இற்றுபோனதோயென
உடையும்படி
உயிரற்றுப்போய் கிடக்கும்
இடியும் மின்னலும்
சேர்ந்து கொழுத்திய தீயாய்
எரிந்துகொண்டிருக்கும் அடிவயிற்றில்
உயிர்கொல்லும்
வலியொன்றோடும்
கடவுளும் தூரமாயிருக்க
தீண்டாமை நான் என்று சொல்லியிருக்க
ஓரமாய் ஒதுங்கிருக்கியிருக்கிறாள்.!!!
தூரப்பயணங்கள் துன்பமாகின்றது
இன்பம் கொள்வதென்பதே
பெரும் மாயமானது
கடவுளும் தூரமாயிருக்க
தீண்டாமை நான் என்று சொல்லியிருக்க
ஓரமாய் ஒதுங்கிருக்கியிருக்கிறாள்.!!!
தூரப்பயணங்கள் துன்பமாகின்றது
இன்பம் கொள்வதென்பதே
பெரும் மாயமானது
இவளுக்கு..!!!
ஒரு நாளைக்கு பல முறை
ரத்த கறைபடிந்த அதை
ஒரு நாளைக்கு பல முறை
ரத்த கறைபடிந்த அதை
மாற்றியாக வேண்டி
உடல் குழித்து உயிர் வெறுத்து
சாவிலும் வாழவும்
வாழ்விலும் சாகவும்
யார் விட்ட சாபம் இவளுக்கு
அந்த மூன்று நாட்களில்..???
ஆண்மையும்
தோற்றுதான் போகவேண்டும்
இவளின் வலிகளுக்கும்
தியாகத்திற்கும்..!!!
அதுமட்டுமா
அடித்து துவைத்து அலசி
யார் கண்ணுக்கும் தெரியாது
காயவைத்தெடுத்த
அழியாதிருக்கும் கறைபடிந்த
துணிகளை அடுக்கி வைத்து
அடுத்த மாதமும் பயன்படுத்த
காத்திருக்கும் பெண்களும்தான்
எவ்வளவோ..???
உடல் குழித்து உயிர் வெறுத்து
சாவிலும் வாழவும்
வாழ்விலும் சாகவும்
யார் விட்ட சாபம் இவளுக்கு
அந்த மூன்று நாட்களில்..???
ஆண்மையும்
தோற்றுதான் போகவேண்டும்
இவளின் வலிகளுக்கும்
தியாகத்திற்கும்..!!!
அதுமட்டுமா
அடித்து துவைத்து அலசி
யார் கண்ணுக்கும் தெரியாது
காயவைத்தெடுத்த
அழியாதிருக்கும் கறைபடிந்த
துணிகளை அடுக்கி வைத்து
அடுத்த மாதமும் பயன்படுத்த
காத்திருக்கும் பெண்களும்தான்
எவ்வளவோ..???
பெண் என்பவள்
பேரின்ப பெட்டகம் மட்டுமா..??
வேர் முதல் நுனிவரை
வலிகளின் குத்தகை..!!!
-பிசாசு-