் தூக்கமின்றியும்
நினைவுகளாய் காதலை
ருசித்துக்கொண்டு
உயிர்பித்துக்கிடக்கின்றது
என் கனவுகள்..!!!

சிரிப்பின்றியும் களிப்பின்றியும்
மௌனமாய் தன் காதலை
தியானித்துக் கொண்டு
திரிகின்றது
என் உதடுகள்..!!!

உயிரின்றியும் உடலின்றியும்
காற்றாய் கலந்து அலைந்து
தன் காதலை
தேடிக்கொண்டிருக்கின்றது
என் உணர்வுகள்..!!!

அன்பே
ஏக்கத்திலும் தூக்கத்திலும்
உன் பக்கத்திலே வாழ்ந்துக்கொண்டு
இருக்கும் என் காதலுக்கு- ஒரு
முத்தத்திலேனும் உன் காதலை
ஒரு வார்த்தைச்சேர்த்து சொல்லிவிடு
இறந்தாலும் அந்நிமிடம்
சொர்க்கமாய் மாறிவிடும்..!!!!
-பிசாசு-

Sunday, October 2, 2016

மாற்றம்

“தாரமாய் வருவேன்” என்றவள்
தூரமாய் போய்விட
பாரமாய் ஆனது என் காதல்..!!!
உயிரும் என்னைவிட்டு
வேகமாய் போனது.!!!


தேகமாய் சேர்த்தவள்
தாகமாய் இருந்த என்னில்
மேகமாய் பொழிந்து
காதல் தாகம் தீர்த்தாளே
சோகமாய் எனை தாக்கி
பாதை மாறி மாற்றிப்போனாளே..!!!


அவளை மறக்க நினைக்க
இதயத்தில் இடிமுழக்கமாய் எழ
உடலெல்லாம் மின்னல் தாக்கமாய் விழ
கண்களிலே கன மழை..!!!



அவளை நினைக்க நினைக்க
கற்பனைகள் கடலாய் பிறக்க
தனிமையெல்லாம்
இனிமையாக்க
வெள்ளை தாளிலே
“கவிதை மழை"
-பிசாசு-

முதலில் உன்னைத்தான்
கண்கள் பார்க்கத்தான்
காதல் கொள்ளத்தான்
#இதயம் கேட்டது..!!!

இமைகள் திறந்துத்தான்
இமைக்க மறுக்கத்தான்
கண்கள் இரண்தாடும்தான்
#காதல் கொண்டது..!!!


கனவில் உன்னைதான்
காண எண்ணித்தான்
கட்டியணைக்கதான்
#இரவும் நீண்டது..!!!

நீயும் பெண்ணாகத்தான்
நானும் ஆணாகத்தான்
காதல் தானாகத்தான்
வந்துபோகத்தான்
#தீயும் மூண்டது..!!!

காதல் நீயாகத்தான்
கவிதை தேனாகத்தான்
சேர்ந்திருக்கத்தான்
#உறவும் பிறந்தது..!!!


-பிசாசு-

Thursday, September 29, 2016

காதலுக்கு முன்..!!!

இரவை எதிர்பார்த்ததுமில்லை
கனவுகளை தேடியதுமில்லை..!!!
கடலை நேசித்தது இல்லை
கரைகளைத் தொட்டதும் இல்லை..!!!
காதலுக்கு முன்..!!!


நிலவை பிடித்தமில்லை
ஒளியினில் விழுந்ததுமில்லை..!!!
பூக்களை நுகர்ந்ததில்லை
வாசத்தை சுவாசித்ததில்லை..!!!
காதலுக்கு முன்..!!!


கற்பனையை தூண்டியதுமில்லை
கவிதைகளை கிறுக்கியதுமில்லை
தனிமையில் சிரித்ததுமில்லை
வெறுமையாய் நின்றதுமில்லை
காதலுக்கு முன்..!!!


காதலை சுமந்ததுமில்லை
தெருவெங்கும் ஏதோ ஒன்யை 
தேடித் திரிந்ததுமில்லை..!!!
கண்ணீரில் கரைந்ததுமில்லை
இப்படி பைத்தியமாய் அலைந்ததுமில்லை
பட்டினிக்கிடந்துமில்லை
காதலுக்கு முன்..!!!



காதலுக்கு முன் காதலையும் -நான் 
காதலித்ததுமில்லை
இப்படி நான் நீயானதுமில்லை
நான் யாரென்று
உணர்ந்திடவுமில்லை 
“காதலுக்கு முன்”
-பிசாசு-

பிடிக்காத வரனும்....

ஜாதி மாறி காதலித்தால்
தரம்கெட்டு போய்விடும் என்று
அவசர அவசரமாய்- என் மனம்மாத்தி
கட்டிவைத்தனர்
மனம் ஏற்காத ஒரு பெண்ணை..!!!


திருமண புகைபடத் தொகுப்பில்
கூட புன்னகைக்கவில்லையென்று
ஒரு மாதம் கழித்து
ஒப்பாரி வைக்கின்றாள் அவள்…!!!

கண்கள் கூட அவளை பார்க்கவில்லை
இன்னமும் வார்த்தைகள் கூட
அவளை கொஞ்சியதில்லை என் சொந்தமென்று..!!!
மறந்து போகாமலும்
இறந்து போகாமலும் என் காதலி
என்னுள் உயிரோடிருக்க எப்படி நான்
இவளுக்கென்றோர் ஓர் உயிரைக் கொடுப்பேன்..???



தொட்டுவிட விரும்பவில்லை
அவள் கன்னத்தில்
முத்தங்களை வைத்துவிட முடியவில்லை
என் தேடல்களும் கூடல்களும்
அவளோடு போயிருக்க- இல்லாத ஒன்றை
இவளுக்கெப்படி பரிசளிப்பேன்..!!!!



இதயம் கனக்கிறது
இமைகள் துடிக்கிறது
இல்லாத காதலை இவளுக்கெப்படி 
கொடுப்பதென்று..???

பிடிக்காத வரன் ஒன்றை
பிடித்த என் காதலு(லி)க்காக
ஏற்றுக்கொண்டேன்
என் வாழ்வில் சேர்த்துக்கொண்டேன்..!!!



காலம் கடந்து போக….
என் வீட்டு கௌரவமும்
எங்கள் வீட்டு ஜாதியும் வென்றதாய் 
சொன்னார்கள்
அவர்களுக்கு மட்டுமல்ல
இவளுக்கும் கூட தெரியவில்லை
ஜெயித்தது காதலென்று- எனக்காய் வந்த
இவள் தந்த புது காதலென்று..!!!



பிடிக்காத வரனும்
பிடித்துப்போனது இவள் காட்டும்
புது அன்பில் இன்று..!!!!


பிரிந்தவள் பிரிந்ததாய்
இருக்கட்டும் இனி என்னோடு
இணைந்தவள் என்றும் பிரியாது
இருக்கட்டும்..!!!!
--பிசாசு--

Sunday, September 25, 2016

ஒரு நாள்..!!!

என் அன்பே உன்னருகிள் நான் 
வாழ்ந்திட வேண்டுமடி

உன் விரல் நடுவில்
சிக்கிக்கொண்டு ஒரு நாள்..!!!
உன் விழி பார்வையில்
இமைக்கொண்டு ஒரு நாள்..!!!

உன் இதழ்களின்
முத்தத்தில் ஒரு நாள்..!!
உன் புன்னகையின்
சத்தத்தில் ஒரு நாள்..!!!

உன் காற்றின்
சுவாசத்தில் ஒரு நாள்..!!!
உன் மூச்சின்
வேகத்தில் ஒரு நாள்.!!!


உன் இதயத்தின்
துடிப்பினில் ஒரு நாள்..!!!
உன் வெட்கத்தின்
நடிப்பில் ஒரு நாள்..!!!


உயிரான உன்
காதலில் ஒரு நாள்
ஆறுதலான மடியில் 
ஒரு நாள்..!!!
அன்பான அனைப்பில் 
மற்றொரு நாள்..!!!


ஒவ்வொரு நாளாய் ஒரு நூரண்டு
உன்னோடு நான் வாழ
என்னோடு நீ சேர
நம் காதலோடு வாழ்ந்து
கல்லரையிலும் உன்னோடு
வாழ வேண்டும் ஒரு நாள்..!!!
-பிசாசு-




வலிகளில் வாழ்ந்தவள்..!!!

அடியே கருப்பாயி  யென்றே
அந்த வாசட்படியேறும் போதே
அப்பாவின் காரக்குரலில்

அம்மாவின் அடுத்த
துக்கமும் யுதமும்
தொடங்கிவிடும்
என்னப்பனோடு..!!!

கள்ளும் சாராயமும்  ஊறிப்போன
நாக்கிற்கு அம்மாவின் சமையலின்
சாதரண உப்பும் காரமும்
பத்தவே பத்தாதுபோகும்
செத்துப்போன அன்புக்கும்..!!!

எப்படிச் செய்தாலும்
என்னதான் செய்தாலும்
ருசியில்லையென்று
காரணத்தோடு அடித்து
சோற்றுக்கோப்பையையும்
லயத்து கானில் வீசியெறியும் அப்பா
இப்போதெல்லாம்
காரணமின்றியும் அடிக்கத் தொடங்கிவிட்டார்
கழுத்தைபிடித்து  வெளியிலும் தள்ளிவிடுகின்றார்..!!!

பல நாட்களை பட்டினியாலே
கழித்திருக்கின்றாள்
வெற்றிலை மட்டுமே அவள்
பசிபோக்குவதாய்
நினைத்திருக்கின்றாள்- நானறிவேன்
என்னிரவுகளில் காற்சட்டை
நனைந்ததை விட -அவள்  கண்ணீரில்
நனைந்ததே அதிகம் என்பதை
நானறிவேன்..!!!


விறகெடுத்து அடுப்பு மூட்டி
ஊதி ஊதி சாம்பளையும்
கரியையும் பூசிக்கொண்டு சமைத்த- என்
தேவதையின்
அழகும்
அன்பும் 
அவளருமையும்-என்
குடிகார அப்பனுக்கு
தெரியவில்லை..!!!


பக்கத்து வீட்டு
பையன்கள் எல்லாம்
புது ஆடையோடு
பூரித்திருக்க அழுக்காடையில்
எனைப் பார்த்து அழுதழுதே
ஏக்கம் கொண்டவள்- தான் வைத்திருந்த
ஒரு தாலிமணியையும்
தாரைவார்த்துக்கொடுத்து
வாங்க சொன்னவள்
என்னழகை ரசிக்க..!!!

அதிலும் அரைவாசி குடிக்குப்போக
சந்தையில் விற்ற சட்டையை
கடையில் வாங்கியதாய் வாய் கூசாது
பொய் சொல்லி கொடுத்தவன்
என் அப்பன்..!!!


குடும்பத்தை மட்டுமே
உலகமாய் எண்ணியவளுக்கு
இது அன்று தெரியவில்லை..!!!


வீட்டிலும் நொந்து போனவள்
தேயிலை மலையிலும்
கொளுத்தும் வெயிலிலும்
வெந்துபோனாள்..!!!

பத்தாம் தேதி வந்தாள்
புன்னகையில் பூப்பாள் பிள்ளைக்கு
கறிசோறு போடலாமென்று..!!!

வேர்வை சிந்தி வாங்கிய சம்பளத்தில்
ஒரு தொகையை
கட்டமொய்யாய் மாதமொரு முறை
கொடுப்பாள்
சந்தா பணமென்றுசாக்கடை
நாய்களுக்கு..!!!

உரிமைகள் பற்றி தெரியாதவளாய்
வாழ்ந்துவிட்டாள்
உறவுகளை பற்றி
உணர்ந்தவள்- அன்பான
உறவுகளின்றியே
வாழ்ந்துவிட்டாள்..!!!

இவள் கொண்ட
பொறுமையெல்லாம்
குடும்பத்தின் பெருமை காக்க
அவள் பிள்ளை வாழ்வை
வளமாக்க என்பதை
நான் உணரும் வயதில் அன்றில்லை
இன்று நான் உணரும்போது
அவள் உயிரோடில்லை..!!!

அன்பை தேடித் தேடியே
தேய்ந்து போனவள்..!!!
வெற்றிலை சப்பி சப்பியே
சாபத்தை வாங்கிக்கொண்டாள்
புற்று நோயாய்

தாயில்லா வலியை நான்
உணரும் முன்பே
மனைவியில்லா
வலியை உணர்ந்துவிட்டான்- என்
குடிகார அப்பன்  குடியினால் வந்த நோயால்
கவனிக்க யாருமின்றி..!!!

ஏன் பிறந்தாள் அவள்
என்ன சுகம் கண்டாள்
வாழ்கையில் இவள் என்னப்பனுக்கு
வாக்கப்பட்டு..???
ஒருசான் மஞ்சள் கயிறால்
வென்றானா என் அப்பன்..???

அன்று தோற்றுப்போனவளும்
பிள்ளைக்காகவே தோல்வியை
ஏற்றுக்கொண்டவளும்

என் அம்மா..!!!
-பிசாசு-

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...