"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
Sunday, October 21, 2018
காதல்..!!!
வா என்று கை நீட்ட
ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்..!
நினைக்கும் போது
வலியாகவும்
மறக்கும் போது
நினைவை கூட்டும் வழியாகவும்
தொடர்கின்ற பயணம்..!!!
இளமையின் உயிர்பின்
இதயத்தின் தீண்டல்
உயிரின் வார்ப்பில்
ஜென்மத்தின் தேடல்..!!!
கனவுகளின் பிரசவம்
கவிதைகளின் வசம் காதல்...!!!
கண்கள் வளர்க்கும்
அருசுவை அமிர்தம்
இதழ்கள் சுவைக்கும்
கசப்பு தீணி..!!!
அவள் எழுதும் எழுத்து
இவன் வாசிக்கும் வரிகள்..!!!
ஊசி முனையின் அழுத்தம்
வெண்பஞ்சின் வருடல்..!!!
காதல்..!!!
ஓற்றை இருளுக்குள்
பொருள் தேடுவதல்ல
காதல்
உயிருக்குள் உயிர் தேடுவது..!!!
-பிசாசு-
மழலை
மயக்கும் ரீங்கார பொன்வண்டு போல்
மழலை சிரிக்க -மனதில் சுரக்கும்
அமுதாய் தேன் சொட்டு..!!!
கவலைகளை எல்லாம்
நொடிப்பொழுதில்
மறந்திடச் செய்யும் மந்திரம்
உயிர் கொடுத்தவள் சோர்ந்திருக்க
புன்னகைக்க வைத்திடும் தந்திரம்..!!!
அழகு முகத்தின் அடையாள சின்னம்
மழலை சிரிப்பு- இடம் பொருள் பாராது
அனைத்திட தோன்றும் தினம் தினம்..!!!
உலகத்து மொழிகளெல்லாம்
மொளனமாய் மொழிபெயர்க்க
மழலை மொழி போதுமே
புது புது பாஷைகளும் வழி பிறக்க..!!!
காணத கடவுளை காண
கண்கோடி தேவையில்லை
கண்டுவிட்டால் போதும்
மழலையின் சிரிப்பை
அந்த சொர்கமே கைவந்து சேரும்..!!!!
-பிசாசு-
சகியே..!!!
தேவையில்லையடி
இதயத்தை தாக்கி -என்
நிலை தடுமாறிட..!!!
வம்பென்று நான் செய்யும்
குறும்புகளையெல்லாம்
நீ உன் அன்பினிலே
தண்டித்தால்
போதுமடி..!!!
கோபம் கொள் பரவாயில்லை
மௌனமாய் நீ
என்னை கடக்காதே
தடம் மாறிபோய்விடுகின்றேன்
நான்..!!!
-பிசாசு-
Thursday, June 21, 2018
சொல்ல நினைத்ததை
நெஞ்சுக்குள் புதைத்தேன் ...!
மெல்லத் தொலைந்தேன்
மெல்லத் தொலைந்ததை ,
உன்னிடம் கண்டேன் ..!
காணவில்லை காணவில்லை ,
என்னை மறைத்துக்ககொண்டவளும்
நீயா....!!!
தேடுகின்றேன் தேடுகின்றேன்
என்னை என்னுள்ளே ஒளித்தவளும்
நீயா ..!!
இன்றெல்லாம்
என் காதல் இதயத்தை
கைகளால் எடுத்து
கவிதைகள் வரைந்து தருகின்றாய்..!!!
என் ஜீவன் முழுவதும்
உன்- நினைவுகளை தந்து- என்
உறக்கத்தைப் பறித்துச்
செல்கின்றாய் ...!!!
அலைந்து திரிகின்றேன்
நான்...
என் காதலோடு
ஒடுங்கி தொலைகிறாய் நீ...
பின் மடிந்து விழுகின்றேன் நான்...!!!
தாங்கிபிடிப்பாயா சொல் அன்பே...!!!
இப்படி நான்
பிசாசு
பட்டதெல்லாம் போதும் எனபராமல் சென்றாய்என்னை விட்டு..!!!இன்று- உன் ஸ்பரிசம் தொட்டதென்றல் பட்டு"பட்டு போன என் காதல்"மெல்லமாய்மொட்டு விட துடிக்குதடி..!!!கெட்டுப்போன மனம் என்றுஎன்னை தட்டிவிட்டுச் செல்லாதே...இது வெட்டுபட்டு கிடப்பதும்கெட்டுபோய் கிடப்பதும் -உன்காதலுக்குதான்என்பதை மட்டும் மறக்காதே..!!!!-பிசாசு-
Wednesday, June 20, 2018
உன்சின்ன மெளனத்திற்கு நடுவில்
என் மொத்த மொழிகளையும்
வாரிக்கொண்டாய்..!!!
ஊடல் நீ கொண்டாய் என்று
ஒதுக்கிடவும் முடியவில்லை
கோபம்தான் கொண்டாய் எப்படியென்று
கோபிக்கவும் இயலவில்லை
இரண்டுக்கும் நடுவில் எனை
இம்சை செய்கிறாய்
பிடிவாதக்காரியாய்….!!!
உன்னுள்ளே இருக்கும் ஓரனப்பில்
நீ பார்க்கும் பார்வையில்தான்
என்னிதயம் லேசாகுமென்றால்
உன் மௌனத்தை இப்படியே
வைத்துக்கொள்- நான் தினம் தினம்
வார்த்தைகளை தேடியே திறிகின்றேன்..!!!
மெளனம் கலைத்து பேச நீ விரும்பினால்
இறுதியாய் ஓர் வழி செய்
அஞ்சலில்
“காதல் அஞ்சலியாய்”
இல்லையேல்
கண்ணீர் அஞ்சலியாய்..!!!
-பிசாசு-
எல்லாம் நீ கொண்ட காதலில்
சுமந்தவளே என்னவளே..!!!
எத்தனை ரணங்கள்
எத்தனை ஏமாற்றங்கள்
அத்தனையும் மறந்து நான்
புன்னகைத்திருப்பது
உன்னாலே..!!!
பாரமாய் நான் இருக்க
உன் விழியோரமாய் எனை சுமந்து
கண்ணீரை துடைத்தவளே..!!!
சிலையான என்னை
சிரிக்க வைத்தவளே
என் உத்தமியே..!!!
உடல் கொண்ட காதல் எல்லாம்
மண்ணாகி போயிருக்க
மனம் தந்த உன் காதல் மணக்குதடி
என் வாழ்வில்..!!!
சின்ன சின்ன சண்டைகள்
சிங்கார சில்மிசங்கள்
மிச்சமே வைக்க முடியாத
உன் அழகை பருகி
அன்பில் உருகி எழுதி திளைக்கின்றேன்
இங்கு ஒரு கிறுக்கள்..!!!
காதலியாய் வந்து
என் ஓர் அன்னையாகி
மரணத்தை கொன்று நீ
ஜனனத்தை கொடுத்த
என் தாயுமானவளே..!!
மறு பிறப்பிலும் நான்
வேதனையில் பிறந்திட
நீயே வந்துவிடு காதலாய்
காயங்கள் ஆற்றி ஆறுதலாய்..!!!
-பிசாசு
ஒளி தந்த பொக்கிஷம்



மனிதம் எங்கே போகின்றது
மங்கை அவளின்
மனம் மறந்து போனது
மானிடம்
ஆடை விழக்கி
அதில் சுகம் தேடும்
ஆண் வர்கம்
வெட்கப்பட வேண்டியது
ஆணாய் பிறந்ததற்கு
வரலாற்றில்
சேலை கொடுத்த கேசவன்
இன்று எங்கே சென்றான்..??
அவனும் செல்பி
எடுத்துக்கொண்டிருந்தானோ
ராதையின் கூடாரத்தில்..???
சுற்றியிருந்தவர் நூறு
ஒரு துளியளவு கூடவா
துனிவுமில்லாது போனது
துணியும் இல்லாது போனது
இவள் தேகத்தை மறைக்க..???
கலியுகம்தானிது
கமராக்கலில் இருந்து
காம ராஜாக்கள்
பிறந்திருப்பதால்..!!!
பிசாசு




கடற்கரை மணலில் -உன்
கால்தடம் தேடித் தேடி என்
கண்களோடு
காதலும் கடலலையாய்
அலைமோதி திரியுதடி
சகியே..!!!
நீ வந்துப்போன
வாசம் மட்டும்
என் சுவாத்தில் கலந்து
உன்னறிமுகம் சொல்ல...
மூடிய கண்கள்
ஒரு நிமிடம்
உனை நினைக்க...
நுரையீரல் வரை
உன் வாசத்தை
ஆழ்ந்து சுவாசிக்கின்றதடி
காதலும்
இதயத்தின் மோதலும்..
ஒரு ஓரமாய்
உன் பாதச்சுவடு
தடம் பதித்துப்போக...
சந்தோஷத்தில்
மண்லெல்லாம் அள்ளி அள்ளி
நெஞ்சோடு பூசிக்கொண்டு
பித்தனாகி தேடுதடி
உன் முகம்தனை
என் காதலும்
உள்ளங்கை உஷ்ணமும்...
ஒளிந்து விளையாடியது போதுமடி
ஓரங்க நாடகம் அரங்கேற்றி
எனை ஒதிக்கி வைத்ததும் போதுடி
என் உறவே
வாழ்வின் முழு நிலவே..
காதலின் பௌர்ணமி நிலவே..
பால் முகம் காட்டிவிடு
என் காதலுக்கு
தாகம் தீர்த்துவிடு..!!!
பிசாசு



Monday, June 11, 2018
உனக்கான பாதையை நீயே முடிவெடு…..
தண்ணீரிக்கு தெரியும்
ஓடு.. விழு..
நீயாக எழு… நிற்காதே..
வானமா எல்லை இல்லை
முடிவில்
உனக்கான பாதையை
-பிசாசு-
Wednesday, May 9, 2018
பரிசு
கவிதைகள் சொல்வேன்
அன்பே..!!!
எச்சில் இல்லா
முத்தங்களாயிரம்
நெற்றியில் வைப்பேன்
உயிரே...!!!
எட்ட நீ
வெட்கப்பட்டு ஓடிப்போகையிலே
எட்டி பிடித்துனை
என் மார்பில் அனைபேன்
கண்ணே...!!!
செல்லமாய் நீ எனை கிள்ளிப்பேச
என்றும் நீ மறவாதிருக்க
பரிசொன்றை
தருவேன்
சகியே....!!!!
-பிசாசு-
Monday, April 23, 2018
வலியினில் உதிரும் வரிகள்
என்னுள் இருக்கும் எதற்க்கும்
உன் அன்பிற்க்கு மட்டும்
முற்றுப்புள்ளியும் இட முடியாது
முதல்புள்ளியும் இட முடியாது
………………………………………………………………
என்னை
கொன்றுவிடும் வார்த்தைகளையும்
வென்றுவிடும் வார்த்தைகளையும்
உன்னால்
அடிக்கடி வெல்வதைவிட
கொல்கின்றாய்
……………………………………………………………….
உன்னை விட முடியாது
என்று அடம்பிடிக்கும்
அன்பை
மீண்டும்
உன் குடும்பத்திற்கு..???
……………………………………………………………
மலையில் இருந்து விழுந்தும்
மரணம் இல்லை எனகென நினைத்தேன்
உன் மனதில் இருந்து விழுந்ததால்
உயிரோடு மரணிக்கின்றேன்
…………………………………………………………..
விட்டுக்கொடுப்பதிலும் ஒருவித
அன்பு சிதைபட்டுக்கிடக்கின்றது
என் காதலை உனக்காய்
உன் காதலை எனக்காய்
நம் காதலை எவருக்காய்..???
………………………………………………………
விடிந்ததொரு பொழுதில்
முடிந்துபோகுமென்று
நம் காதல்- நம் காதல்
முடிந்துபோகும் நிலை வந்தால்
மரணித்துபோவேன்
மறந்தாயோ..???
-பிசாசு-
இதயம்
"இதயம்"
கடிகாரமாய் காட்சியளித்தது
வாழ்க்கை பயணத்தில்
"இதயம்"
அறையாக காட்சியளித்தது
உறவெல்லாம்
கானல்நீரென
உணர்ந்தபோது
"இதயம்"
அனாதையாக காட்சியளித்தது
தனிமைத்தீயில்
எரிந்தபோது
"இதயம்"
உயிர்களற்ற
பாலைவனமாய் காட்சியளித்தது
Friday, April 20, 2018
நெடுந்தூர பயணமதில் நீ

முடியாததொரு
வானமாய் அது என்றும்
நீள வேண்டும்
ஒரு வேளை
அது முடிகின்ற வேளை வந்தால்
உன் மடியிலே- நான்
இறக்க வேண்டும்...!!!
#பிசாசு




சகியே…..
என் ஆயுள் கூடுதடி
உன் உயிரில் கலந்தே
அது நூறுஜென்மம் ஆகுதடி
சகியே…..
என் காதலுக்கு உன் உயிரை கொடுத்தாய்
அது உரு பெற்றதடி
என் கவிதைகளுக்கு உன் ஆயுள் கொடுத்தாய்
அது உயிர் பெற்றதடி
என் கனவுகளுக்கு உன் நிறம் கொடுத்தாய்
இரவுகள் முடியாது தொடறுதடி
என் கண்களுக்கு உன் பார்வை கொடுத்தாய்
உலகமே உன்னால் அழகானதடி
மறுஜென்மம் ஒன்றை தந்தாய்
எத்தனை முறை நான் இறந்தாலும்
என்னோடு இறந்து
எனக்கெனவே நீயும் மறுபடியும்
பிறக்கின்றாய்
#பிசாசு



Wednesday, April 18, 2018
கரையின் காதுகளுக்கு
எட்டியும்
அமைதி நிலவுவது போலொரு
என் அழுகையின் சத்தம்
இதயம் எட்டியும்
மௌனம் கொள்வதேனோ..???
.....................................................................
மௌனங்கள் உடையட்டுமன்பே
வார்த்தைகள் கோர்த்திட மொழியே நீ
வா...!!!
வலிகள் மறையட்டுமன்பே
காயங்கள் ஆற்றிட நிலாவே நீ
வா..!!!
கோபங்கள் தீரட்டுமன்பே
மோகங்கள் உயிர்பெற உயிரே நீ
வா...!!!
பிரிவுகள் கரையட்டுமன்பே
உணர்வுகள் உருபெற சுஜா நீ
வா..!!!
கழுத்தில் தாலி கட்டி #புதுதம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
எப்ப #பார்த்தாலும்இது தானா என்றால்
இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும் #கவனிக்காத போது அவள் கழுத்துக்கு கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்
அப்போது அவள் சொன்னால்
என்ன இது #குழந்தைகள வச்சிக்கிட்டு
என்றால்
சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய #நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன் அப்போது அவள்
சொன்னால்
வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா
என்றால் அவள்
கடைசியாக அவளை என் வீட்டுல்
ஊரார் குளிப்பாட்டி #திருமணபட்டுஉடுத்தி
படுக்கையில் கிடந்தவளை #முத்தமிட்டேன்
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்
இறுதிவரை #நேசியுங்கள்
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல
அவள் வாழ்க்கை துணையாக வந்தவர்
நீ
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...

-
எதை இழந்து தேடினாலும் நீயே கிடைக்க பெறுகிறாய் எது தொலைந்து போனாலும் உன்னாலேயே களவாடப்படுகிறது எவை மறக்கப்படுகிறதோ அவைள் அணைத்...
-
மூச்சுக்கு முன்னூறுதடவை என் பெயர் உச்சரித்தவள் இன்று ஒரு பேச்சுக்கு கூட என் பெயர்க்கொண்டு அழைக்க மறுக்கின்றாள் என்னை மறந்துபோன என் காதலை ம...
-
நீ இல்லாத நாட்கள் வாசமில்லா பூக்களாய் என் நந்தவனம்..!!! வெளிச்சமற்ற விண்மீன்களின் ஊர்வலமாய் எந்தன் வானம்..!!! நீ இல்லாத நாட்கள் உறங்காத கண்...